01.39
– பொது
-
(தோடகம்)
2008-10-01
பொது
"நாடகனுக்குத் தோடகம் - 2”
---------------------------------
(தோடகம் என்பது ஒரு சமஸ்கிருத பாடல் அமைப்பு.
"தனனா தனனா தனனா தனனா” என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - “சடையாய் எனுமால் சரணீ எனுமால்”);
(கந்தர் அனுபூதியில் பல பாடல்களும் இச்சந்தமே).
1)
பணமே பெரிதாய்ப் பலநாள் கருதிக்
குணமில் செயலால் குழியில் விழலேன்
மணமா மலரால் மதிசூ டிறைவன்
இணையார் அடிபோற் றிடுவாய் மனமே.
2)
அகலா வினையும் இகலைம் புலனும்
பகலோன் கதிரிற் பனியொத் தொழியும்
புகலாய் உளநம் புனிதன் கழலைப்
பகலோ டிரவாய்ப் பணியாய் மனமே.
3)
தணியா நசையாற் றகவில் செயலாற்
பிணிதீ வினையாற் பெறுதுன் பமற
அணிமா துமையாள் அகலாப் பெருமான்
மணிகண் டனைநீ மறவேல் மனமே.
4)
கனைவா ரிதிபோல் இனலைத் தருதீ
வினைகள் விடவே நினையாய் மனமே
சினமா விடையான் புனலார் சடையான்
கனலேந் துகரன் கழலைத் தினமே.
5)
நிலவைத் தலைமேல் அணிவான் நிமலன்
உலகிற் பலிகொண் டுழலும் பெருமான்
அலகில் புகழான் அடியைத் தொழுதால்
விலகாப் பழியும் விடுமே மனமே.
6)
நதிசேர் சடையான் நடனம் புரிவான்
பதினா றுபசா ரமதால் பணியும்
மதியுள் ளவருள் மகிழும் சிவனைத்
துதியாய் மனமே துயரே தினியே.
7)
அருளைப் பொழிவான் அடியைப் பணிவார்
இருளைக் களைவான் இடபக் கொடியான்
விருதா அலையா தொருவன் கழலைக்
கருதாய் மனமே வருமே சுகமே.
8)
அறிவற் றருமா மலையாட் டியவன்
வெறிகெட் டழவோர் விரலிட் டருளும்
மறிமான் உடையான் மதிசேர் சடையான்
வெறியார் கழலே விழைவாய் மனமே
9)
அலைமேல் திருமால் அலரோன் அறியார்
அலமந் தருளாய் எனவோர் அழலாய்
இலகும் பெருமான் எழிலார் கழலே
மலமா சகலத் துதியாய் மனமே.
10)
ஒருதத் துவமும் தெரியார் உளறும்
பொருளில் மொழிகள் மருளைத் தருமே
திருவைப் பெறநீ தினமும் துதிசெய்
கருணைக் கடலாம் உமைகோன் கழலே.
11)
முடியா முதலே முடிமேல் பிறையாய்
அடியார் மனமே குடியா உடையாய்
அடியேற் கருளாய் அரனே எனநம்
மிடிபோய் வருமே விலகாத் திருவே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
தோடகம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
தோடகத்தின் இலக்கணம்: Thotakam Meter
4 அடிகள். அடிக்கு 4 "தனனா" -- “லகு-லகு-குரு" இருக்கும்.
லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்).
(For more details on Sanskrit prosody: https://en.wikipedia.org/wiki/Sanskrit_prosody )
2008-10-01
பொது
"நாடகனுக்குத் தோடகம் - 2”
---------------------------------
(தோடகம் என்பது ஒரு சமஸ்கிருத பாடல் அமைப்பு.
"தனனா தனனா தனனா தனனா” என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - “சடையாய் எனுமால் சரணீ எனுமால்”);
(கந்தர் அனுபூதியில் பல பாடல்களும் இச்சந்தமே).
1)
பணமே பெரிதாய்ப் பலநாள் கருதிக்
குணமில் செயலால் குழியில் விழலேன்
மணமா மலரால் மதிசூ டிறைவன்
இணையார் அடிபோற் றிடுவாய் மனமே.
பதம்
பிரித்து:
பணமே
பெரிதாய்ப் பல நாள் கருதிக்,
குணம்
இல் செயலால் குழியில் விழல்
ஏன்?
மண
மா மலரால் மதி சூ(டு)
இறைவன்
இணை
ஆர் அடி போற்றிடுவாய் மனமே.
பணமே
பெரிது ஆய்ப் பல நாள்
கருதி -
பணமே
பிரதானம் ஆகி,
அவ்வாறே
நெடுங்காலம் எண்ணி;
குணம்
இல் செயல் -
குணமற்ற
செயல்கள்:
விழல்
-
விழுதல்;
மண
மா மலர் -
வாசம்
மிகுந்த சிறந்த பூக்கள்;
இணை
ஆர் அடி -
இரண்டாகிய
அரிய திருவடியை;
2)
அகலா வினையும் இகலைம் புலனும்
பகலோன் கதிரிற் பனியொத் தொழியும்
புகலாய் உளநம் புனிதன் கழலைப்
பகலோ டிரவாய்ப் பணியாய் மனமே.
பதம்
பிரித்து:
அகலா
வினையும் இகல் ஐம்புலனும்
பகலோன்
கதிரில் பனி ஒத்(து)
ஒழியும்;
புகலாய்
உள நம் புனிதன் கழலைப்
பகலோ(டு)
இரவாய்ப்
பணியாய் மனமே.
அகல்தல்
-
நீங்குதல்;
இகல்தல்
-
மாறுபடுதல்
(be
inimical);
ஐம்புலன்
-
புலனாசைகள்;
வினையும்மிகலைம்
-
'வினையும்
இகல் ஐம்'
என்பது
சந்தத்திற்காக மகர ஒற்று
விரித்தல் பெற்றுவந்தது.
பகலோன்
-
சூரியன்;
புகல்
-
சரண்
(refuge);
அடைக்கலம்;
3)
தணியா நசையாற் றகவில் செயலாற்
பிணிதீ வினையாற் பெறுதுன் பமற
அணிமா துமையாள் அகலாப் பெருமான்
மணிகண் டனைநீ மறவேல் மனமே.
பதம்
பிரித்து:
தணியா
நசையால் தகவு இல் செயலால்
பிணி
தீவினையால் பெறு துன்பம் அற,
அணி
மாது உமையாள் அகலாப் பெருமான்
மணிகண்டனை
நீ மறவேல் மனமே.
நசை
-
விருப்பம்;
தகவு
இல் -
தகாத;
பிணி
தீவினை -
பிணிக்கும்
தீயவினை;
அணி
-
அழகிய;
மணிகண்டன்
-
நீலகண்டன்;
மறவேல்
-
மறவாதே
(நினைவாய்);
4)
கனைவா ரிதிபோல் இனலைத் தருதீ
வினைகள் விடவே நினையாய் மனமே
சினமா விடையான் புனலார் சடையான்
கனலேந் துகரன் கழலைத் தினமே.
பதம்
பிரித்து:
கனை
வாரிதி போல் இனலைத் தரு தீ
வினைகள்
விடவே,
நினையாய்
மனமே,
சின
மா விடையான்,
புனல்
ஆர் சடையான்,
கனல்
ஏந்து கரன் கழலைத் தினமே.
கனை
வாரிதி -
ஒலிக்கும்
கடல்;
இனல்
-
இன்னல்
(இடைக்குறை
விகாரம்);
கனல்
ஏந்து கரன் -
தீயை
ஏந்தும் கரத்தை உடையவன்;
5)
நிலவைத் தலைமேல் அணிவான் நிமலன்
உலகிற் பலிகொண் டுழலும் பெருமான்
அலகில் புகழான் அடியைத் தொழுதால்
விலகாப் பழியும் விடுமே மனமே.
பதம்
பிரித்து:
நிலவைத்
தலைமேல் அணிவான்;
நிமலன்;
உலகில்
பலி கொண்(டு)
உழலும்
பெருமான்;
அல(கு)
இல்
புகழான்;
அடியைத்
தொழுதால்
விலகாப்
பழியும் விடுமே மனமே.
நிமலன்
-
மலமற்றவன்;
பலி
-
பிச்சை;
அலகு
இல் புகழான் -
அளவற்ற
புகழ் உடையவன்;
நதிசேர் சடையான் நடனம் புரிவான்
பதினா றுபசா ரமதால் பணியும்
மதியுள் ளவருள் மகிழும் சிவனைத்
துதியாய் மனமே துயரே தினியே.
பதம்
பிரித்து:
நதி
சேர் சடையான்;
நடனம்
புரிவான்;
பதினா(று)
உபசாரம்
அதால் பணியும்
மதி
உள்ளவர் உள் மகிழும் சிவனைத்
துதியாய்
மனமே,
துயர்
ஏ(து)
இனியே.
பதினா(று)
உபசாரம்
அதால் -
ஷோடசோபசாரங்களால்;
(“அதால்”
என்ற பிரயோக உதாரணம்:
- (சம்பந்தர்
தேவாரம் -
3.113.3 - “பாதம
தாற்கூற் றுதைத்தனனே”);
மதி
-
அறிவு;
உள்
-
மனது;
(ஆறுமுக
நாவலர் எழுதிய 'இந்துமத
இணைப்பு விளக்கம்'
என்ற
நூலிலிருந்து:
பதினாறு
உபசாரம் -
சோடசோபசாரங்கள்
-
1. ஆவாகனம்;
2. ஸ்தாபனம்;
3. சந்திதானம்;
4. சந்நிரோதனம்;
5. அவகுண்டம்;
6. அபிஷேகம்;
7. பாத்யம்;
8. ஆசமநீயம்;
9. அர்க்கியம்;
10. மாலை
சாத்தல்;
11. தூபம்;
12. தீபம்;
13. நைவேத்தியம்;
14. பாநீயம்;
15. ஜபசமர்ப்பணம்;
16. தீப
ஆராதனை.
தீப
ஆராதனை பதினாறு வகைப்படும்.
1. தூபம்;
2. புஷ்பதீபம்;
3. நாக்தீபம்;
4. விருஷதீபம்;
5. மேகதீபம்;
6. புருஷாமிருகதீபம்;
7. கும்பதீபம்;
8. ஆரத்திரிகம்;
9. நக்ஷத்திரதீபம்;
10. கற்பூரதீபம்;
11. பஸ்மோபசரம்;
12. கண்ணாடிகாட்டல்;
13. குடைபிடித்தல்;
14. கொடிகட்டுதல்;
15. சாமரம்
வீசுதல் 16.
விசிறிவீசுதல்.)
7)
அருளைப் பொழிவான் அடியைப் பணிவார்
இருளைக் களைவான் இடபக் கொடியான்
விருதா அலையா தொருவன் கழலைக்
கருதாய் மனமே வருமே சுகமே.
பதம்
பிரித்து:
அருளைப்
பொழிவான்;
அடியைப்
பணிவார்
இருளைக்
களைவான் இடபக் கொடியான்;
விருதா
அலையாது ஒருவன் கழலைக்
கருதாய்
மனமே;
வருமே
சுகமே.
இருள்
-
அறியாமை;
விருதா
-
வீணாய்;
பயனின்றி:
ஒருவன்
-
ஒப்பற்றவன்;
8)
அறிவற் றருமா மலையாட் டியவன்
வெறிகெட் டழவோர் விரலிட் டருளும்
மறிமான் உடையான் மதிசேர் சடையான்
வெறியார் கழலே விழைவாய் மனமே
பதம்
பிரித்து:
அறி(வு)
அற்(று)
அரு
மா மலை ஆட்டியவன்
வெறி
கெட்(டு)
அழ
ஓர் விரல் இட் (டு)
அருளும்,
மறி
மான் உடையான்,
மதி
சேர் சடையான்,
வெறி
ஆர் கழலே விழைவாய் மனமே.
அரு
மா மலை -
கயிலை
மலை;
வெறி
-
பேதைமை
(ignorance);
பைத்தியம்;
கோபம்;
வாசனை;
மறி
மான் -
மான்
கன்று;
வெறி
ஆர் கழல் -
வாசம்
மிக்க திருவடி;
9)
அலைமேல் திருமால் அலரோன் அறியார்
அலமந் தருளாய் எனவோர் அழலாய்
இலகும் பெருமான் எழிலார் கழலே
மலமா சகலத் துதியாய் மனமே.
பதம்
பிரித்து:
அலைமேல்
திருமால்,
அலரோன்
அறியார்;
அலமந்(து)
"அருளாய்"
என
ஓர் அழலாய்
இலகும்
பெருமான் எழில் ஆர் கழலே
மல
மா(சு)
அகலத்
துதியாய் மனமே.
அலரோன்
-
தாமரைப்பூவில்
உறையும் பிரமன்;
அலமருதல்
-
வருந்துதல்
(To
be vexed, distressed);
அழல்
-
தீ;
இலகுதல்
-
விளங்குதல்
(to
shine, glisten, glitter);
எழில்
ஆர் கழல் -
அழகு
வாய்ந்த திருவடி;
மல
மாசு -
மும்மலங்கள்;
10)
ஒருதத் துவமும் தெரியார் உளறும்
பொருளில் மொழிகள் மருளைத் தருமே
திருவைப் பெறநீ தினமும் துதிசெய்
கருணைக் கடலாம் உமைகோன் கழலே.
ஒரு
தத்துவமும் தெரியார் -
(சம்பந்தர்
தேவாரம் -
1.52.10 - "...தத்துவம்
ஒன்றறியார்…");
பொருள்
இல் மொழிகள் -
அர்த்தமற்ற
பேச்சு;
மருள்
-
மயக்கம்
(confusion;
delusion);
11)
முடியா முதலே முடிமேல் பிறையாய்
அடியார் மனமே குடியா உடையாய்
அடியேற் கருளாய் அரனே எனநம்
மிடிபோய் வருமே விலகாத் திருவே.
பதம்
பிரித்து:
"முடியா
முதலே;
முடிமேல்
பிறையாய்;
அடியார்
மனமே குடியா உடையாய்;
அடியேற்(கு)
அருளாய்;
அரனே"
என
நம்
மிடி
போய்,
வருமே
விலகாத் திருவே.
முடியா
முதல் -
அழிவில்லாத
முதல்வன்;
முடி
மேல் பிறையாய் -
திருமுடி
மீது பிறைச்சந்திரனை உடையவனே;
குடியா
-
குடியாக
-
உறைவிடமாக;
அடியேற்கு
-
அடியேனுக்கு;
மிடி
-
வறுமை;
துன்பம்;
விலகா
-
நீங்காத;
திரு
-
செல்வம்;
பாக்கியம்;
சிறப்பு;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
தோடகம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
தோடகத்தின் இலக்கணம்: Thotakam Meter
4 அடிகள். அடிக்கு 4 "தனனா" -- “லகு-லகு-குரு" இருக்கும்.
லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்).
(For more details on Sanskrit prosody: https://en.wikipedia.org/wiki/Sanskrit_prosody )
No comments:
Post a Comment