04.19 – கஞ்சனூர்
2013-11-02
கஞ்சனூர்
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. அந்தாதியாக அமைந்தது;
பாடல்தோறும் ஈற்றடியின் மூன்றாம்சீர் அடுத்த பாடலின் முதற்சீரோடு அந்தாதித்தொடை அமைய மண்டலித்து வரும் 11 பாடல்கள். முதற் பாடல் 'வாராரும்' என்று தொடங்கிப் 11-ஆம் பாடல் 'வார்சடையாய் அடிபோற்றி' என்று நிறைவுறுகின்றது. )
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")
1)
வாராரும் வனமுலையாள் மலைமங்கை ஒருபங்கா
காராரும் பொழில்சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே
ஓராதார்க் கரியானே ஒளித்தூணே அடியார்தம்
தீராத வினைதீர்க்கும் சிவனேநின் அடிபோற்றி.
வார்
-
முலைக்கச்சு;
ஆர்தல்
-
பொருந்துதல்;
வனமுலை
-
அழகிய
முலை;
(அப்பர்
தேவாரம் -
6.81.5 - "வாரார்ந்த
வனமுலையாள் பங்கன் கண்டாய்");
கார்
ஆரும் பொழில் சூழ்ந்த
கஞ்சனூர்க் கற்பகமே -
மேகம்
பொருந்தும் சோலை சூழ்ந்த
கஞ்சனூரில் உறைகின்ற கற்பகமரம்
போன்றவனே;
ஓராதார்க்கு
அரியானே -
எண்ணாதவர்களுக்கு
அரியவனே;
(ஓர்தல்
-
தியானித்தல்);
ஒளித்தூண்
-
எல்லையின்றி
நீண்ட சோதி;
தாணு;
2)
சிவனேநின் மலனேவெண் திங்களணி செஞ்சடையாய்
கவினாரும் பொழில்சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே
பவனேமுன் நான்முகனும் பாம்பணைமேல் துயின்றானும்
உவனாரென் றறியாத ஒளித்தூணே அடிபோற்றி.
நின்மலன்
-
மலமற்றவன்;
கவின்
-
அழகு;
பவன்
-
என்றும்
இருப்பவன்;
சிவன்;
பாம்பணைமேல்
துயின்றான் -
ஆதிசேஷனாகிய
படுக்கையின்மேல் துயிலும்
திருமால்;
உவன்
-
முன்நிற்பவன்
(He
who is yonder); ஆர்
-
யார்;
(11.39.1
- நம்பியாண்டார்
நம்பிகள் -
ஆளுடைய
பிள்ளையார் திருத்தொகை -
"காழி
முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று
காட்டவலான்"
--
ஊழி
முதல்வன் -
சிவபெருமான்.
'அவன்
சுட்டிக் காட்ட ஒண்ணாதவனாயினும்
சுட்டிக்காட்ட வல்லவன்'
என்க.)
3)
ஒளித்தூணே விரைந்திழிந்த உயர்கங்கை தனைச்சடையில்
ஒளித்தானே ஓர்தலையில் ஊரார்பெய் பலிகொண்டு
களித்தானே கவின்பொழில்சூழ் கஞ்சனூர்க் கற்பகமே
அளித்தானே அமுதுவிடம் ஆர்ந்தானே அடிபோற்றி.
ஒளித்தான்,
களித்தான்,
அளித்தான்
-
ஒளித்தவன்,
களித்தவன்,
அளித்தவன்;
பெய்தல்
-
கலம்
முதலியவற்றில் இடுதல்;
பலி
-
பிச்சை;
அளித்தானே
அமுது விடம் ஆர்ந்தானே -
அமுது
அளித்தவனே,
விடம்
உண்டவனே;
(ஆர்தல்
-
உண்ணுதல்);
4)
ஆர்ந்தவனே அருநஞ்சை அரியயன்நே டொளித்தூணே
சார்ந்தவருக் கன்புடையாய் தலைமீது பாந்தள்வெண்
காந்தளணி கின்றவனே கஞ்சனூர்க் கற்பகமே
சாந்தமென நீறணியும் சங்கரனே அடிபோற்றி.
ஆர்ந்தவனே
அருநஞ்சை -
அரிய
விடத்தை உண்டவனே;
அரி
அயன் நேடு ஒளித்தூணே
-
திருமாலும்
பிரமனும் தேடிய சோதியே;
(நேடுதல்
-
தேடுதல்);
சார்ந்தவருக்கு
அன்பு உடையாய் -
அடி
அடைந்தவர்களுக்கு அன்பு
உடையவனே;
தலைமீது
பாந்தள் வெண்காந்தள்
அணிகின்றவனே -
முடிமேல்
பம்பையும் வெண்காந்தள்
மலரையும் அணிந்தவனே;
(பாந்தள்
-
பாம்பு
);
(வெண்
காந்தள் -
கோடல்);
(ஸம்பந்தர்
தேவாரம் -
2.29.9 - "கோடலொடு
கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பன்"
- கோடல்
-
வெண்காந்தள்;)
கஞ்சனூர்க்
கற்பகமே -
கஞ்சனூரில்
உறைகின்ற கற்பகமே;
சாந்தம்
என நீறு அணியும்
சங்கரனே -
சந்தனம்போல்
திருநீற்றைத் தரிக்கும்
சங்கரனே;
5)
சங்கரனே சதாசிவனே தடவரைபோல் வந்துபொரு
வெங்கரியை உரிசெய்த வித்தகனே விண்ணிழிந்த
கங்கையடை செஞ்சடையாய் கஞ்சனூர்க் கற்பகமே
பொங்கியெழும் ஒளித்தூணே போதாநின் அடிபோற்றி.
தட
வரைபோல் வந்து பொரு வெங்கரியை
உரி செய்த -
பெரிய
மலைபோல் வந்து போர்செய்த
கொடிய யானையின் தோலை உரித்த;
(உரிசெய்தல்
-
தோலை
உரித்தல்);
வித்தகன்
-
வல்லவன்;
விண்
இழிந்த கங்கை அடை
செஞ்சடையாய் -
வானிலிருந்தி
கீழே பாய்ந்த கங்கையைச்
செஞ்சடையில் அடைத்தவனே;
போதன்
-
ஞானன்;
6)
போதாரும் சடையானே புகழ்பாடு சுந்தரர்க்காத்
தூதேகும் தோழாமால் தொழுதேத்தும் ஒளித்தூணே
காதோர்வெண் குழையானே கஞ்சனூர்க் கற்பகமே
யாதோரொப் பில்லாத அற்புதனே அடிபோற்றி.
போது
ஆரும் சடையானே -
மலர்களைச்
சடையில் அணிந்தவனே;
புகழ்பாடு
சுந்தரர்க்காத் தூது ஏகும்
தோழா -
பாமாலைகள்
பாடிய சுந்தரருக்காகத்
(திருவாரூரில்
பரவை மனைக்குத்)
தூது
செல்லும் தோழனே;
மால்
தொழுதேத்தும் ஒளித்தூணே
-
திருமால்
வணங்கிய சோதியே;
காது
ஓர் வெண் குழையானே -
ஒரு
காதில் வெண்குழையை அணிந்தவனே;
(அர்தநாரீஸ்வரன்);
யாது
ஓர் ஒப்பு இல்லாத -
எவ்வித
ஒப்பும் இல்லாத;
7)
அற்புதனே அயன்மாலும் அறியாத ஒளித்தூணே
வெற்புதனை வில்லாக்கி வியனரணம் எய்தவனே
கற்பனையைக் கடந்துநிற்கும் கஞ்சனூர்க் கற்பகமே
மற்புயமெட் டுடையானே மணிகண்டா அடிபோற்றி.
வெற்புதனை
-
மலையை;
வியன்
அரணம் -
பெரிய
மதில்கள் -
முப்புரங்கள்;
(திருநாவுக்கரசர்
தேவாரம் -
6.5.1 - "... வில்லால்
வியனரணம் எய்தாய் போற்றி
...");
கற்பனை
-
அறிவு;
(பெரிய
புராணம் -
தில்லைவாழந்தணர்
புராணம் -
"கற்பனை
கடந்த சோதி கருணையே யுருவ
மாகி");
மற்புயம்
எட்டு -
வலிமை
மிக்க எட்டுப் புயங்கள்;
(மல்
-
வலிமை;
புயம்
-
தோள்);
மணிகண்டன்
-
நீலகண்டன்;
8)
மணிகண்டா மலரவன்மால் வணங்கநின்ற ஒளித்தூணே
அணிகுன்றின் அடியரக்கன் அழநெரித்தாய் வெண்திங்கட்
கணியொன்று புனைவோனே கஞ்சனூர்க் கற்பகமே
பணிகண்டு பார்த்தற்குப் படையீந்தாய் அடிபோற்றி.
மலரவன்
-
பூமேல்
உறையும் பிரமன்;
அணி
குன்று -
அழகிய
மலை -
கயிலைமலை;
கணி
-
கண்ணி
என்பதன் இடைக்குறை விகாரம்;
கண்ணி
-
தலையில்
அணியும் மாலைவகை;
(சம்பந்தர்
தேவாரம் -
2.18.5 - "... கணிநீலவண்டார்
குழலாள் இவள்தன் ..."
- "this lady on whose tresses of hair black bees hum in the
chaplets" - கணி
--
கண்ணி
:
chaplet worn on the head - Translation: V.M.Subramanya Ayyar);
பணி
கண்டு பார்த்தற்குப் படை
ஈந்தாய் -
அருச்சுனனுடைய
தொண்டினைக் கண்டு அவனுக்குப்
பாசுபதாஸ்திரம் அளித்தவனே;
(அப்பர்
தேவாரம் -
6.19.11 - "... பார்த்தனைப்
பணிகண்டு பரிந்தான் தன்னைப்
...");
9)
படைப்பவனே முடிவிலெலாம் துடைப்பவனே மாலயனார்
இடைப்பெருகும் ஒளித்தூணே இடுமினென் றேந்திழையார்
கடைப்பலிக்கு நடப்பவனே கஞ்சனூர்க் கற்பகமே
சடைப்புனித கங்கையெனும் சலமுடையாய் அடிபோற்றி.
துடைத்தல்
-
ஒடுக்குதல்;
பெருகுதல்
-
வளர்தல்
(To
grow); அளவுமிகுதல்;
இடுமின்
என்று ஏந்திழையார் கடைப்
பலிக்கு நடப்பவனே -
'இடுங்கள்'
என்று
பெண்களிடம் பிச்சை ஏற்க
நடப்பவனே;
(கடை
-
வாயில்;
ஏழாம்
வேற்றுமை உருபு)
;('இடுங்கள்'
என்று
பெண்கள் இருக்கும் இல்லங்களின்
வாயிலுக்கு நடப்பவனே -
என்றும்
பொருள்கொள்ளலாம்);
சடைப்
புனித கங்கையெனும் சலமுடையாய்
-
சடையில்
தூய கங்கை என்ற ஆற்றை உடையவனே;
("சடையை
உடைய புனிதனே;
கங்கையென்ற
நதியை அணிந்தவனே;"
என்றும்
பொருள்கொள்ளலாம்);
சலம்
-
ஜலம்
-
நீர்;
10)
சலமுடைய சொல்லுரைத்தல் தவமாக்கொள் சழக்கருக்கு
நலமிலனே நான்முகன்மால் நடுவெழுந்த ஒளித்தூணே
கலமுடையார் தலையுடையாய் கஞ்சனூர்க் கற்பகமே
வலமுடையாய் மாதுதிகழ் வாமத்தாய் அடிபோற்றி.
சலம்
-
வஞ்சனை;
பொய்ம்மை;
தவமாக்கொள்
-
தவமாகக்
கொள்கின்ற;
சழக்கருக்கு
-
தீயவர்களுக்கு;
நலம்
இலனே -
நலம்
இல்லாதவனே -
நன்மையைக்
கொடாதவனே;
(அப்பர்
தேவாரம் -
4.11.6 - "சலமிலன்
சங்கரன் சார்ந்தவர்க்கு
அலால் நலமிலன்...");
கலம்
முடை ஆர் தலை உடையாய் -
பிச்சைப்)பாத்திரமாகப்
புலால் நாறும் மண்டையோட்டை
உடையவனே;
வலம்
-
வெற்றி;
வலிமை;
வலப்பக்கம்;
மாது
திகழ் வாமத்தாய் -
உமையம்மையை
இடப்பக்கத்தில் உடையவனே;
(வாமம்
-
இடப்பக்கம்);
11)
வாமத்துக் காலெடுத்த மாநடனே கடல்கடைய
ஓர்மத்தைத் தாங்கியவன் அயனறியா ஒளித்தூணே
காமுத்தா எனிலருளும் கஞ்சனூர்க் கற்பகமே
மாமத்த மலரணிந்த வார்சடையாய் அடிபோற்றி.
வாமத்துக்
கால் எடுத்த மாநடனே -
இடது
காலை உயர்த்தி ஆடும் நடராஜனே;
(வாமம்
-
இடது
பக்கம்);
(எடுத்தல்
-
உயர்த்துதல்);
(நடன்
-
கூத்தன்);
கடல்
கடைய ஓர் மத்தைத் தாங்கியவன்
அயன் அறியா ஒளித்தூணே -
தேவர்களும்
அசுரர்களும் அமுதம் வேண்டிப்
பாற்கடலில் மந்தரமலையை மத்தாக
நட்டுக் கடைந்தபோது,
அந்த
மத்தை ஆமை வடிவில் சென்று
தாங்கிய திருமாலும் பிரமனும்
அறியாத ஒளித்தூணாக நினறவனே;
"கா
முத்தா"
எனில்
அருளும் கஞ்சனூர்க் கற்பகமே
-
"காக்கின்ற
முக்தனே /
காத்தருளாய்
முக்தனே"
என்று
வேண்டினால் அருள்கின்றவனே,
கஞ்சனூரில்
உறைகின்ற,
கற்பகமரம்
ஒத்தவனே;
(முத்தன்
-
[இயல்பாகவே
பாசங்களின் நீங்கியவன்]
சிவபிரான்);
மா
மத்த மலர் அணிந்த வார்சடையாய்
அடிபோற்றி -
அழகிய
ஊமத்த மலரை அணிந்த,
நீண்ட
சடை உடையவனே,
உன்
திருவடிகளுக்கு வணக்கம்;
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=907
----------- --------------