2019-05-19
P.470 - பொது
------------------
(ஈரடிமேல்
வைப்பு ;
தானான
தானான தானா - தான
.. தானான
தானான தானான தானா -
சந்தம்)
(அப்பய்ய
தீக்ஷிதரின் மார்கபந்து
ஸ்தோத்திர அமைப்பில்)
முற்குறிப்புகள்:
படிப்போர்
வசதி கருதிச், சந்தம்
கெடாத சில இடங்களில் சீர்கள்
/ சொற்கள்
பிரித்துக் காட்டப்பெற்றுள்ளன.
சந்தம்
கெடாமையை வாசித்து உணர்க.
முதற்பாடல்
மட்டும் சீர் பிரித்தும்
பதம் பிரித்தும் காட்டப்பட்டுள்ளது.
இப்பாடலில்,
ஒவ்வோர்
அடியிலும் தானா என்ற சந்தம்
அமையும் இடங்களில் (=
3-ஆம்
சீர், 8-ஆம்
சீர்) நிறுத்திப்
பாடப்பெறும். ஒவ்வோர்
அடியிலும் அந்த இடங்களிடையே
இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.
மேல்வைப்பாக
உள்ள அடியும் அதே சந்த-அமைப்பே.
மேல்வைப்பாக
உள்ள அடியின் பொருள் முதற்பாடலில்
தரப்பட்டுள்ளது.
எல்லாப்
பாடல்களிலும் அதே மேல்வைப்பே.
* (ம்)
- புணர்ச்சியில்
மகர ஒற்றுக் கெடும் இடம்.
1)
வன்னஞ்சை
வானுய்ய உண்டான் -
கோல
.. மாதைத்த
னாகத்தி லோர்கூறு கொண்டான்
முன்னங்கொ
டுங்கூற்று தைத்தான் -
அந்த
.. முக்கண்ண
னாற்றைச்ச டைச்சுற்ற வைத்தான்.
.. .. .. மாதேவ
னாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பதம்
பிரித்து:
வன்-நஞ்சை
வான் உய்ய உண்டான்;
- கோல
.. மாதைத்
தன் ஆகத்தில் ஓர் கூறு கொண்டான்;
முன்னம்
கொடும்-கூற்று
உதைத்தான்; - அந்த
.. முக்கண்ணன்
ஆற்றைச் சடைச்-சுற்ற
வைத்தான்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே, - சொல்லு,
.. .. .. ..
வந்திப்பவர்க்கு
உண்டு பேரின்ப வாழ்வே.
வன்-நஞ்சை
வான் உய்ய உண்டான் -
கொடிய
ஆலகாலத்தை வானோர்கள் உய்ய
உண்டருளியவன்;
கோல
மாதைத் தன் ஆகத்தில் ஓர்
கூறு கொண்டான் -
அழகிய
உமையைத் தன் திருமேனியில்
ஒரு கூறாகக் கொண்டவன்;
முன்னம்
கொடுங்-கூற்று
உதைத்தான் - முன்பு
கொடிய காலனை உதைத்தவன்;
அந்த
முக்கண்ணன் ஆற்றைச்
சடைச்-சுற்ற
வைத்தான் -
அந்த
நெற்றிக்கண்ணன் கங்கையைச்
சடையில் திரிய வைத்தவன்;
மாதேவன்
நாமத்தை நாவே,
சொல்லு
- மகாதேவன்
திருநாமத்தை நாக்கே சொல்வாயாக;
வந்திப்பவர்க்கு
உண்டு பேரின்ப வாழ்வே -
அவனைத்
துதிப்பவர்களுக்குப் பேரின்ப
வாழ்வு கிட்டும்;
2)
ஆதார(ம்)
நீயென்று
போற்றும் - தொண்டர்
.. ஆனாத
பேரின்ப வானத்தில் ஏற்றும்
போதாரு(ம்)
நீள்வேணி
ஈசன் - ஆனை
.. போலேறு
தானேறு(ம்)
மாமங்கை
நேசன்
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
"ஆதாரம்
நீ" என்று
போற்றும் தொண்டர் ஆனாத
பேரின்ப வானத்தில் ஏற்றும்
- "நீயே
என் பற்றுக்கோடு"
என்று
வணங்கும் தொண்டர்களை நீங்காத
பேரின்ப வானுலகில் (சிவலோகத்தில்)
ஏற்றுவான்
(/ ஏற்றுகின்ற);
(ஆதாரம்
- பற்றுக்கோடு);
(ஆனுதல்
- நீங்குதல்);
(பெரியபுராணம்
- 12.8.57 - "செஞ்சடையவர்
பொற்றாளில் ஆனாத காதல் அன்பர்
எறிபத்தர்");
போது
ஆரு(ம்)
நீள்-வேணி
ஈசன் - (கொன்றை
முதலிய பல) மலர்களை
அணிந்த நீளும் சடையை உடைய
ஈசன்; (போது
- பூ);
(ஆர்தல்
- அணிதல்;
நிறைதல்;
பொருந்துதல்);
(வேணி
- சடை);
ஆனை
போல் ஏறுதான்
ஏறு(ம்),
மா-மங்கை
நேசன் - யானை
போல இடபத்தை வாகனமாக (விரும்பி)
ஏறுகின்ற,
அழகிய
உமைக்கு அன்பன்; (ஏறு
- இடபம்);
(மா
- அழகிய);
(* எல்லார்க்கும்
தலைவனான ஈசன், யானையை
வாகனமாகக் கொள்ளாமல்,
எருதை
வாகனமாக மகிழ்ந்தவன்);
(ஈசன்னானை
- ஈசன்
ஆனை; சந்தம்
கருதி னகர ஒற்று விரித்தல்
விகாரம்);
3)
வம்பார்
சரத்தைத் தொடுத்தான் -
அந்த
.. வம்பன்றன்
ஆகத்தை நோக்காற் கெடுத்தான்
வெம்போரில்
ஓர்வாளி தொட்டான் -
அன்று
..
மேவார்
புரஞ்சாம்பல் ஆமாறு சுட்டான்
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
வம்பு
ஆர் சரத்தைத் தொடுத்தான்
அந்த வம்பன்-தன்
ஆகத்தை நோக்கால் கெடுத்தான்
- மணம்
மிகுந்த கணையைத் தொடுத்தவனான
அந்தக் கலகம் செய்யும் மன்மதனது
உடலை நெற்றிக்கண்ணால் நோக்கிச்
சாம்பலாக்கியவன்;
(வம்பு
- வாசனை);
(வம்பன்
- துஷ்டன்);
வெம்-போரில்
ஓர் வாளி தொட்டான்
- கொடிய
போரில் ஒரு கணையை எய்தவன்;
(வாளி
- கணை);
அன்று
மேவார் புரம் சாம்பல் ஆமாறு
சுட்டான்
-
அன்று,
பகைத்த
அசுரர்களது முப்புரங்களும்
சாம்பலாகும்படி எரித்தவன்;
(மேவார்
- பகைவர்);
4)
வானஞ்சு
மாநஞ்சை ஆர்ந்தான் -
நாக(ம்)
.. மார்பேற
ஓர்வெள்ளை ஏறேறி ஊர்ந்தான்
ஆனஞ்சின்
ஆடல் மகிழ்ந்தான் -
மொந்தை
.. ஆர்த்துக்
கணஞ்சூழ நட்டம் புரிந்தான்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பதம்
பிரித்து:
வான்
அஞ்சு மா நஞ்சை ஆர்ந்தான் -
நாகம்
.. மார்பு
ஏற, ஓர்
வெள்ளை ஏறு ஏறி ஊர்ந்தான்;
ஆன்-அஞ்சின்
ஆடல் மகிழ்ந்தான் -
மொந்தை
.. ஆர்த்துக்
கணம் சூழ நட்டம் புரிந்தான்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. ..
வந்திப்பவர்க்கு
உண்டு பேரின்ப வாழ்வே.
வான்
அஞ்சு மா நஞ்சை ஆர்ந்தான்
- தேவர்கள்
அஞ்சிய கொடிய விடத்தை உண்டவன்;
(ஆர்தல்
- உண்தல்);
நாகம்
மார்பு ஏற,
ஓர்
வெள்ளை ஏறு ஏறி ஊர்ந்தான்
- மார்பில்
பாம்பை மாலையாகப் பூண்டு,
ஒரு
வெள்ளை எருதை வாகனமாக ஏறியவன்;
ஆன்-அஞ்சின்
ஆடல் மகிழ்ந்தான் -
பஞ்சகவ்வியத்தால்
அபிஷேகம் விரும்பியவன்;
(ஆடல்
- ஆடுதல்
- அபிஷேகம்
பெறுதல்);
மொந்தை
ஆர்த்துக் கணம் சூழ நட்டம்
புரிந்தான் - மொந்தை
முதலிய வாத்தியங்களை வாசித்துப்
பூதகணங்கள் சூழத் திருநடம்
செய்பவன்; (மொந்தை
- ஒருவகைப்
பறை); (நட்டம்
- கூத்து);
5)
வெற்பொன்றை
வில்லாக்க வல்லான் -
வெந்த
.. வெண்ணீறு
சேர்மார்பன் ஒப்பொன்றும்
இல்லான்
நெற்குன்று
தோழர்க்க ளித்தான் -
அன்பு
.. நீங்காத
நெஞ்சத்தில் என்றும்க ளித்தான்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
வெற்பு
ஒன்றை வில் ஆக்க வல்லான் -
மேருமலையை
வில்லாக வளைத்தவன்;
வெந்த
வெண்ணீறு சேர் மார்பன் -
சுட்ட
திருநீற்றை மார்பில் பூசியவன்;
ஒப்பு
ஒன்றும் இல்லான் -
ஒப்பற்றவன்;
நெற்குன்று
தோழர்க்கு அளித்தான் -
தோழரான
சுந்தரருக்கு நெல்மலையை
அளித்தவன்; (* சுந்தரமூர்த்தி
நாயனாருக்குக் குண்டையூரில்
நெல்மலை அளித்த வரலாற்றைப்
பெரியபுராணத்தில் காண்க);
அன்பு
நீங்காத நெஞ்சத்தில் என்றும்
களித்தான் - பக்தி
பொங்கும் மனத்தில் மகிழ்ந்து
உறைபவன்;
6)
கல்லாலு(ம்)
மொத்துண்ட
ஈசன் - எந்தை
.. கல்லாலை
நாடும் பரன்பாவ நாசன்
அல்லார்ந்த
கண்டன் கபாலன் - கங்கை
.. ஆற்றைப்
புனைந்தான் அகன்மார்பில்
நூலன்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
கல்லாலு(ம்)
மொத்துண்ட
ஈசன் - கல்லாலும்
அடியுண்ட ஈசன்; (*
சாக்கிய
நாயனார் கல்லெறிந்து வழிபாடு
செய்ததைச் சுட்டியது);
(கல்லாலும்
- உம்
- எச்சவும்மை;
மதுரையில்
பாண்டியன் பிரம்பால்
மொத்துண்டதையும் குறிப்பால்
சுட்டியது);
எந்தை
- எம்
தந்தை;
கல்லாலை
நாடும் பரன் -
(சனகாதியர்க்கு
உபதேசிக்கக்)
கல்லாலமரத்தின்கீழ்
விரும்பி வீற்றிருக்கும்
பரமன்;
பாவநாசன்
- (அடியார்களின்)
தீவினையை
அழிப்பவன்;
அல்
ஆர்ந்த கண்டன் - கரிய
கண்டன்; (அல்
- இருள்);
கபாலன்
- கையில்
மண்டையோட்டை ஏந்தியவன்;
மண்டையோட்டு
மாலை அணிந்தவன்;
கங்கை-ஆற்றைப்
புனைந்தான் - சடையில்
கங்கையை அணிந்தவன்;
அகன்-மார்பில்
நூலன் - விசாலமான
மார்பில் பூணூல் அணிந்தவன்;
7)
வெண்டிங்கள்
நீர்சூடு தேவன் - மேரு
.. வில்லேந்தி
நால்வேத ஆறங்க நாவன்
கண்டத்தில்
ஆலங் கரந்தான் - ஓடு
.. கையேந்தி
ஏறேறி வந்தூண் இரந்தான்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
வெண்-திங்கள்
நீர் சூடு தேவன் -
வெண்பிறையையும்
கங்கையையும் சூடிய தேவன்;
மேரு-வில்
ஏந்தி - மேருமலையை
வில்லாக ஏந்தியவன்;
(ஏந்தி
- ஏந்தியவன்);
நால்வேத
ஆறங்க நாவன் -
நால்வேதத்தையும்
ஆறங்கத்தையும் பாடியருளியவன்;
கண்டத்தில்
ஆலம் கரந்தான் -
ஆலகாலத்தை
ஒளித்த நீலகண்டன்;
ஓடு
கையேந்தி ஏறு ஏறி வந்து ஊண்
இரந்தான் - கையில்
கபாலத்தை ஏந்தி,
இடபவாகனத்தில்
ஏறி வந்து பிச்சை ஏற்பவன்;
(ஊண்
- பிச்சை);
8)
ஓடிப்பொ
ருப்பன்றெ டுத்தான் -
கத்த
.. ஊன்றித்
தொழச்செய்து நாமங் கொடுத்தான்
பாடிப்
பணிந்தார்க்கு நல்லான் -
மீண்டு
.. பார்மீது
வாராமை தந்தாள வல்லான்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
ஓடிப்
பொருப்பு அன்று எடுத்தான்
கத்த ஊன்றித் தொழச்செய்து
நாமம் கொடுத்தான் -
கோபத்தோடு
ஓடிப்போய்க் கயிலைமலையை
பெயர்த்த தசமுகன் கத்தி
அழும்படி திருப்பாதவிரலை
ஊன்றி அவனை நசுக்கி,
அவன்
மனம் திருந்தி தன்னைத்
துதிக்கச்செய்து,
அவனுக்கு
இராவணன் என்ற பெயரைக் கொடுத்தவன்;
(பொருப்பு
- மலை);
பாடிப்
பணிந்தார்க்கு நல்லான் -
பாடி
வணங்கும் பக்தர்களுக்கு
நன்மை செய்பவன்;
மீண்டு
பார்மீது வாராமை தந்து ஆள
வல்லான் - அத்தகைய
அடியார்கள் உலகில் திரும்பவும்
பிறவி அடையாதபடி அவர்களுக்குப்
பேரின்பம் தந்து அவர்களை
ஆட்கொள்பவன்;
9)
மாலான
மாலோடு வேதன் - தேடி
.. வாயார
வந்தித்த தீவண்ண நாதன்
வேலாயு
தன்போற்று பாதன் -
கங்கை
.. வெள்ளஞ்
சடைப்பாய்ந்த தோடார்ந்த
காதன்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
மால்-ஆன
மாலோடு வேதன் தேடி
வாயார வந்தித்த தீவண்ண
நாதன் - மதிமயக்கம்
உடையவர்களான திருமாலும்
பிரமனும் அடிமுடி தேடிக்
காணாமல் போற்றி வணங்கிய
ஜோதி-வடிவினனான
தலைவன்; (மால்
- அறியாமை;
ஆணவம்);
(வேதன்
- பிரமன்);
வேலாயுதன்
போற்று பாதன் - வேலை
ஏந்தும் முருகனால் வழிபடப்படும்
திருவடியினன்;
கங்கை
வெள்ளம் சடைப் பாய்ந்த,
தோடு
ஆர்ந்த காதன் -
கங்கையைச்
சடையில் தரித்த, ஒரு
காதில் தோடு அணிந்தவன்;
10)
பொய்யர்க்க
ருள்செய்ய மாட்டான் -
அங்கி
.. போல்வண்ணன்
அஞ்சொல் மடப்பாவை வேட்டான்
மெய்யான
தேவன் புராணன் - கோல
.. வெண்ணீறு
பூசும் பிரான்அண்ட வாணன்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பொய்யர்க்கு
அருள்செய்ய மாட்டான் -
பொய்யர்களுக்கு
அருள்புரியாதவன்;
அங்கி
போல் வண்ணன் - தீப்
போன்ற செம்மேனியன்;
(அங்கி
- நெருப்பு);
அஞ்சொல்
மடப்பாவை வேட்டான் -
இன்மொழி
பேசும் அழகிய உமாதேவிக்குக்
கணவன்; (அம்
- அழகு);
(வேட்டல்
- மணம்புரிதல்);
மெய்யான
தேவன் - மெய்ப்பொருள்
ஆனவன், தேவாதிதேவன்;
புராணன்
- மிகத்
தொன்மையானவன்;
கோல
வெண்ணீறு பூசும் பிரான் -
அழகிய
வெண்ணீற்றைப் பூசும் தலைவன்;
அண்டவாணன்
- எங்கும்
இருப்பவன்; (அண்டவாணன்
- அண்டங்கள்
தோறும் ஒன்றாயும் உடனாயுமிருந்து
வாழ்பவன்);
11)
பேர்நூறு
பத்தான பெம்மான் -
சூழ்ந்து
.. பேய்பாட
ஆடும் பிரான்செய்யன் எம்மான்
பார்போற்ற
ஈகின்ற கையன் - சீறு
.. பாம்பார்
புலித்தோலன் என்றென்று(ம்)
மெய்யன்;
.. .. .. மாதேவன்
நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப
வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பேர்
நூறு-பத்து
ஆன பெம்மான் - ஆயிரம்
திருநாமங்கள் உடைய பெருமான்;
சூழ்ந்து
பேய் பாட ஆடும் பிரான் -
பேய்கள்
சூழ்ந்து நின்று பாடக் கூத்து
ஆடும் தலைவன்;
செய்யன்
- செம்மேனியன்;
(செய்
- சிவப்பு);
எம்மான்
- எம்
தலைவன்;
பார்
போற்ற ஈகின்ற கையன் -
உலகு
போற்ற வரங்கள் அள்ளி வழங்கும்
திருக்கரம் உடையவன்;
சீறு
பாம்பு ஆர் புலித்தோலன் -
புலித்தோல்
ஆடைமேல் சீறும் பாம்பைக்
கட்டியவன்; (ஆர்த்தல்
- கட்டுதல்);
என்றென்றும்
மெய்யன் - என்றும்
அழியாத மெய்ப்பொருள்;
மாதேவன்
நாமத்தை நாவே சொல்லு -
மகாதேவன்
திருநாமத்தை நாக்கே சொல்வாயாக;
வந்திப்பவர்க்கு
உண்டு பேரின்ப வாழ்வே -
அவனைத்
துதிப்பவர்களுக்குப் பேரின்ப
வாழ்வு கிட்டும்;
பிற்குறிப்பு:
மார்கபந்து
ஸ்தோத்ரம்:
ஶம்போ⁴
மஹாதே³வ தே³வ, ஶம்போ⁴
மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
பா²லாவநம்ரத்கிரீடம்ʼ
பா²லநேத்ரார்சிஷா
த³க்³த⁴பஞ்சேஷுகீடம் .
ஶூலாஹதாராதிகூடம்ʼ,
ஶுத்³த⁴மர்தே⁴ந்து³சூட³ம்ʼ
ப⁴ஜே
மார்க³ப³ந்து⁴ம்..
இப்பாடலின்
சந்த-அமைப்பு
- (U - குரு;
I - லகு)
UUI UUI UU - UI UUI UUI UUI UU
UUI UUI UU - UI UUI UUI UUI UU
வி.
சுப்பிரமணியன்
-----------
--------------