Sunday, June 28, 2020

03.05.070 – பொது - பாசத் தொடராலே - (வண்ணம்)

03.05.070 – பொது - பாசத் தொடராலே - (வண்ணம்)

2009-01-12

3.5.70) பாசத் தொடராலே - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


பாசத் .. தொடராலே

.. பாரிற் .. படுவேனும்

பேசற் .. கரியாய்நின்

.. பேரைப் .. புகல்வேனோ

தாசர்க் .. கினியானே

.. சாலப் .. பழையானே

வாசக் .. குழலாள்சேர்

.. வாமப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பாசத் தொடராலே

.. பாரில் படுவேனும்

பேசற்கு அரியாய் நின்

.. பேரைப் புகல்வேனோ;

தாசர்க்கு இனியானே;

.. சாலப் பழையானே;

வாசக் குழலாள் சேர்

.. வாமப் பெருமானே.


பாசத் தொடராலே பாரில் படுவேனும் - பந்தத்தொடரால் இவ்வுலகில் துன்பமுறுகின்ற அடியேனும்; (படுதல் - துன்பமடைதல்);

பேசற்கு அரியாய் நின் பேரைப் புகல்வேனோ - சொல்லில் அடங்காதவனான உன் திருநாமத்தைச் சொல்லி உய்யுமாறு அருள்வாயாக; (அரியாய் - அரியவனே);

தாசர்க்கு இனியானே - அன்பருக்கு அன்பனே; அடியவர்களுக்கு இனிமை பயப்பவனே; (தாசன் - அடிமை; பக்தன்);

சாலப் பழையானே - மிகவும் தொன்மையானவனே;

வாசக் குழலாள் சேர் வாமப் பெருமானே - மணம் கமழும் கூந்தலை உடைய உமை ஒரு பாகமாகச் சேரும் இடப்பக்கத்தை உடைய அழகிய பெருமானே. (வாமம் - அழகு; இடப்பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment