VIDEO
02.14 - கழுமலம் (சீகாழி) -
( கழுமலம்
அடை நெஞ்சே )
2011-03-21 கழுமலம்
( சீகாழி) ( சீர்காழி )
" கழுமலம்
அடை நெஞ்சே "
--------------------------------
( சந்தக்
கலிவிருத்தம் -
" தனதன
தனதா னா
தனதன தன தானா”
என்ற சந்தம் .
தனதன
என்பது தானன என்றும் வரலாம் .
தனதானா
என்பது தானானா என் றோ
தானதனா என்றோ வரலாம் .)
( சுந்தரர்
தேவாரம் -
7.85.1 - ' வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்து ')
1)
நெடிதுயர்
மலையொத்த செடிவினை அவையெல்லாம்
பொடிபட
வழிவேண்டில் புகலென அடைநெஞ்சே
அடிமலர்
துதியன்பர் அணியென வரிவண்டார்
கடிமலர்ப்
பொழில்சூழும் கழுமல நகர்தானே .
நெடிது
உ யர் மலை ஒ த்த
– பெரிய மலையைப் போன்ற ;
செடி
வினை -
தீவினை ;
பொடிபட
வழி வேண்டில் -
அழியும்
உபாயம் விரும்பினால் ;
அடிமலர்
துதி அ ன்பர்
அணி எ ன –
திருவடித்தாமரையைத்
துதிக்கும் பக்தர்களைப் போல ;
வரி
வண்டு ஆர் கடி மலர்ப் பொழில்
சூழும் -
வரிகளை
உடைய வண்டுகள் ரீங்காரம்
செய்யும் வாச மலர்கள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த ;
கழுமல
நகர்தானே -
திருக்கழுமலம்
என்ற சீகாழிப் பதி .
2)
உயர்வழி
உணராமல் உலகினில் உழல்கின்ற
மயலற
வழிவேண்டில் வழிபட அடைநெஞ்சே
அயலரை
மதிசேர அரவையும் அணிவா னூர்
கயலுகள்
வயல்சூழும் கழுமல நகர்தானே .
மயல்
அற வழி வேண்டில் -
மயக்கம்
தீர ஓர் உபாயத்தை
விரும்பினால் ;
அயல்
அரை மதி சேர
-
பக்கத்தில்
பிறைச்சந்திரன் பொருந்துமாறு ;
அரவையும்
அணிவா ன்
ஊர் -
பாம்பையும்
அணிகின்ற சிவபெருமான் உறையும்
ஊரான ;
கயல்
உகள் வயல் சூழும் -
கயல்
மீன்கள் குதிக்கி ன் ற
வயல் சூழ்ந்த ;
கழுமல
நகர்தானே -
திருக்கழுமலம்
என்ற சீகாழிப் பதி .
3)
புவிமிசை
மகிழ்வோடு புகழுற அடைநெஞ்சே
செவியினில்
ஒருதோடு திகழ்பவன் இவனென்று
சவிமிகு
தமிழ்பாடு கவுணியர் பதியான
கவினுறு
பொழில்சூழும் கழுமல நகர்தானே .
செவியினில்
ஒரு தோடு திகழ்பவன் இவன் என்று
-
( சம்பந்தர்
தேவாரம் -
1.1.1 - “ தோடுடைய
செவியன் … ..
பெம்மான்
இவன்அன்றே ");
சவி
-
ஒளி ;
அழகு ;
கவுணியர்
-
திருஞான
சம்பந்தர் ;
கவின்
-
அழகு ;
4)
ஒலிமிகு
கடல்போல வலிமிகு வினையெல்லாம்
வலிதர
வருமுன்னே வழிபட அடைநெஞ்சே
நலிவறு
சிவன்நாமம் நவில்கிற அடியார்சேர்
கலிமலி
விழவாரும் கழுமல நகர்தானே .
வலி
-
1) வன்மை
(Strength,
power); 2) துன்பம்
/
நோவு ;
நலிவு
அறு -
துன்பத்தைத்
தீர்க்கும் ;
கலி
மலி விழவு ஆரும் -
ஆரவாரம்
மிகுந்த விழாக்கள் நிறைந்த ;
5)
குறைகெட
வழிவேண்டில் இறைதொழ அடைநெஞ்சே
மறைவிரி
குருவாகி வருபவன் உமைகேள்வன்
அறைகடல்
உமிழ்நஞ்சும் அழகிய மணியாகும்
கறைமிட
றுடையானூர் கழுமல நகர்தானே .
இறை
தொழ – இறைவனைத்
தொழுவதற்கு ;
மறை
விரி குரு -
வேதப்பொருளை
விளக்கும் குரு -
தட்சிணாமூர்த்தி ;
உமைகேள்வன்
-
உமாபதி ;
அறைதல்
-
ஒலித்தல் ;
மோதுதல் ;
கறைமிடறு
உடையான் -
நீலகண்டன் ;
6)
முனைவினை
அவைமூடி முடிவில தெனநாளும்
இனல்விளை
வதுதீர இனியடை மடநெஞ்சே
புனைவென
முடிமீது புனலொடு மதிசூடி
கனவிடை
உடையானூர் கழுமல நகர்தானே .
முனை ,
இனல்
-
முன்னை ,
இன்னல்
-
இடைக்குறையாக
வந்தன ;
இனி
-
இப்பொழுது
(Now,
immediately);
புனைவு
-
அலங்காரம் ;
அழகு ;
முடிமீது
புனலொடு மதிசூடி -
சென்னிமேல்
கங்கையையும் சந்திரனையும்
அணிந்தவன் ;
கன
விடை -
பெரிய
எருது ;
7)
மினலன
புவிவாழ்வில் மேதியன் வரவாலே
அனலிடை
அடையாமுன் அடிதொழ அடைநெஞ்சே
புனலடை
சடையீசன் பூங்கணை மதன்வேவக்
கனலுமிழ்
விழியானூர் கழுமல நகர்தானே .
மினல்
அன -
மின்னல்
அன்ன -
மின்னலைப்
போன்ற -
நிலையற்ற ;
மேதியன்
-
இயமன்
(Yama,
as riding a buffalo); ( மேதி
-
எருமை );
அனலிடை
அடையாமுன் -
தீயிற்
புகுவதன் முன்னமே ;
புனல்
அடை சடை ஈசன்
-
கங்கை
அடைந்த சடையை உடைய ஈசன் /
கங்கையை
அடைத்த சடையை உடைய ஈசன் ;
பூங்கணை
மதன் -
மலர்க்கணை
ஏவும் மன்மதன் ;
8) சதிபுரி
புலனைந்தின் தளைகளும் இடரேசெய்
பொதிவினை
அவைதீர்ந்து பொலிவுற அடைநெஞ்சே
எதிரிலன்
வலியார்தோள் இருபதை நெரிசெய்து
கதிர்மதி
அணிவானூர் கழுமல நகர்தானே .
சதிபுரி
புலன் ஐந்தின் தளைகளும் -
வஞ்சப்
புலன்கள் ஐந்தின் கட்டுகளும் ;
இடரேசெய்
பொதிவினை -
துன்பத்தையே
நல்கும் வினைப்பொதி ;
( பொதி
-
மூட்டை );
அவை
தீர்ந்து பொலிவுற அடை நெஞ்சே
-
அவையெல்லாம்
நீங்கி இன்புற ,
மனமே
நீ அடைவாயாக ;
எதிர்
இலன் வலி ஆர் தோள் இருபதை
நெரிசெய்து – போர் இல்லாதவனான
இராவணனது வலிமை மிக்க இருபது
புஜங்களையும் நசுக்கி ;
( எதிர்
-
போர் );
( சம்பந்தர்
தேவாரம் -
1.116.8 - " செருவி
லரக்கனைச் சீரி லடர்த்தருள்
செய்தவரே "
- செரு
இல் அரக்கன் -
போரில்லாத
இராவணன் );
கதிர்மதி
அணிவான் ஊர் கழுமல நகர்தானே
-
கதிர்கள்
வீசும் சந்திரனை அணிந்த சிவன்
உறையும் ஊரான திருக்கழுமலமே ;
9)
உலகினில்
உழலாமல் நிலைபெற அடைநெஞ்சே
மலரவன்
அரிநேட வளரெரி எனவான
அலகிலன்
அரவாரம் அணியரன் ஒருகையில்
கலைதரி
பெருமானூர் கழுமல நகர்தானே .
மலரவன்
அரி நேட -
பிரமனும்
திருமாலும் தேடுமாறு ;
வள ர்
எ ரி என ஆ ன
– வளரும் தீ என்று ஆன ;
அலகு
இலன் -
அளவு
இல்லாதவன் ;
அரவு
ஆரம் அணி அரன் -
பாம்பு
மாலை அணியும் ஹரன் ;
ஒரு
கையில் கையில் கலை தரி
பெருமான் -
ஒரு
கரத்தில் மானை ஏந்தும்
பெருமான்;
10)
உணர்விலர்
ஒழிவின்றி ஒழிமினும் வழியென்பர்
குணமிலர்
அவர்சொல்லும் கூற்றுகள்
பொருளல்ல
இணையடி
தொழுதேவர் இடர்கெட மதில்மூன்றோர்
கணைகொடு
சுடுவானூர் கழுமல நகர்தானே .
உணர்வு
இலர்
-
அறிவு
இல்லாதவர் ;
தெளிவு
இல்லாதவர் ;
ஒழிவின்றி
-
ஓயாமல் ;
எப்போதும் ;
ஒழிமினும்
-
ஒழிமின்
உம் /
ஒழிமின்
நும் ;
" ஒழிமின்
உம் வழி "
எ ன்பர்
-
" உங்கள்
நெறியை விட்டு நீங்குங்கள்”
என்று சொல்வார்கள் ;
குணமிலர்
அவர் சொல்லும் கூற்றுகள்
பொருள் அல்ல
– குணமிலிகளான அவர்கள் சொல்லும்
வார்த்தைகளில் பொருள் இல்லை ;
அவற்றை
மதிக்கவேண்டா ;
இணையடி
தொழு தேவர் இடர் கெட –
அடியிணையைத் தொழுத
தேவர்களின் துன்பம் நீங்கும்படி ;
மதில்
மூன்று ஓர் கணைகொடு சுடுவான்
ஊர் -
முப்புரங்களை
ஓர் அம்பால் எரித்தவன் உறையும்
ஊர் ;
கழுமல
நகர்தானே -
திருக்கழுமலம்
( சீகாழி );
11)
அயர்வற
வழிவேண்டில் அடிதொழ அடைநெஞ்சே
பயிர்வளர்
புனல்போல்நம் உயிர்வளர்
பரமேட்டி
மயிலன
மடமங்கை ஒருபுறம் மகிழ்எந்தை
கயிலைமன்
னரனாரூர் கழுமல
நகர்தானே .
அயர்வு
-
சோர்வு ;
பரமேட்டி
-
பரம்பொருள் ;
தனக்குமேல்
ஒன்றில்லாத உயர்ந்த
இடத்திலிருப்பவன் ;
பயிர்
வளர் புனல்போல் நம் உயிர்
வளர் பரமேட்டி -
பயிரைக்
காக்கும் நீர் போல் ,
நம்
உயிரைக் காக்கும் பரம்பொருள் ;
மயில்
அன மட மங்கை ஒரு புறம் மகிழ்
எந்தை -
மயில்போன்ற
அழகிய பார்வதியை ஒரு
பங்கில் விரும்பும் எம்
தந்தை ;;
கயிலை
மன்னு அரனார் ஊர்
-
கயிலாயத்தில்
வீற்றிருக்கும் சிவபெருமான்
உறையும் ஊர் ;
(' கயிலை
மன் அர னார் '
- ' கயிலை
இறைவன் அரன் '
என்றும்
பொருள்படும் );
கழுமல
நகர்தானே -
திருக்கழுமலம்
( சீகாழி );
அன்புடன் ,
வி .
சுப்பிரமணியன்
--------------
--------------
No comments:
Post a Comment