Sunday, June 28, 2020

03.05.069 – பொது - சேரற்கறியாது - (வண்ணம்)

03.05.069 – பொது - சேரற்கறியாது - (வண்ணம்)

2009-01-12

3.5.69) சேரற்கறியாது - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


சேரற் .. கறியாது

.. தீதிற் .. சுழலாதுன்

சீரைச் .. சொலிவானம்

.. சேரப் .. பெறுவேனோ

நீரைப் .. புனைவானே

.. நேயர்க் .. கினியானே

வாரக் .. கொடிமாது

.. வாமப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சேரற்கு அறியாது

.. தீதிற் சுழலாது, உன்

சீரைச் சொலி வானம்

.. சேரப் பெறுவேனோ;

நீரைப் புனைவானே;

.. நேயர்க்கு இனியானே;

வாரக் கொடி-மாது

.. வாமப் பெருமானே.


சேரற்கு அறியாது தீதிற் சுழலாது - (சேரத் தக்கவர்களை அடையாமல்) கண்டவர்களோடு சேர்ந்து கேட்டில் சுழலாமல்; (சேரல் - சேர்தல் - சென்றடைதல்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

ன் சீரைச் சொலி வானம் சேரப் பெறுவேனோ - உன் திருப்புகழைச் சொல்லிச் சிவலோகம் அடையை அருள்வாயாக; (சொலி - சொல்லி - இடைக்குறை); (வான் - பேரின்பம்; வீடு); (சம்பந்தர் தேவாரம் - 2.7.11 - "ஞானசம்பந்தன செந்தமிழ் ஒன்றும் உள்ளமுடையார் அடைவார் உயர் வானமே");

நீரைப் புனைவானே - கங்கையை அணிந்தவனே;

நேயர்க்கு இனியானே - அன்பருக்கு இனிமை பயப்பவனே;

வாரக் கொடி-மாது வாப் பெருமானே - அன்புடைய கொடி போன்ற உமையை இடப்பக்கத்தில் பாகமாக உடைய பெருமானே; (வாரம் - அன்பு); (வாமம் - இடப்பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment