01.43
– அண்ணாமலை
-
(திருவண்ணாமலை)
2008-12-08
திருவண்ணாமலை
"நெஞ்சே மறவாதே”
-------------------------------
(கலிவிருத்தம் - “விளம் மா விளம் மா" என்ற வாய்பாடு)
1)
மருள்மிக வாகி மாலயன் தேட
நெருப்பென நின்றான் நினைப்பவர்க் கெளிதில்
அருள்புரி அண்ணா மலையனை வாழ்த்த
இருள்கெடும் நெஞ்சே இறைமற வாதே.
2)
கருமுகில் வண்ணன் கடிமலர் மேலான்
திருவடி யோடு திருமுடி தேடும்
அரும்சுடர் அண்ணா மலையனை வாழ்த்த
வரும்திரு நெஞ்சே இறைமற வாதே.
3)
பன்றியாய் அன்னப் பறவையாய்ச் சென்றும்
வென்றிகா ணாது வியர்த்தவர் வாட
அன்றுயர் அண்ணா மலையனை வாழ்த்த
நன்றுதான் என்றும் இறைமற வாதே.
4)
அலைக்கிடந் தோனும் அலர்மிசை யோனும்
அலைந்துதி ரிந்தும் அடிமுடி காணா
அலகிலா அண்ணா மலையனை வாழ்த்த
இலைதுயர் நெஞ்சே இறைமற வாதே.
5)
உலகுகள் தாண்டி உயர்கிற சோதி
நிலமகழ் மால்நான் முகன்இவர் நேடி
அலந்திடும் அண்ணா மலையனை வாழ்த்த
இலைஇடர் நெஞ்சே இறைமற வாதே.
6)
திருமகள் கேள்வன் திசைமுகன் தேடி
வருந்திடு மாறு வளர்எரி ஆன
அருமணி அண்ணா மலையனை வாழ்த்த
வரும்புகழ் நெஞ்சே இறைமற வாதே.
7)
அரவணை யானும் அலரவன் தானும்
அரண்டடி போற்ற அழலுரு ஆன
அரன்தனை அண்ணா மலையனை வாழ்த்த
வரம்மிக ஈவான் இறைமற வாதே.
8)
அரக்கனை அன்று நெரித்தருள் வோனைப்
பரமெவர் என்று முரணியோர் காணா
வரையிலா அண்ணா மலையனை வாழ்த்த
இரங்குவான் நெஞ்சே இறைமற வாதே.
9)
மறையவ னோடு மணிவணன் தேடிப்
பறந்தகழ்ந் தோடிப் பணிசுட ரோனை
அறவனை அண்ணா மலையனை வாழ்த்தி
இறைஞ்சிடு நெஞ்சே இறைமற வாதே.
10)
புறவழி யோர்சொல் புறனுரை எல்லாம்
அறவுரை அல்ல அரும்பெரும் சோதி
மறைமொழி அண்ணா மலையனை வாழ்த்தி
நிறைமகிழ் வெய்தி நிலைபெற லாமே.
11)
தருக்கிய மாலும் தாமரை யானும்
செருக்கறு மாறு செந்தழ லாய்நீள்
உருக்கொளும் அண்ணா மலையனை ஓதக்
கருக்கெடும் நெஞ்சே கணம்மற வாதே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-12-08
திருவண்ணாமலை
"நெஞ்சே மறவாதே”
-------------------------------
(கலிவிருத்தம் - “விளம் மா விளம் மா" என்ற வாய்பாடு)
1)
மருள்மிக வாகி மாலயன் தேட
நெருப்பென நின்றான் நினைப்பவர்க் கெளிதில்
அருள்புரி அண்ணா மலையனை வாழ்த்த
இருள்கெடும் நெஞ்சே இறைமற வாதே.
மருள்
-
மயக்கம்
(bewilderment
of mind, confusion); delusion; வியப்பு
(wonder);
மால்
அயன் -
விஷ்ணுவும்
பிரமனும்;
இருள்
-
அஞ்ஞானம்;
மயக்கம்;
துன்பம்;
இறை
-
இறைவன்;
/ சிறிது;
- சிறிதும்;
(உம்மைத்தொகை);
இறை
மறவாதே -
இறைவனை
மறவாதே;
/ சிறிதும்
மறவாதே;
2)
கருமுகில் வண்ணன் கடிமலர் மேலான்
திருவடி யோடு திருமுடி தேடும்
அரும்சுடர் அண்ணா மலையனை வாழ்த்த
வரும்திரு நெஞ்சே இறைமற வாதே.
கருமுகில்
வண்ணன் -
மேகவர்ணன்
-
விஷ்ணு;
கடி
மலர் மேலான் -
வாச
மலரான தாமரை மேல்
இருக்கும் பிரமன்;
திரு
-
செல்வம்;
3)
பன்றியாய் அன்னப் பறவையாய்ச் சென்றும்
வென்றிகா ணாது வியர்த்தவர் வாட
அன்றுயர் அண்ணா மலையனை வாழ்த்த
நன்றுதான் என்றும் இறைமற வாதே.
வென்றி
-
வெற்றி;
வேர்த்தல்
-
அஞ்சுதல்
(to
be afraid);
வியர்த்து
அவர் வாட -
அஞ்சி
விஷ்ணுவும் பிரமனும் வாட;
வாடுதல்
-
பொலிவு
அழிதல்;
மனம்
அழிதல்;
மெலிதல்;
அலைக்கிடந் தோனும் அலர்மிசை யோனும்
அலைந்துதி ரிந்தும் அடிமுடி காணா
அலகிலா அண்ணா மலையனை வாழ்த்த
இலைதுயர் நெஞ்சே இறைமற வாதே.
அலைக் கிடந்தோன் -
கடலில்
துயிலும் திருமால்;
அலர்
மிசையோன் -
தாமரைப்
பூவின்மீது இருக்கும் பிரமன்;
அலகு
இலா -
அளவு
இல்லாத;
இலை
துயர் -
துயர்
இல்லை;
(அப்பர்
தேவாரம் -
5.95.11 - "செங்கணானும்
பிரமனும் தம்முளே எங்கும்
தேடித் திரிந்தவர் காண்கிலார்..")
5)
உலகுகள் தாண்டி உயர்கிற சோதி
நிலமகழ் மால்நான் முகன்இவர் நேடி
அலந்திடும் அண்ணா மலையனை வாழ்த்த
இலைஇடர் நெஞ்சே இறைமற வாதே.
நிலம்
அகழ் -
நிலத்தை
அகழ்ந்த;
நான்முகன்
-
பிரமன்;
நேடுதல்
-
தேடுதல்;
அலத்தல்
-
துன்பமுறுதல்;
6)
திருமகள் கேள்வன் திசைமுகன் தேடி
வருந்திடு மாறு வளர்எரி ஆன
அருமணி அண்ணா மலையனை வாழ்த்த
வரும்புகழ் நெஞ்சே இறைமற வாதே.
கேள்வன்
-
நாயகன்;
கணவன்;
திசைமுகன்
-
பிரமன்;
வளர்
எரி -
வளர்கிற
தீ;
(சம்பந்தர்
தேவாரம் -
3.75.9 - "நீலவரை
...
மாலுமல
ரானுமறி யாமைவளர் தீயுருவ
மானவரதன் ...");
அருமணி
-
அரிய
மணி போன்ற;
(சம்பந்தர்
தேவாரம் -
3.105.6 -
துறைவளர்
கேதகை மீதுவாசஞ் சூழ்வான்
மலிதென்றல்
கறைவள
ருங்கடல் ஓதமென்றுங் கலிக்குங்
கலிக்காமூர்
மறைவள
ரும்பொருள் ஆயினானை மனத்தால்
நினைந்தேத்த
நிறைவள
ரும்புகழ் எய்தும்வாதை நினையா
வினைபோமே
–-----
சிவபெருமானை
மனத்தால் நினைந்து போற்ற
எக்காலத்தும் அழியாத புகழ்
வந்து சேரும்.
துன்பம்
வந்து சேர நினையாது.
அத்துன்பத்திற்குக்
காரணமான வினைகளும் நீங்கும்.);
7)
அரவணை யானும் அலரவன் தானும்
அரண்டடி போற்ற அழலுரு ஆன
அரன்தனை அண்ணா மலையனை வாழ்த்த
வரம்மிக ஈவான் இறைமற வாதே.
அரவு
அணையான் -
பாம்புப்
படுக்கை மேல் பள்ளிகொள்ளும்
விஷ்ணு;
அலரவன்
-
தாமரை
மலர் மேல் இருக்கும் பிரமன்;
அரள்தல்
-
துணுக்குறுதல்
(to
be startled, struck with fear, shocked);
அழல்
உரு -
சோதி
வடிவம்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.47.9 -
"மாலினோடு
மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப்
பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
....");
8)
அரக்கனை அன்று நெரித்தருள் வோனைப்
பரமெவர் என்று முரணியோர் காணா
வரையிலா அண்ணா மலையனை வாழ்த்த
இரங்குவான் நெஞ்சே இறைமற வாதே.
அரக்கன்
-
இராவணன்;
முரணுதல்
-
மாறுபடுதல்
(to
be opposed; to disagree, differ; to be discordant; to be in
contrast);
பரம்
எவர் என்று முரணியோர் =
தங்கள்
இருவருள் எவர் பரம்பொருள்
என்று வாதிட்ட திருமால்,
பிரமன்;
வரை
இலா -
அளவு
இல்லாத;
எல்லை
அற்ற;
இரங்குதல்
-
கருணைசெய்தல்;
அருள்புரிதல்;
"அண்ணா
மலையனை வாழ்த்த இரங்குவான்"
- "அவன்
இரங்குவான்"
என்பதில்
"அவன்"
என்பது
தொக்கு
நிற்கிறது.
9)
மறையவ னோடு மணிவணன் தேடிப்
பறந்தகழ்ந் தோடிப் பணிசுட ரோனை
அறவனை அண்ணா மலையனை வாழ்த்தி
இறைஞ்சிடு நெஞ்சே இறைமற வாதே.
மறையவன்
-
பிரமன்;
மணிவணன்
-
மணிவண்ணன்
-
விஷ்ணு
(Vishnu,
as sapphire-colored);
பணி
சுடரோன் -
பணிந்த
சோதியை;
அறவன்
-
அற
வடிவினன்;
(தர்மரூபி);
வாழ்த்துதல்
-
துதித்தல்;
இறைஞ்சுதல்
-
வணங்குதல்;
10)
புறவழி யோர்சொல் புறனுரை எல்லாம்
அறவுரை அல்ல அரும்பெரும் சோதி
மறைமொழி அண்ணா மலையனை வாழ்த்தி
நிறைமகிழ் வெய்தி நிலைபெற லாமே.
புறனுரை
-
பழிச்சொல்
(slander);
வெற்றுரை
(meaningless
utterance);
அறவுரை
-
தருமோபதேசம்;
மறை
-
வேதம்;
நிறை
மகிழ்வு -
நிறைந்த
மகிழ்ச்சி;
நிலைபெறுதல்
-
துன்பமற்றநிலையை
அடைதல்;
(திருவாசகம்
-
திருவெம்பாவை
-
1 - "ஆதியும்
அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை")
11)
தருக்கிய மாலும் தாமரை யானும்
செருக்கறு மாறு செந்தழ லாய்நீள்
உருக்கொளும் அண்ணா மலையனை ஓதக்
கருக்கெடும் நெஞ்சே கணம்மற வாதே.
தருக்குதல்
-
அகங்காரம்
கொள்ளுதல்;
செருக்கு
-
ஆணவம்;
செந்தழல்
ஆய் நீள் உரு -
ஒளிப்பிழம்பு
ஆகி அளவின்றி நீண்ட
வடிவம்;;
உருக்கொள்ளுதல்
-
வடிவெடுத்தல்
(to
take shape);
ஓதுதல்
-
பாடுதல்;
கருக்
கெடும் -
பிறவித்தொடர்
அழியும்;
(கரு
-
பிறப்பு)
கணம்
-
கணமும்
-
உம்மைத்தொகை
-
நொடிப்பொழுதும்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment