04.12 – பாற்றுறை
2013-09-25
பாற்றுறை ( திருவானைக்காவிலிருந்து கல்லணை செல்லும் வழியில் கல்லணைக்கு அருகே 'பனையபுரம்' என்ற ஊருக்குப் பக்கத்தில் இத்தலம் உள்ளது)
----------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் விளம் மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")
1)
சுழியினார் கங்கையைச் சூடும் முடியினார்
விழியினால் மன்மதன் வேவ நோக்கினார்
பழியிலார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
அழிவிலார் அடியடை அன்பர்க் கின்பமே.
சுழியின்
ஆர் கங்கை -
நீர்ச்சுழிகள்
மிக்க கங்கை;
(இன்
-
அசை);
பழி
இலார் -
குற்றம்
அற்றவர்;
பாங்கர்
-
பக்கம்;
2)
திங்களும் கங்கையும் திகழும் முடியனை
அங்கையில் அழலனை ஆகத் துமையொரு
பங்கனைக் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைத்
தங்கிய சம்புவைச் சார இன்பமே.
ஆகம்
-
மேனி;
தங்குதல்
-
நிலைத்து
உறைதல்;
சம்பு
-
சுகத்தைத்
தருபவன் -
சிவன்;
சார்தல்
-
பொருந்துதல்;
இலக்கணக்
குறிப்பு :
"பாற்றுறைத்
தங்கிய"
- (பாற்றுறையின்கண்
தங்கிய)
- ஏழாம்
வேற்றுமைத் தொகையில் நிலைமொழி
அஃறிணையாக இருந்தால் வலி
மிகும்.
3)
விடையனை நான்மறை விரித்த ஆலனைப்
புடையினில் பெண்ணனைப் பொலியும் கூர்மழுப்
படையனைக் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைச்
சடையனை அடிதொழச் சாரும் இன்பமே.
விரித்தல்
-
விளக்கிச்சொல்லுதல்;
ஆலன்
-
கல்லால
மரத்தின்கீழ் இருப்பவன்;
(சுந்தரர்
தேவாரம் -
7.85.9 - "...கூடலை
யாற்றூரில் ஆலன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே");
புடை
-
பக்கம்;
படை
-
ஆயுதம்;
4)
வடியினார் சூலமும் மழுவும் ஏந்தினார்
கொடியனார் இடுபலி கொள்ளக் கடையடை
படிறனார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைக்
குடியினார் அடிதொழக் கூடும் இன்பமே.
வடி
-
கூர்மை;
கொடி
அனார் -
கொடி
போன்ற பெண்கள்;
இடுபலி
-
இடுகின்ற
பிச்சை;
கடை
அடை -
வீட்டின்
வாயிலை அடைகின்ற;
படிறன்
-
பொய்யன்;
வஞ்சகன்;
குடியினார்
-
வாழ்விடமாக
உடையவர்;
5)
அம்புலி கூவிளம் அரவு சூடியைக்
கொம்பனை யாளொரு கூறு நாடியைப்
பைம்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நம்பனை அடிதொழ நாளும் இன்பமே.
கூவிளம்
-
வில்வம்;
சூடி
-
சூடியவன்;
கொம்பு
அனையாள் -
பூங்கொம்பு
போன்ற பார்வதி;
நாடி
-
நாடியவன்
-
விரும்பியவன்;
(ஆடுபவன்
-
ஆடி,
சூடுபவன்
-
சூடி,
பாடுபவன்
-
பாடி,
என்பன
போல்,
நாடுபவன்
-
நாடி);
(உதாரணம்:
திருவாசகம்
-
8.39.2 - "சடையானே
தழலாடீ");
பைம்புனல்
-
"பைம்புனல்
என்பதில்,
பசுமை
-
புதுமையின்
மேலும்,
குளிர்ச்சியின்மேலும்
நின்றது".
நம்பன்
-
சிவபெருமானுக்கு
ஒரு பெயர்;
விரும்பத்
தக்கவன் என்பது பொருள்;
6)
குரவனார் சடைமிசைக் கோல மதியினார்
அரவனார் ஆதியும் அந்தம் ஆகிய
பரமனார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
பரவினார் பழவினை பறையும் திண்ணமே.
குரவன்
-
தலைவன்;
கோல
மதி -
அழகிய
பிறைச்சந்திரன்;
அரவன்
-
பாம்பை
அணிந்தவன்;
பரவினார்
-
துதிப்பவர்கள்;
(பரவுதல்
-
புகழ்தல்;
துதித்தல்);
பறைதல்
-
அழிதல்;
7)
சூடினார் கொன்றையைச் சுடலை தனில்நடம்
ஆடினார் அன்பருக் கன்பர் அருமறை
பாடினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நாடினார் பழவினை நலியும் திண்ணமே.
நாடினார்
-
நாடியவர்கள்;
நலிதல்
-
அழிதல்;
8)
மதியிலாத் தசமுகன் வாட ஓர்விரல்
நுதியினால் நெரித்தருள் நோக்கும் கயிலையம்
பதியினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மதியினார் அடிதொழ மல்கும் இன்பமே.
மதி
இலாத் தசமுகன் -
அறிவற்ற
இராவணன்;
நுதி
-
நுனி;
அருள்
நோக்குதல் -
அருட்பார்வையால்
நோக்குதல்;
கயிலை
அம் பதியினார் -
அழகிய
கயிலையில் உறைபவர்;
(பதி
-
உறைவிடம்);
(அம்
-
அழகிய;
சாரியை
என்றும் கொள்ளலாம்);
மதியினார்
-
பிறை
சூடியவர்;
(அப்பர்
தேவாரம் -
4.37.6 - "....நெய்த்
தான மேய கூனிள மதியி னானைக்
கூடுமா றறிகி லேனே.");
மல்குதல்
-
மிகுதல்;
நிறைதல்;
9)
பூவினான் மாலிவர் போற்று சோதியான்
சேவினான் திரிபுரம் செற்ற சிலையினான்
பாவினால் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேவினான் அடிதொழ வீடும் வினைகளே.
பூவினான்
-
தாமரைமேல்
இருக்கும் பிரமன்;
மால்
-
திருமால்;
சே
-
எருது;
சிலை
-
வில்;
பாவினால்
-
பாமாலைகளைப்
பாடி;
மேவுதல்
-
உறைதல்;
வீடுதல்
-
நீங்குதல்;
10)
பேய்மனப் பிட்டர்கள் பேசும் பொய்விடும்
ஆய்மல ராற்றொழும் அன்பர்க் கன்பினன்
பாய்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேயவன் அடிதொழ வீடும் வினைகளே.
பிட்டர்
-
பிரட்டர்
(பிரஷ்டர்
என்ற வடசொல்லின் திரிபு)
- நெறியிலிருந்து
வழுவினவர்;
ஆய்மலராற்றொழும்
-
ஆய்மலரால்
தொழும் -
ஆய்ந்தெடுத்த
சிறந்த பூக்களால் வழிபடும்;
மேயவன்
-
உறைபவன்;
11)
துணிமதி சூடியைச் சூலப் படையனை
அணியுமை பங்கனை அரையில் நாணெனப்
பணியணி கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மணியினை அடிதொழ மல்கும் இன்பமே.
துணிமதி
-
பிறைச்சந்திரன்;
(துணிதல்
-
வெட்டுண்ணுதல்);
அணி
-
அழகு;
அரையில்
நாண் என -
இடுப்பில்
அரைநாணாக;
பணி
அணி -
நாகப்பாம்பை
அணிந்த;
(பணி
-
நாகம்);
கொள்ளிடப்
பாங்கர்ப் பாற்றுறை
மணியினை -
கொள்ளிடக்
கரையில் உள்ள திருப்பாற்றுறையில்
உறைகின்ற மணி போன்றவனை;
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம் - 'விளம் விளம் மா விளம்' என்ற வாய்பாடு.
மூன்றாம் சீர் (மாச்சீர்) குறில் / குறில்+ஒற்று என்று முடியும்.
இவ்வமைப்புப் பெரும்பாலும் கீழ்க்காணும் தேவாரப் பதிகங்களை ஒத்தது.
சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்"
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்"
அப்பதிகங்களில் அடிதோறும் ஈற்றுச் சீர் கூவிளம். ஆனால் இப்பதிகத்தில் அடி ஈற்றுச் சீரில் அக்கட்டுப்பாடு இன்றி எவ்வகை விளச்சீரும் வரலாம்.
2) பாற்றுறை - ஆதிமூலேஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=116
----------- --------------