Sunday, June 28, 2020

03.05.071 – பொது - வாழத் தெரியாமல் - (வண்ணம்)

03.05.071 – பொது - வாழத் தெரியாமல் - (வண்ணம்)

2009-01-13

3.5.71) வாழத் தெரியாமல் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


வாழத் .. தெரியாமல்

.. வாடித் .. தவியாதே

வேழத் .. துரியானை

.. மேவித் .. தொழுநீயே

ஆழக் .. கடல்நாவாய்

.. ஆகித் .. துணையாவான்

வீழப் .. பதுசூடும்

.. வேணிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

வாழத் தெரியாமல்

.. வாடித் தவியாதே;

வேழத்து உரியானை

.. மேவித் தொழு நீயே;

ஆழக் கடல் நாவாய்

.. ஆகித் துணை ஆவான்;

வீழ் அப்பு அது சூடும்

.. வேணிப் பெருமானே.


* மனமே என்ற விளி தொக்கு நின்றது;


வாழத் தெரியாமல் வாடித் தவியாதே - மனமே! நன்னெறியில் வாழ அறியாமல் வாடி வருந்தாதே; ("மனமே" என்ற விளியை வருவித்துப் பொருள்கொள்க);

வேழத்துரியானை மேவித் தொழு நீயே - யானைத்தோலைப் போர்த்த சிவபெருமானை நீ விரும்பித் தொழுவாயாக; (வேழம் - யானை); (உரி - தோல்); (மேவுதல் - அடைதல்; விரும்புதல்);

ஆழக் கடல் நாவாய் ஆகித் துணைவான் - ஆழம் மிக்க வினைக்கடலில் ( / பிறவிக்கடலில்) படகாகி அவன் நம்மைக் காப்பான்; (நாவாய் - படகு; கப்பல்);

வீழ் அப்பு அது சூடும் வேணிப் பெருமானே - வானிலிருந்து விழுந்த கங்கையைச் சடையில் அணிந்த பெருமான்; (அப்பு - நீர்); (வேணி - சடை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment