02.28 – திருச்சோற்றுத்துறை
2011-09-10
திருச்சோற்றுத்துறை
----------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனனா தனனா தனனா தனனா";
ஒரோவழி தனனா என்பது தானா என்று வரும்.)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - சடையாய் எனுமால் சரண்நீ யெனுமால்)
1)
கல்லால் தொழுசாக் கியருக் கருளும்
நல்லான் நகர்மூன் றெரிசெய் நகையான்
கல்லால் அடியில் கனிவோ டறங்கள்
சொல்வான் பிரியான் சோற்றுத் துறையே.
கல்லால்
-
1) கல்லைக்கொண்டு;
2) கல்லால
மரம்;
பிரியான்
சோற்றுத்துறை -
திருச்சோற்றுத்துறையை
நீங்காதவன்;
கல்லெறிந்து
வழிபட்ட சாக்கியநாயனாருக்கு
அருள்புரிந்த நல்லவன்;
முப்புரங்களையும்
சிரித்து எரித்தவன்;
கல்லால
மரத்தடியில் சனகாதி முனிவர்களுக்கு
உபதேசித்தவன்;
அந்தச்
சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
2)
தொடுமா மலரால் தொழுவார் வினைகள்
விடுமா றருளும் விமலன் விடையன்
அடுகா மனுடல் அழிய விழியால்
சுடுவான் பிரியான் சோற்றுத் துறையே.
தொடு
மா மலரால் -
தொடுத்த
சிறந்த பூக்களால்;
அடு
காமன் -
அணுகிய
மன்மதன்;
(அடுத்தல்
-
நெருங்குதல்;)
காமனுடல்லழிய
-
லகர
ஒற்று விரித்தல் விகாரம்;
சிறந்த
பூக்களைத் தொடுத்து ஈசனுக்கு
அணிவித்து வணங்கும் பக்தர்களது
வினைகள் நீங்குமாறு அருள்புரியும்
விமலன்;
இடப
வாகனன்;
நெருங்கிய
மன்மதன் உடல் சாம்பலாகும்படி
நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தவன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
3)
பிணைமா மலரால் பெருமான் மலர்த்தாள்
இணையே தொழுவார்க் கெமனார் தமர்கள்
அணையா நிலையை அருள்வான் உமையாள்
துணைவன் பிரியான் சோற்றுத் துறையே.
பிணைமா
மலரால் -
தொடுத்த
சிறந்த பூக்களால்;
சிறந்த
பூக்களைத் தொடுத்து ஈசன்
திருவடிகளில் சாத்தி வணங்கும்
பக்தர்களுக்கு எமதூதர்கள்
அணுகாத நிலையை அருள்பவன்;
உமாதேவியார்
கணவன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
4)
நீல மிடறன் தனைநீ ளநினை
பால னிடம்வந் தடையும் பரிவில்
காலன் தனையோர் கழலால் உதைசெய்
சூலன் பிரியான் சோற்றுத் துறையே.
நீல
மிடறன் -
நீலகண்டன்;
பரிவு
இல் காலன் -
இரக்கம்
இல்லாத எமன்;
நீலகண்டனை
இடைவிடாது தியானித்து வழிபட்ட
மார்க்கண்டேயரிடம் வந்தடைந்த
இரக்கமற்ற எமனை ஒரு காலால்
உதைத்து அருள்செய்த சூலபாணி;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
5)
பாடிப் பரவிப் பணியும் அடியார்
வாடித் தவியா வணம்வாழ் வருள்வான்
கோடி பெயரான் குளிர்வெண் மதியம்
சூடி பிரியான் சோற்றுத் துறையே.
மதியம்
சூடி -
பிறைச்சந்திரனைச்
சூடுபவன்;
பாடிப்
போற்றி வணங்கும் பக்தர்கள்
வாடித் தவிக்கும் நிலையின்றி
இன்புற வாழ அருள்பவன்;
கணக்கற்ற
பெயர்கள் உடையவன்;
குளிர்ந்த
வெண்பிறையைச் சூடுபவன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
6)
வேழத் துரிபோர் விகிர்தன் ஒருபால்
ஏழைக் கெனநல் கிறைவன் இனியன்
தாழஞ் சடையன் தனிநா வலர்கோன்
தோழன் பிரியான் சோற்றுத் துறையே.
பதம்
பிரித்து:
வேழத்து
உரி போர் விகிர்தன்;
ஒரு
பால்
ஏழைக்கு
என நல்கு இறைவன்;
இனியன்;
தாழ்
அம் சடையன்;
தனி
நாவலர்கோன்
தோழன்;
பிரியான்
சோற்றுத்துறையே.
வேழத்து
உரி போர் விகிர்தன் -
யானைத்தோலைப்
போர்க்கும் இறைவன்;
(விகிர்தன்
-
மாறுபட்ட
செயலினன்;)
ஏழை
-
பெண்;
தாழ்தல்
-
1) நீண்டுதொங்குதல்;
2) மேலிருந்து
விழுதல் (To
flow down, descend;)
அம்
-
1) அழகு;
2) நீர்;
தாழ்
அம் சடையன் -
தாழும்
அழகிய சடையை உடையவன்;
கங்கைச்சடையன்;
தனி
-
ஒப்பற்ற;
நாவலர்கோன்
-
சுந்தரர்;
யானைத்தோலைப்
போர்க்கும் கடவுள்;
உமையம்மைக்கு
இடப்பக்கத்தை அளித்த இறைவன்;
பக்தர்களுக்கு
இனியவன்;
தாழும்
அழகிய சடையை உடையவன்;
கங்கைச்சடையன்;
ஒப்பற்ற
சுந்தரர்க்குத் தோழன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
7)
நாதன் நரைவெள் விடையன் குழையோர்
காதன் கறைசேர் மிடறன் கழலார்
பாதன் இரவிற் பரவை மனைசெல்
தூதன் பிரியான் சோற்றுத் துறையே.
*
திருவாரூரில்
சுந்தரருக்காகப் பரவை மனைக்குத்
தூது சென்றதைச் சுட்டியது.
குழை
ஓர் காதன் -
ஒரு
காதில் குழையை அணிந்தவன் -
அர்த்தநாரீஸ்வரன்;
கறை
சேர் மிடறன் -
நீலகண்டன்;
கழல்
ஆர் பாதன் -
கழலை
அணிந்த திருவடியினன்;
தலைவன்;
வெள்ளை
எருதை வாகனமாக உடையவன்;
ஒரு
காதில் குழை அணிபவன்
(அர்தநாரீஸ்வரன்);
நீலகண்டன்;
வீரக்கழலை
அணிந்த திருவடியினன்;
சுந்தரர்க்காக
இரவுநேரத்தில் பரவையார்
இல்லத்திற்குத் தூது சென்றவன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
8)
மடத்தால் மலையாட் டுமிரா வணனை
இடப்பால் உமைசேர் இறைவன் விரலால்
அடர்த்தான் அடையும் அடியார் துயரைத்
துடைப்பான் பிரியான் சோற்றுத் துறையே.
மடத்தால்
-
அறியாமையால்;
இடப்பால்
-
இடப்பக்கம்;
அடர்த்தல்
-
நசுக்குதல்;
துடைத்தல்
-
நீக்குதல்;
இராவணன்
தன் அறியாமையால் கயிலைமலையைப்
பெயர்க்க முயன்றபோது,
அவனை
ஒரு விரலை அம்மலைமேல் இட்டு
நசுக்கியவன்;
இடப்பக்கம்
உமையம்மை இணைகிற இறைவன்;
சரண்புகுந்த
அடியவர்கள் துயரைப் போக்குபவன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
9)
அரிநான் முகனார் அறியா வணமோர்
எரியாய் எழுவான் இலையால் தொழினும்
பரிவான் பழவல் வினைதீர்த் தருளைச்
சொரிவான் பிரியான் சோற்றுத் துறையே.
இலையால்
தொழினும் -
இலைகளைத்
தூவித் தொழுதாலும்;
திருமாலும்
பிரமனும் அறிய இயலாதபடி ஒரு
எல்லையற்ற சோதியாக உயர்ந்தவன்;
இலைகளைத்
தூவி வணங்கினாலும் அவ்வடியவர்களுக்கு
இரங்குபவன்;
அவர்களது
பழைய வலிய வினைகளைத் தீர்த்து
அருளைப் பொழிபவன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
(சுந்தரர்
தேவாரம் -
7.94.9
இலையால்
அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா
வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால்
தாழுந் தவத்தோர்க் கென்றும்
தொலையாச்
செல்வச் சோற்றுத் துறையே.)
10)
மிண்டர் அறியார்; விழியற் றவரால்;
கண்டு வழியைக் கழறற் கொணுமோ?
தொண்டர் துயர்தீர் துணைவன் மதியத்
துண்டன் பிரியான் சோற்றுத் துறையே.
மிண்டர்
-
கல்நெஞ்சர்கள்;
ஆல்
-
1) மூன்றாம்
வேற்றுமை உருபு;
2) அதிசயம்
இரக்கம் தேற்றம் இவற்றைக்
குறிப்பிக்கும் இடைச்சொல்
(Particle
expressive of surprise or pity or certainty); 3) ஓர்
அசைநிலை (Poetic
expletive affixed to nouns and finite verbs);
விழியற்றவரால்
-
1) விழி
அற்றவரால் -
கண்ணில்லாதவர்களால்;
2) குருடர்;
கழறுதல்
-
சொல்லுதல்
(To
say, declare, tell);
ஒண்ணுதல்
-
இயலுதல்;
மதியத்
துண்டன் -
நிலாத்
துண்டத்தை அணியும் சிவபெருமான்;
சிவனுக்கு
அன்பில்லாத கல்நெஞ்சர்கள்
அறியமாட்டார்.
அவர்கள்
குருடர்களே!
குருடர்களால்
இன்னொருவருக்கு வழியைக்
காட்ட இயலுமோ?
அடியவர்கள்
துயரைத் தீர்க்கும் துணைவன்,
நிலாத்துண்டத்தைச்
சூடும் சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
இலக்கணக்
குறிப்பு:
"மிண்டர்
அறியார்;
விழியற்
றவரால்;"
என்றும்
"விழியற்
றவரால் கண்டு வழியைக் கழறற்
கொணுமோ"
என்றும்
இரு பக்கமும் இயைத்துப்
பொருள்கொள்க.
இது
இடைநிலைத்தீவக அணி -
இடைநிலைவிளக்கு
என்று சொல்லப்பெறும்;
11)
மடமா தொருபால் மகிழும் தலைவன்
சுடர்போல் உருவன் படர்செஞ் சடையன்
அடலே றுடையான் அடியார் நிழல்போல்
தொடர்வான் பிரியான் சோற்றுத் துறையே.
பதம்
பிரித்து:
மடமாது
ஒருபால் மகிழும் தலைவன்;
சுடர்போல்
உருவன்;
படர்
செஞ்சடையன்;
அடல்
ஏறு உடையான்;
அடியார்
நிழல்போல்
தொடர்வான்;
பிரியான்
சோற்றுத் துறையே.
மடம்
-
அழகு;
சுடர்
-
நெருப்பு;
அடல்
ஏறு உடையான் -
வலிய
எருதை ஊர்தியாக உடையவன்;
அழகிய
உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட
தலைவன்;
தீப்போன்ற
செம்மேனியன்;
படர்ந்த
செஞ்சடை உடையவன்;
வலிய
எருதை ஊர்தியாக உடையவன்;
நிழல்போல
அடியவர்களை என்றும் நீங்காமல்
தொடர்பவன்;
அச்சிவபெருமான்
திருச்சோற்றுத்துறையுள்
நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம். "தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்.
பாடல்களில் முதற்சீர் 'தானா' என்றும் வரலாம்.
மற்ற சீர்களில், ஒரோவழி தனனா என்பது தானா என்று வரும்.
2) சம்பந்தர் தேவாரம் - 2.17.1 -
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.
3) திருச்சோற்றுத்துறை - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=371
-------------- --------------
No comments:
Post a Comment