01.48
– கடவூர்
-
(திருக்கடையூர்)
2009-06-15
திருக்கடவூர் (“திருக்கடையூர்”)
---------------------
(வஞ்சி விருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - “அரவச் சடைமேல் மதிமத்தம்");
1)
பிறவிப் பிணிசேர் வினையெல்லாம்
அறவே அழிதற்(கு) அடைநெஞ்சே
பிறவாப் பெருமான் பிறைசூடி
கறைசேர் மிடறன் கடவூரே.
2)
வருகா லமெலாம் மகிழ்வோடு
திருவா கிடநீ அடைநெஞ்சே
ஒருபால் உமையாள் உறைகின்ற
கருமா மிடறன் கடவூரே.
3)
விருதா அலையா(து) அடைநெஞ்சே
ஒருபா சமுடன் மறையோன்பால்
வருகா லனையன்(று) உதைசெய்த
கருமா உரியான் கடவூரே.
4)
உலகிற் பிணியுற்(று) உழலாத
நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
நிலவைப் புனையும் பெருமாற்குக்
கலயர் பணிசெய் கடவூரே.
5)
புவியிற் புரிதீ வினையெல்லாம்
அவியக் கருதில் அடைநெஞ்சே
செவியோர் குழைசேர் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே.
6)
அலமந்(து) உலகில் அலையாமல்
நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
பலபேர் இடவோர் தலையோட்டைக்
கலமா உடையான் கடவூரே.
7)
திணறும் கடைநாள் சிவனன்றித்
துணையார் உளர்நீ தொழுநெஞ்சே
அணையார் புரமூன்(று) அவைவேவக்
கணைதொட் டவனூர் கடவூரே.
8)
விரையும் வினைகள் அணுகாத
அரணைப் பெறநீ அடைநெஞ்சே
விரலால் அவுணன் விறல்தீர்த்துக்
கரவாள் தருவான் கடவூரே.
9)
தரியாத் துயர்கள் தளையெல்லாம்
பிரியக் கருதில் அடைநெஞ்சே
எரியாய் எழுநாள் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே.
10)
சிவனைப் பரவார் சிலவீணர்;
அவலக் குழிவீழ்ந் தழிவாரே;
பவநோய் விலகப் பணிநெஞ்சே
கவசத் தலமாம் கடவூரே.
11)
உயிருக்(கு) ஒருநற் றுணைவேண்டில்
இயலும் பணிசெய்(து) அடைநெஞ்சே
மயிலாள் ஒருபால் மகிழ்கின்ற
கயிலைக் கிறைவன் கடவூரே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-06-15
திருக்கடவூர் (“திருக்கடையூர்”)
---------------------
(வஞ்சி விருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - “அரவச் சடைமேல் மதிமத்தம்");
1)
பிறவிப் பிணிசேர் வினையெல்லாம்
அறவே அழிதற்(கு) அடைநெஞ்சே
பிறவாப் பெருமான் பிறைசூடி
கறைசேர் மிடறன் கடவூரே.
பிறைசூடி
-
பிறையைச்
சூடுபவன்;
கறை
சேர் மிடறன் -
கருமை
திகழும் கழுத்தை உடையவன்;
2)
வருகா லமெலாம் மகிழ்வோடு
திருவா கிடநீ அடைநெஞ்சே
ஒருபால் உமையாள் உறைகின்ற
கருமா மிடறன் கடவூரே.
ஒரு
பால் -
ஒரு
பக்கம்;
கரு
மா மிடறன் -
அழகிய
நீல கண்டத்தை உடையவன்;
3)
விருதா அலையா(து) அடைநெஞ்சே
ஒருபா சமுடன் மறையோன்பால்
வருகா லனையன்(று) உதைசெய்த
கருமா உரியான் கடவூரே.
விருதா
-
வீணாக;
பயனின்றி;
(திருப்புகழ்
-
திருவாவினன்குடி
-
"சிவனார்
மனங்குளிர ...
உலகில்
விருதா அலைந்துழலும் அடியேனை
....");
பாசமுடன்
-
பாசத்தோடு
(எமன்
கையில் இருக்கும் சுருக்குக்கயிறு);
அன்போடு;
(பாசத்தை
எமனோடு சேர்த்துப் பொருள்கொண்டால்
-
எமன்
கையில் இருக்கும் கயிறு.
பாசத்தை
இறைவனோடு பொருத்திக்கொண்டால்
-
அன்பு);
மறையோன்
-
இங்கே,
அந்தணச்
சிறுவனார் மார்க்கண்டேயர்;
கருமா
உரியான் -
யானைத்
தோலை அணிந்த சிவன்;
(கருமா
-
யானை;
உரி
-
தோல்);
(தேவாரத்தில்
'கருமான்
உரி',
'கருமானின்
உரி',
என்பன
போன்று வரக் காணலாம்);
4)
உலகிற் பிணியுற்(று) உழலாத
நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
நிலவைப் புனையும் பெருமாற்குக்
கலயர் பணிசெய் கடவூரே.
கலயர்
-
குங்கிலியக்
கலய நாயனார்;
இவர்
திருக்கடவூரில் வாழ்ந்தவர்;
5)
புவியிற் புரிதீ வினையெல்லாம்
அவியக் கருதில் அடைநெஞ்சே
செவியோர் குழைசேர் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே.
அவிதல்
-
அழிதல்;
கருதில்
லடை -
லகர
ஒற்று விரித்தல் விகாரம் -
கருதில்
அடை -
கருதினால்
அடைவாயாக;
கவின்
ஆர் பொழில் சூழ் -
அழகிய
சோலைகள் சூழ்ந்த;
6)
அலமந்(து) உலகில் அலையாமல்
நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
பலபேர் இடவோர் தலையோட்டைக்
கலமா உடையான் கடவூரே.
அலமந்து
-
வருந்தி;
கலங்கி;
உலகில்
லலையாமல் -
லகர
ஒற்று விரித்தல் விகாரம் -
உலகில்
அலையாமல்;
பல
பேர் இட ஓர் தலையோட்டை -
பலரும்
பிச்சை இடுவதற்காக ஒரு
மண்டையோட்டினை;
கலமா
-
கலமாக
-
பிச்சைப்
பாத்திரமாக;
7)
திணறும் கடைநாள் சிவனன்றித்
துணையார் உளர்நீ தொழுநெஞ்சே
அணையார் புரமூன்(று) அவைவேவக்
கணைதொட் டவனூர் கடவூரே.
திணறும்
கடைநாள் -
மூச்சுத்திணறும்
மரணவேளை;
அணையார்
-
பகைவர்;
கணை
தொட்டவன் -
அம்பு
எய்தவன்;
8)
விரையும் வினைகள் அணுகாத
அரணைப் பெறநீ அடைநெஞ்சே
விரலால் அவுணன் விறல்தீர்த்துக்
கரவாள் தருவான் கடவூரே.
வினைகள்
ளணுகாத -
ளகர
ஒற்று விரித்தல் விகாரம் -
வினைகள்
அணுகாத;
அரண்
-
கவசம்;
காவல்;
கோட்டை;
விறல்
-
வலிமை;
வெற்றி;
வீரம்;
அவுணன்
-
அசுரன்
-
இங்கே
இராவணன்;
கரவாள்
தருவான் கடவூரே -
கைவாள்
தருபவன் (உறையும்)
திருக்கடவூர்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.51.8 - ".... இலங்கைமன்னு
வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய்...")
(சம்பந்தர்
தேவாரம் -
1.81.8 - "இரவில்
திரிவோர்கட்(கு)
இறைதோள்
இணைபத்தும் நிரவிக் கரவாளை
நேர்ந்தான் இடம்போலும் ...")
9)
தரியாத் துயர்கள் தளையெல்லாம்
பிரியக் கருதில் அடைநெஞ்சே
எரியாய் எழுநாள் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே.
தரியா
-
தாங்குதற்கரிய;
தாங்க
ஒண்ணாத;
(தரித்தல்
-
To bear patiently, endure; பொறுத்தல்);
(இலக்கணக்
குறிப்பு:
));
எரியாய்
எழு[ம்]
நாள்
-
அளவில்லாத
சோதியாகி
நீண்டபொழுது;
கரியான்
-
திருமால்;
கரியாற்கரியான்
-
கரியாற்கு
அரியான் -
கரியானுக்கு
அரியவன் -
திருமாலால்
அடையப்படாதவன்;
தாங்க
மாட்டாத துயர்களும் அவற்றுக்குக்
காரணமான வினைக்கட்டுகளும்
உன்னை விட்டு விலகுமாறு நீ
விரும்பினால்,
நெஞ்சமே,
திருக்கடவூரை
அடைவாயாக!
இலக்கணக்
குறிப்புகள்:
தரியா
-
"தரித்தல்"
எதிர்மறையில்
பெயரெச்சமாகத் "தரியாத"
என்று
வரும்.
இங்கே
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆகித் “தரியா” என்று வந்தது
துயர்கட்
டளையெல்லாம் -
துயர்கள்
தளையெல்லாம் -
விரித்தல்
விகாரம்;
உம்மைத்தொகை;
கருதில்
லடைநெஞ்சே -
கருதில்
அடைநெஞ்சே -
விரித்தல்
விகாரம்;
10)
சிவனைப் பரவார் சிலவீணர்;
அவலக் குழிவீழ்ந் தழிவாரே;
பவநோய் விலகப் பணிநெஞ்சே
கவசத் தலமாம் கடவூரே.
பரவுதல்
-
புகழ்தல்;
துதித்தல்;
பாடுதல்;
வீணன்
-
பயனற்றவன்;
அவலம்
-
துன்பம்;
குற்றம்;
கவலை;
பவ
நோய் -
பவரோகம்
-
பிறவிப்பிணி;
கவசத்
தலம் ஆம் கடவூர் -
அடைந்தாரைக்
கவசம் போல் காக்கின்ற தலம்
ஆகும் கடவூர்;
11)
உயிருக்(கு) ஒருநற் றுணைவேண்டில்
இயலும் பணிசெய்(து) அடைநெஞ்சே
மயிலாள் ஒருபால் மகிழ்கின்ற
கயிலைக் கிறைவன் கடவூரே.
நற்றுணை
-
நல்
துணை -
நல்ல
துணை;
இயலும்
பணிசெய்து -
இயன்ற
வகையில் திருத்தொண்டு
செய்து;
மயிலாள்
-
மயில்போலும்
சாயலுடைய உமாதேவியார்;
(சம்பந்தர்
தேவாரம் -
2.52.7 - "கலவ
மாமயி லாளொர் பங்கனை....")
பால்
-
பகுதி
(Part,
portion, share, section, fraction);
மகிழ்தல்
-
விரும்புதல்;
கயிலைக்கு
இறைவன் -
சிவபெருமான்;
(சம்பந்தர்
தேவாரம் -
5.66.1 - "..... பொற்கயி
லைக்கிறை ....")
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment