கந்த ஷஷ்டியை ஒட்டி
2007-11-17
V.030 - வேளை - ஒருவேலை - மடக்கு
-----------
வேளை எரிக்க விழித்தான் மகன்முருக
வேளை வணங்கிட வேண்டுமோ - வேளை
ஒருவேலை ஏந்தி வருவோன்தாள் போற்றும்
ஒருவேலை செய்வார்க்குண் டுய்வு.
சொற்பொருள்:
வேளை - 1. மன்மதனை; 2. முருகனை; 3. காலம்; சமயம்; பொழுது;
ஒரு - 1. ஒப்பற்ற; 2. ஒன்று
வேலை - 1. வேல் என்ற ஆயுதத்தை; 2. தொழில்; செயல்;
வேளை எரிக்க விழித்தான் மகன் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவனாரின் மகனான;
முருகவேளை வணங்கிட வேண்டுமோ வேளை - முருகனைத் தொழுவதற்குத் தனியாக ஒரு நேரம் வேண்டுமோ?
ஒரு வேலை ஏந்தி வருவோன் தாள் போற்றும் ஒரு வேலை செய்வார்க்கு உண்டு உய்வு - ஒப்பற்ற வேலாயுதத்தைக் கையில் தாங்கி வருகின்ற முருகனுடைய திருவடியைத் தொழுகின்ற அந்த ஒரு செயலைச் செய்பவர்களுக்கு நற்கதி உண்டு.
வி. சுப்பிரமணியன்
--------- ---------
No comments:
Post a Comment