2010-01-28
S.112 - சிவன்
- திருமால்
- சிலேடை
------------------
வானரர்
வாழ்த்தும் அரவணைநீர் மையரவர்
கானலர்
சூடுவர்அஞ் சக்கரர் -
மானடிப்பார்
காத்தருள்வார்
வெற்புவில் கையேந்தி நாகமதி
சேர்த்தவர்நா
ராயணர் செப்பு.
சொற்பொருள்:
வானரர்
- 1. வான்
நரர்; / 2. வானரர்;
வான்
- தேவர்
(இடவாகுபெயர்);
அணைதல்
- 1. பொருந்துதல்;
/ 2. படுத்தல்
(To lie down);
அணை
- மெத்தை;
படுக்கை;
அரவணை
நீர்மையரவர் - 1. அரவு
அணை (வினைத்தொகை)
நீர்
மையர்; அவர்
/ 2. அரவு
அணை (படுக்கை)
நீர்மையர்;
அவர்;
நீர்
- கடல்;
மை
- 1. கருநிறம்;
2. விஷம்;
நீர்மை
- தன்மை;
சிறந்த
குணம்;
நீர்மையர்
- 1. கடல்
விடத்தர்; (நீர்
- கடல்;
மை
- விஷம்);
/ 2. தன்மையர்;
கடல்
நடுவில் இருப்பவர்;
(மையம்
- நடு);
(நாராயணன்
- நீரை
இடமாக உடையவன் -
திருமால்);
கான்
- வாசனை;
அலர்
- பூ;
நலர்
- நல்லர்
(நல்லவர்கள்)
- இடைக்குறை;
கானலர்
- 1. கான்
அலர் சூடுவர் (கான்
+ அலர்)
/ 2. கால்,
ந[ல்]லர்
சூடுவர் (கால்
+ நலர்);
அம்
- அழகு;
அக்கரம்
- எழுத்து;
அஞ்சக்கரர்
- 1. அஞ்சு
அக்கரர் / 2. அம்
சக்கரர்;
மான்
- 1. பெருமான்;
பெரியோன்
(Great person or being); / 2. மான்
என்ற விலங்கு;
மால்
- திருமால்;
கருமை;
பெருமை;
நடித்தல்
- 1. கூத்தாடுதல்;
/ 2. பாசாங்கு
செய்தல்;
மானடிப்பார்
- 1. மான்
நடிப்பார் (பெருமான்;
நாட்டியம்
ஆடுவார்); /2. மான்
அடிப்பார் (இராமனாய்
மான்-வேடத்தில்
வந்த மாரீசனைத் தாக்குவார்);
3. மால்
நடிப்பார் (கிருஷ்ணனாய்
மிகப் பாசாங்கு செய்வார்);
வெற்பு
- மலை;
வெற்புவில்
- 1. மேருமலை
ஆகிய வில்; 2. வெற்பும்
வில்லும் - உம்மைத்தொகை.
திருமால்:
வானரர்
வாழ்த்தும், அரவணை
நீர்மையர் - (இராமனாக
வந்தபோது) வானரர்கள்
போற்றுகின்ற, (கடல்
நடுவே) நாகப்-படுக்கை
உடையவர்;
அவர்
கால் நலர் சூடுவர் -
அவர்
திருவடியை நல்லவர்கள் (தங்கள்
உச்சியில்) சூடுவார்கள்;
அம்
சக்கரர் - அழகிய
சக்கராயுதம் உடையவர்;
மான்
அடிப்பார் (--அல்லது--
மால்
நடிப்பார்) -
இராமாவதாரத்தில்
மானாக வந்த மாரீசனை அம்பால்
எய்தவர்; (--அல்லது--
கிருஷ்ணாவதாரத்தில்
மிகப் பாசாங்கு செய்தவர்);
காத்தருள்வார்
வெற்பு, வில்
கை ஏந்தி - கிருஷ்ணனாய்
மலையைக் குடையாக உயர்த்திப்
பிடித்தும், இராமனாய்
வில்லைக் கையில் ஏந்தியும்
காத்தவர்;
நாராயணர்
செப்பு - திருமால்
என்று சொல்;
சிவன்:
வான்
நரர் வாழ்த்தும்,
அரவு
அணை, நீர்மையர்
(& நீர்-மையர்)
- வானவர்களும்
மனிதர்களும் வணங்குகின்ற,
பாம்புகள்
பொருந்தும் திருமேனியர்;
கடல்விஷத்தை
உண்டு அணிந்தவர்;
(நீர்மையர்
- இச்சொல்
இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு
வந்தது);
அவர்
கான்-அலர்
சூடுவர் - அவர்
வாசமலர்களை அணிவார்;
அஞ்சு-அக்கரர்
- திருவைந்தெழுத்தானவர்;
நமச்சிவாய
என்ற திருநாமம் உடையவர்;
மான்,
நடிப்பார்
- பெருமான்,
திருநடம்
செய்வார்;
காத்தருள்வார்
வெற்புவில் கை ஏந்தி -
(முப்புரம்
எரித்தபொழுது)
மேருமலையாகிய
வில்லைக் கையில் ஏந்திக்
காத்தருளியவர்;
நாகம்
மதி சேர்த்தவர்
செப்பு - பாம்பையும்
சந்திரனையும் (திருமுடிமேல்)
ஒன்றாகச்
சேர்த்தவரான சிவபெருமான்
என்று சொல்;
வி.
சுப்பிரமணியன்
-------------
-------------