Saturday, April 30, 2016

03.01-91 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
91)
ஒளித்தேன் இருளை உளத்திலென்றும் பொய்யில்
களித்தேன்; பலரிடம் காசுக் கிளித்தேன்;
புளித்தேன்இன் றிவ்வாழ்வு; பொன்னம் பலத்தாய்,
அளித்தேன் சுரக்க அருள்.



ஒளித்தேன் இருளை உளத்தில்; என்றும் பொய்யில்
களித்தேன்; பலரிடம் காசுக்கு இளித்தேன்;
புளித்தேன் இன்று இவ்வாழ்வு; பொன்னம்பலத்தாய்,
அளித் தேன் சுரக்க அருள்.


இருள் - அறியாமை; குற்றம்;
உளத்தில் - உள்ளத்தில்;
பொய் - நிலையற்றது; மாயை;
களித்தேன் - மகிழ்ந்தேன்;
புளித்தேன் - எனக்குப் புளித்துவிட்டது; (புளித்தல் - வெறுத்தல்);
பொன்னம்பலத்தாய் - பொன்னம்பலத்தில் ஆடுபவனே;
அளித்தேன் - அளி + தேன் - அன்புத் தேன்;
சுரத்தல் - ஊறுதல்; To spring forth, stream out, gush, flow;



92)
அருள்வாய்நீ என்றே அடிஅடைந்தேன்; ஐயா!
இருள்போய் அகல எழுந்த ஒருஞாயி(று)
அன்றோநீ! அண்ணா மலையாய்! உனைப்பாடி
நின்றேன்நான்; ஏந்தக்கை நீட்டு.



அருள்வாய் நீ என்றே அடி அடைந்தேன்; ஐயா!
இருள் போய்அகல எழுந்த ஒரு ஞாயிறு
அன்றோ நீ! அண்ணாமலையாய்! உனைப் பாடி
நின்றேன் நான்; ஏந்தக் கை நீட்டு.


இருள் போய்அகல - இருள் முழுதும் நீங்க; ("போய் அகல" - ஒரு பொருட்பன்மொழி);
(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.2 - "அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது ..." - );
ஞாயிறு - சூரியன்;
ஒரு - ஒப்பற்ற;
ஏந்த - தாங்க; ஏந்திக்கொள்ள;



93)
நீட்டிய கையினில், நேர்இலா மாங்கனி
காட்டினாய் காரைக்கால் அம்மைக்கு; சூட்டினேன்
பாட்டினால் மாலை; பரம!உனை என்னெஞ்சில்
நாட்டினேன்; நின்ருள் நல்கு.



நீட்டிய கையினில், நேர் இலா மாங்கனி
காட்டினாய் காரைக்கால் அம்மைக்கு; சூட்டினேன்
பாட்டினால் மாலை; பரம! உனை என் நெஞ்சில்
நாட்டினேன்; நின் அருள் நல்கு.


(நேர் இலா - ஒப்பு இல்லாத - ஒப்பற்ற;
சூட்டினேன் பாட்டினால் மாலை - உனக்குப் பாமாலை சூட்டினேன்;
பரம - பரமனே;
நாட்டுதல் - நடுதல்; பதித்தல்;
நல்குதல் - அளித்தல்;)



94)
நல்குரவு போக்கிடும் நற்பெரும் செல்வமே!
செல்கதிகாட் டீசா! திருவடி வெல்கவே!
வாழ்க திருநாமம்! அண்ணா மலையானே!
ஊழ்வினை எல்லாம் ஒழி.



நல்குரவு போக்கிடும் நற்பெரும் செல்வமே!
செல்கதி காட்டு ஈசா! திருவடி வெல்கவே!
வாழ்க திருநாமம்! அண்ணாமலையானே!
ஊழ்வினை எல்லாம் ஒழி.


(நல்குரவு - வறுமை;
செல் கதி - செல்கின்ற வழி;
செல்கதி காட்டு ஈசா - செல்கின்ற வழியைக் காட்டும் ஈசனே;
ஊழ்வினை - பழவினை);



95)
ஒழிவின்றித் தீவினை ஒன்றே புரிந்து
பழிபெருக்கும் என்னைஉனைப் பாடும் வழிப்புகுத்தி,
அன்புள்ளே ஊறவைத்தாய்; அண்ணா மலையானே!
என்பொன்னே! கைம்மா றிலேன்.



ஒழிவு இன்றித் தீவினை ஒன்றே புரிந்து
பழி பெருக்கும் என்னை, உனைப் பாடும் வழிப் புகுத்தி,
அன்பு உள்ளே ஊறவைத்தாய்; அண்ணாமலையானே!
என் பொன்னே! கைம்மாறு இலேன்.

(
பாடும் வழிப்புகுத்தி - பாடும் வழியில் புகச் செய்து;
கைம்மாறு - பிரதி உபகாரம்;
பொன்னே - பொன் போன்றவனே;
கைம்மாறு இலேன் - பிரதியுபகாரம் இல்லேன்;)


(திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 8.22.10 -
"தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் ... ஈசா உடலிடங் கொண்டாய் யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே)



96)
இலேன்நற் குணங்கள்; இனியநின் நாமம்
சொலேன்;நான் மனத்திலும் தூயேன் அலேன்;எனினும்
ஐயா, அருள்புரிந்தாய்; அண்ணா மலையாய்!தென்
ஐயாறா! என்னேநின் அன்பு !



(இலேன் - நான் இல்லாதவன்;
சொலேன் - நான் சொல்லாதவன்;
எனினும் - இருந்தாலும்;
ஐயன் - தலைவன்;
தென் - இனிய;
ஐயாறன் - ஐயாறு எனும் தலத்தில் உறைபவன்;)


97)
"அன்பருக்ன்பனே! ஆறோடும் சென்னியனே!
என்பரக்ணி ஈசனே! இன்பனே!"
என்றுபல சொல்லிஉனை ஏத்திடும் பத்தருடன்
சென்று கலக்கஅருள் செய்.



"அன்பருக்கு அன்பனே! று ஓடும் சென்னியனே!
என்பு அவு அக்கு அணி ஈசனே! இன்பனே!"
என்று பல சொல்லி உனை ஏத்திடும் பத்தருடன்
சென்று கலக்க அருள்செய்.


(சென்னி - தலை;
என்பரவக்கணி - என்பு அரவு அக்கு அணி;
என்பு - எலும்பு;
அரவு - பாம்பு;
அக்கு - உருத்திராக்ஷம்;
அணி - அணிகின்ற;
ஏத்துதுதல் - துதித்தல்; புகழ்தல்;
சென்று கலத்தல் - போய்ச் சேர்ந்து இருத்தல்;)


98)
செய்த வினைகளின் சீற்றம் ஒழிந்திடக்
கொய்தமலர் கொண்டடி போற்றிஎயில் எய்த
வரைவில்லேந்ண்ணா மலையானே காஎன்
றுரைசெய் மனமே;உய் வுண்டு.



செய்த வினைகளின் சீற்றம் ஒழிந்திடக்,
கொய்த மலர் கொண்டு அடி போற்றி, "எயில் எய்த
வரைவில்ந்து அண்ணாமலையானே! கா" என்று
உரைசெய் மனமே; உய்வு உண்டு.


கொய்த மலர் - புதிதாகப் பறித்த பூக்கள்;
எயில் - கோட்டை; முப்புரங்கள்;
வரை வில் ஏந்து - மலையை வில்லாக ஏந்திய;
கா - காப்பாயாக;


99)
உண்டுண் டுடல்பெருக்கி ஓயா துழன்று,மால்
கொண்டு கொடுவினையே கூட்டுநெஞ்சே! பண்டு
பிரமனரி தேடு பெரும்சுடரோன் மேல்பாச்
சரம்தொடுத் தேத்துவாய் தாள்!



உண்டுண்டு உடல் பெருக்கி, ஓயாது உழன்று, மால்
கொண்டு கொடுவினையே கூட்டும் நெஞ்சே! பண்டு
பிரமன் அரி தேடு பெரும் சுடரோன்மேல்
பாச்சரம் தொடுத்து ஏத்துவாய் தாள்!


(உண்டு உண்டு - சாப்பிட்டுச் சாப்பிட்டு;
மால் - மயக்கம்;
கொடுவினை - பாவச்செயல்;
கூட்டுநெஞ்சே - கூட்டுகிற நெஞ்சமே;
பண்டு - பண்டை; முன்னொரு காலம்;
பிரமனரி - பிரமன் அரி - பிரம்மா விஷ்ணு
பாச்சரம் - பாமாலை; சரம் - மாலை;)



100)
தாள்களில் நித்தம் தமிழ்ப்பாக்கள் சாத்து,நெஞ்சே!
வேள்பொடி ஆக விழித்த,உமை கேள்வன்,
"அரையனே! அண்ணா மலையனே!" என்றென்
றுரைப்பாரைக் காக்கும் ஒளி!



தாள்களில் நித்தம் தமிழ்ப்பாக்கள் சாத்து, நெஞ்சே!
வேள் பொடி ஆக விழித்த, உமைகேள்வன்,
"அரையனே! அண்ணாமலையனே!" என்றென்று
உரைப்பாரைக் காக்கும் ஒளி!


தாள்களில் - இரு திருவடிகளில்;
நித்தம் - எப்பொழுதும்;
சாத்துதல் - அணிவித்தல்;
வேள் - மன்மதன்;
பொடி - சாம்பல்;
உமை கேள்வன் - உமைக்குக் கணவன் - உமாபதி;
அரையன் - அரசன்;
என்றென்று - என்று என்று - என்று பலமுறை சொல்லி;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இந்த வெண்பா அந்தாதி மாலை, முதற் பாடல் "ஒளிப்பிழம்பாய் நின்ற" என்று தொடங்கி, நூறாம் பாடலில் "காக்கும் ஒளி" என்று முடிந்து, மண்டலித்து வருகின்றது.



03.01-81 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
81)
ஒளிரும் சடையான்; உமைசேர் இடத்தான்;
களிற்றுரி போர்த்தான்; கழலைத் துளியும்
கருதா திருந்தேன் கருத்தில் புகுந்தான்
அருண மலையான் அவன்.

ஒளிரும் சடையான்; உமைசேர் இடத்தான்;
களிற்று உரி போர்த்தான்; கழலைத் துளியும்
கருதாது இருந்தேன் கருத்தில் புகுந்தான்
அருண மலையான் அவன்.

(ஒளிர்தல் - ஒளிவீசுதல்; பிரகாசித்தல்;
உமை சேர் இடத்தான் - உமை அம்மையை இடப்பாகத்தில் உடையவன்;
களிற்று உரி - யானைத் தோல்;
துளியும் - சிறிதளவும்;
கழலைத் துளியும் கருதாது இருந்தேன் கருத்தில் புகுந்தான் - அவன் திருவடியைச் சிறிதும் எண்ணாது இருந்த என் மனத்தில் புகுந்தவன்;
அருண மலையான் - அண்ணாமலையான்;)

82)
அவனை மறந்திருவர் "யான்பரம்" என்ன,
அவரிடையே பேரொளி ஆன சிவனை
அடியேன் மறப்பேனோ? அந்த இடபக்
கொடியோன் அடியே குறி.

அவனை மறந்து இருவர் "யான் பரம்" என்ன,
அவரிடையே பேரொளி ஆன சிவனை
அடியேன் மறப்பேனோ? அந்த இடபக்
கொடியோன் அடியே குறி.

(யான் பரம் - நானே மேலான தெய்வம்;
இடபம் - எருது;
இடபக் கொடியோன் - இடபச் சின்னம் பொறித்த கொடியை உடைய சிவன்;
குறி - குறிக்கோள்; நோக்கம்;)

83)
குறித்தநாள் வந்ததும் கொண்டுசெல்வான் காலன்;
அறிவார்ஆர் அந்நாளை? "ஐயா, வெறிகமழ்
கொன்றைசூண்ணா மலையாய்,காஎன்றுநெஞ்சே 
இன்றே இறைஞ்சிட எண்ணு.

குறித்த நாள் வந்ததும் கொண்டு செல்வான் காலன்;
அறிவார் ஆர் அந்நாளை? "ஐயா, வெறி கமழ்
கொன்றை சூடு அண்ணாமலையாய், காஎன்று, நெஞ்சே
இன்றே இறைஞ்சிட எண்ணு.

(ஆர் - யார்;
வெறி - மணம்; வாசனை;
வெறி கமழ் கொன்றை சூடு அண்ணா மலையாய் - மணம் கமழும் கொன்றைமலரை அணிந்த அண்ணாமலையானே;
கா - காத்தருள்க;)

(சம்பந்தர் தேவாரம் - 2.41.3 -
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய், ஆரறிவார்
சாநாளும் வாழ்நாளும்; சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளும் தலைசுமப்பப், புகழ்நாமம் செவிகேட்ப,
நாநாளும் நவின்றேத்தப், பெறலாமே நல்வினையே.
--- நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்?)

84)
எண்ணும் எழுத்தும், இறைவனே நீஆனாய்;
விண்ணும் நிலனும் மிகுந்துநின்றாய்; பெண்ணாண்
எனஆனாய்; உன்னுருவை எப்படிச் சொல்வேன்?
எனைஆள் பிரானே, இயம்பு.

எண்ணும் எழுத்தும், இறைவனே நீ ஆனாய்;
விண்ணும் நிலனும் மிகுந்து நின்றாய்; பெண் ஆண்
என ஆனாய்; உன்ருவை எப்படிச் சொல்வேன்?
எனை ஆள் பிரானே, இயம்பு.

விண்ணும் நிலனும் மிகுந்து நின்றாய் - மண்ணையும் ஆகாயத்தையும் கடந்து உயர்ந்தவனே;
பெண் ஆண் என ஆனாய் - ஆணும் பெண்ணும் ஆனவனே;
எனை ஆள் பிரானே - என்னை ஆளும் தலைவனே;

(அப்பர் தேவாரம் - 6.55.7 - "பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி .... எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி...");
(காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11.4.61 -
"அன்றும் திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்!
இன்றும் திருஉருவம் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்,
எவ்வுருவோ நின்னுருவம் ஏது")

85)
இயம்பும் எழுத்தஞ்சை என்நா; தலைமேல்
உயரும் எனதுகைகள்; உன்னை நயந்துருகும்
என்நெஞ்சு; மால்அயனுக் கெட்டா முழுமுதலே!
வன்னஞ்சுண் டோனே!கா வாய்.

இயம்பும் எழுத்து அஞ்சை என் நா; தலைமேல்
உயரும் எனது கைகள்; உன்னை நயந்து உருகும்
என் நெஞ்சு; மால்அயனுக்கு எட்டா முழுமுதலே!
வன்னஞ்சு உண்டோனே! காவாய்.

(இயம்புதல் - சொல்லுதல்;
எழுத்து அஞ்சு - நமசிவாய என்ற திருவைந்தெழுத்து;
நயத்தல் - விரும்புதல்;
வன்னஞ்சு - கொடிய நஞ்சு;
காவாய் - காப்பாயாக;)

86)
காவாய் கருணைக் கடலே! பிறவாத
மூவாத முக்கண் முதல்வனே! தேவா!
மறைபாடும் அண்ணா மலையானே! வந்து
குறைபாடு தீர்த்தெனைஆட் கொள்.

காவாய் கருணைக் கடலே! பிறவாத,
மூவாத, முக்கண் முதல்வனே! தேவா!
மறை பாடும் அண்ணாமலையானே! வந்து,
குறைபாடு தீர்த்து, எனை ஆட்கொள்.

(காவாய் கருணைக் கடலே - தயாசாகரமே! என்னைக் காத்தருள்வாயாக;
பிறவாத, மூவாத, முக்கண் முதல்வனே - பிறப்பும் மூப்பும் இல்லாத ஆதி மூர்த்தியே; முக்கண்ணனே;
மறை பாடும் அண்ணாமலையானே - வேதங்கள் பாடும் அண்ணாமலையானே; (மறை - வேதம்);
குறைபாடு - குறை; குற்றம்; மனக்குறை; )

87)
ஆட்கொள்ள வாராய் அரனே!உன் மேல்தீரா
வேட்கை உடையேன் வினைதீர்ப்பாய்! வாட்கண்
மடவார்கள் மையலில் வாடும் எனைக்கா!
சடையாய்!நின் தாளே சரண்!

ஆட்கொள்ள வாராய் அரனே! உன் மேல் தீரா
வேட்கை உடையேன் வினை தீர்ப்பாய்! வாள்-கண்
மடவார்கள் மையலில் வாடும் எனைக் கா!
சடையாய்! நின் தாளே சரண்!

(வேட்கை - விருப்பம்;
வாட்கண் - வாள் கண் - ஒளி பொருந்திய கண்;
மடவார்கள் - பெண்கள்;
சடையாய் - சடை உடையவனே;
சரண் - புகல்; அபயம்;)

88)
சரணடைந்த வானோர் தமைக்காக்க, எங்கும்
பரவிய நஞ்சுண்டீர்; பாடிப் பரவும்
அடியேனை ஏற்ருள்வீர் அண்ணா மலையீர்!
அடிகேள்! அடைந்தேன் அடி.

சரண் அடைந்த வானோர் தமைக் காக்க, எங்கும்
பரவிய நஞ்சுண்டீர்; பாடிப் பரவும்
அடியேனை ஏற்றுஅருள்வீர் அண்ணாமலையீர்!
அடிகேள்! அடைந்தேன் அடி.

சரண் அடைந்த வானோர்தமைக் காக்க, எங்கும் பரவிய நஞ்சுண்டீர் - அடைக்கலம் அடைந்த தேவர்களைக் காப்பதற்காக, எங்கும் பரவிய விடத்தை உண்டவரே;
பாடிப் பரவும் அடியேனை ஏற்றுஅருள்வீர் அண்ணாமலையீர் - அண்ணாமலையாரே! உம்மைப் பாடிப் போற்றும் அடியேனை ஏற்று அருள்புரிவீராக;
அடிகேள்! அடைந்தேன் அடி - சுவாமீ, உம் திருவடியில் சரண் புகுந்தேன்;
(பரவுதல் - விரிந்து பெருகுதல்; போற்றித் துதித்தல்;
அடிகேள் - அடிகளே - இறைவனே)

89)
அடியார் குழாத்தை அணுகேன்;நின் தாளில்
கடியார் மலர்தூவேன்; கங்கை முடிமேல்
அணிஅரனே! அண்ணா மலையானே! என்றன்
பணியா மனம்சீர்ப் படுத்து.

அடியார் குழாத்தை அணுகேன்; நின் தாளில்
கடிர் மலர் தூவேன்; கங்கை முடிமேல்
அணி அரனே! அண்ணாமலையானே! என்ன்
பணியா மனம் சீர்ப்படுத்து.

(அடியார் குழாத்தை அணுகேன் - அடியவர் திருக்கூட்டத்தை அணுகமாட்டேன்;
நின் தாளில் கடி ஆர் மலர் தூவேன் - உன் திருவடியில் வாசனை பொருந்திய பூக்களைத் தூவ மாட்டேன்;
கங்கை முடிமேல் அணி அரனே! - கங்காதரனே;
அண்ணாமலையானே! - அண்ணாமலையானே;
என்ன் பணியா மனம் சீர்ப்படுத்து - வழிபாடு செய்ய நினையாத, அடங்காத என்னுடைய மனத்தைச் சரிப்படுத்துவாயாக;)

90)
படுத்தும் மனத்தைப் படியவைப்பாய், அன்று
கடுத்துப் பெருகிய கங்கை தடுத்தவனே!
என்னகந்தைக் காரிருள் இல்லாமல் போய்விட
உன்னடியே காட்டும் ஒளி.

படுத்தும் மனத்தைப் படியவைப்பாய், - எனக்குத் துன்பம் செய்யும் மனத்தை அடங்கவைப்பாயாக;
அன்று கடுத்துப் பெருகிய கங்கை தடுத்தவனே! - முன்பு, மிக விரைந்து பாய்ந்த கங்கையைச் சடையில் தடுத்தவனே; (கடுத்தல் - விரைதல்;
என்கந்தைக் காரிருள் இல்லாமல் போய்விட, உன்டியே காட்டும் ஒளி. - என் ஆணவம் என்ற பேரிருள் நீங்க, உன் திருவடியே ஒளி காட்டும்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்