Monday, November 7, 2022

M.059 - கையானை - ஊரான் - மடக்கு

2013-03-15

M.059 - கையானை - ஊரான் - மடக்கு

-------------

கையானை ஈருரிபோர் மெய்யானை மான்மறிக்

கையானை அன்பர்க்கெக் காலத்தும் - கையானை

ஊரான் மகிழ்ந்தானை ஒப்பிலியைப் பூந்துருத்தி

ஊரான் தனைநெஞ்சே உன்னு.


பதம் பிரித்து:

கை-யானை ஈருரி போர்-மெய்யானை, மான்மறிக்

கையானை, அன்பர்க்கு எக்காலத்தும் கையானை,

ஊர்-ஆன் மகிழ்ந்தானை, ஒப்பிலியைப், பூந்துருத்தி

ஊரான்-தனை, நெஞ்சே உன்னு.


சொற்பொருள்:

கையானை - 1. துதிக்கையை உடைய ஆனை; 2. கையை உடையவனை; 3. கசத்தல் இல்லாதவனை; (கைத்தல் - கசத்தல்);

ஊரான் - 1. ஊர் ஆன் - இடபவாகனம்; (ஊர்தல் - ஏறுதல்); (ஆன் - இடபம்); 2. ஊரில் உறைபவன்;

ஈர்-உரி - உரித்த தோல்; (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);

உன்னுதல் - நினைதல்;


துதிக்கை உடைய ஆனையின் உரித்த தோலைப் போர்த்த திருமேனியனை, மான்கன்றைக் கையில் ஏந்தியவனைப், பக்தர்களுக்கு எக்காலத்திலும் கசத்தல் இல்லாதவனை ( = என்றும் இனிப்பவனை), இடபவாகனத்தை விரும்பியவனை, ஒப்பு இல்லாதவனைத், திருப்பூந்துருத்தி என்ற ஊரில் உறைபவனை, நெஞ்சே நீ நினை.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment