சிவன் பாமாலை - பதிகம், திருப்புகழ், சிலேடை - by - வி. சுப்பிரமணியன்
Devotional Tamil Poetry on Siva - Padhigams by V. Subramanian
"சிவசிவ என்றிடத் தீவினை மாளும்"
8)
--- ("கருவிளம்
தேமா கருவிளம் தேமா"
என்ற
அரையடி வாய்பாடு)
---
கனைகடல்
போலச் சினஅலை வீசக் ..
கனவினை
மெய்யாய் நினைவத னாலே வினைபல
செய்து தினம்இழி கின்ற ..
விதியினை
மாற்றிக் கதிபெற நெஞ்சே, அனையொடு
தந்தை எனவரு கின்ற ..
அரும்பொருள்
தன்னை,
இருபது
கையான் தனைவிர
லாலே முனம்நெரி செய்த ..
தலைவனை
நாளும் மலரொடு போற்றே.
கனை
கடல்-
ஒலிக்கின்ற
கடல்;
சின
அலை-
கோப
அலைகள்;
அனை-
அன்னை
என்பதன் இடைக்குறை விகாரம்;
இருபது
கையான் தனை-
இராவணனை;
முனம்
நெரி செய்த – முன்னர் நசுக்கிய;
9) சரிவினை
நல்கும் புரிவினை தீர்ந்து ..
தகவொடு
வாழும் வகையிது கேளாய்; திரிபுரம்
மூன்றும் எரிகொளு மாறு ..
சிறுநகை
செய்த அறுமுகன் தாதை, கரியுரி
போர்த்த விரிசடை அண்ணல், ..
கழலிணை
தேடி உழல்அரி காணா எரியென
நீண்ட அரியவன் தன்னை ..
எழில்மலர்
கொண்டு வழிபடு நெஞ்சே.
சரிவு-
வீழ்ச்சி;
புரிவினை-
வினைத்தொகை
-
புரிந்த
வினைகள்;
தகவு-
பெருமை;
தகுதி;
வகை-
உபாயம்;
திரி
புரம்-
வினைத்தொகை
-
திரிந்த
புரங்கள்;
கரி
உரி-
யானைத்தோல்;
10)
--- ("கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா"
என்ற
அரையடி வாய்பாடு)
---
தெய்வமும்
தெளியார்,
வைவதும்
தவிரார், ..
செய்தவம்
எனவே பொய்யுரை புரிவார், உய்வழி
உணராக் கைதவர் அவரை ..
உற்றவர்
எனவே கற்றவர் கருதார்; மெய்வழி
அறிவோர் கைதொழும் பெருமான், ..
வெண்மதி
அணியும் பெண்ணிணை வடிவன், செய்யவன்,
சடையன்
பெய்கழல் புகழைச் ..
செப்பிடு
மனமே;
தப்புதல்
எளிதே.
தெளிதல்-
அறிதல்;
வைவது-
திட்டுவது;
இகழ்ந்து
பேசுவது;
செய்தவம்-
செய்யும்
தவம்;
புரிதல்-
செய்தல்;
விரும்புதல்;
உய்வழி-
உய்யும்
உபாயம்;
கைதவர்-
வஞ்சகர்;
பெண்
இணை வடிவன்-
பார்வதியோடு
சேர்ந்து இருக்கும்
அர்த்தநாரீஸ்வரன்;
செய்யவன்-
சிவந்த
திருமேனி உடையவன்;
பெய்கழல்-
கட்டப்பட்ட
கழலை அணிந்த திருவடி;
(பெய்தல்
-
கட்டுதல்);
தப்புதல்-
உய்தல்;
11) இன்னலும்
இடரும் மன்னியிவ் வுலகில் ..
எய்ப்பினைத்
தினமும் துய்க்கிற மனமே; உன்னிலை
இதுபோய் நன்னிலை பெறவே ..
உள்ளது
வழியொன் றுள்ளுதல் புரிவாய்; கன்னலும்
அமுதும் அன்னவன்,
அரிய ..
கற்பகக்
கனிபோல் அற்புதன்,
உலகின் முன்னவன்,
முடிவின்
பின்னவன்,
உமைகோன், ..
முக்கணன்
பெயராம் அக்கரம் அஞ்சே.
மன்னுதல்-
மிகுதல்;
எய்ப்பு-
இளைப்பு
(Weariness);
துய்த்தல்-
அனுபவித்தல்;
உன்னிலை-
உன்
நிலை;
நன்னிலை-
நல்
நிலை;
உள்ளுதல்-
எண்ணுதல்;
கன்னல்-
கரும்பு;
அன்னவன்-
போன்றவன்;
அக்கரம்
அஞ்சு-
பஞ்சாட்சரம்;
முடிவின்
பின்னவன்-
எல்லாம்
முடிந்தபின்னும் அழிவின்றி
உள்ளவன்;
அன்புடன், வி.
சுப்பிரமணியன்
பிற்குறிப்பு: இப்பதிகம்
தாஅவண்ணம் அமைந்துள்ள
பதிகம்.
சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில்
(Tamil
Lexicon – by Madras University) காணும்
விளக்கம்:
தாஅவண்ணம்:
(Pros.) Rhythm effected by
making the third or the fourth foot rhyme with the first;
இடையிட்டுவரும்
எதுகையுடைய சந்தம் (தொல்.
பொ.
527.)
இலக்கணக்
குறிப்பு:
தொல்காப்பியம்
-
பொருளதிகாரம்
-
இளம்பூரணர்
உரை:
"தாஅ
வண்ணம் இடையிட்டு வந்த எதுகைத்
தாகும்"
(என்-னின்)
தாவண்ணமாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
தாஅ
வண்ணமாவது இடையிட்டெதுகையான்
வரும் என்றவாறு.
அடியிடையிட்டு
வருவது தொடை வேற்றுமையாவதல்லது
வண்ண வேற்றுமையாகாதென்பது
.
ஒரு
செய்யுளுட் பலஅடி வந்தால்
அவையெல்லாம் இடையிட்டுத்
தொடுத்தல் வேண்டுமோ எனின்
வேண்டா.
அவை
வந்தவழித் தாஅ வண்ணம் எனப்படும்
என்பது.
(தொல்,பொருள்.527.பேரா.)
–-----
சிவபெருமானை
மனத்தால் நினைந்து போற்ற
எக்காலத்தும் அழியாத புகழ்
வந்து சேரும்.
துன்பம்
வந்து சேர நினையாது.
அத்துன்பத்திற்குக்
காரணமான வினைகளும் நீங்கும்.);
7) அரவணை
யானும் அலரவன் தானும் அரண்டடி
போற்ற அழலுரு ஆன அரன்தனை
அண்ணா மலையனை வாழ்த்த வரம்மிக
ஈவான் இறைமற வாதே.
அரவு
அணையான்-
பாம்புப்
படுக்கை மேல் பள்ளிகொள்ளும்
விஷ்ணு;
அலரவன்-
தாமரை
மலர் மேல் இருக்கும் பிரமன்;
அரள்தல்-
துணுக்குறுதல்
(to
be startled, struck with fear, shocked);
அழல்
உரு -
சோதி
வடிவம்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.47.9 -
"மாலினோடு
மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப்
பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
....");
8) அரக்கனை
அன்று நெரித்தருள் வோனைப் பரமெவர்
என்று முரணியோர் காணா வரையிலா
அண்ணா மலையனை வாழ்த்த இரங்குவான்
நெஞ்சே இறைமற வாதே.
அரக்கன்-
இராவணன்;
முரணுதல்
-
மாறுபடுதல்
(to
be opposed; to disagree, differ; to be discordant; to be in
contrast);
பரம்
எவர் என்று முரணியோர்=
தங்கள்
இருவருள் எவர் பரம்பொருள்
என்று வாதிட்ட திருமால்,
பிரமன்;