Tuesday, July 8, 2025

V.045 - எங்களிறை - கோமூத்திரி

2018-01-16

V.045 - எங்களிறை - ( கோமூத்திரி )

---------------------------------

(குறள்வெண் செந்துறை)


முற்குறிப்பு - யாப்புக் குறிப்பு : கோமூத்திரி = இரண்டிரண்டு வரியாக ஒரு செய்யுள் எழுதப்பட்டு மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே வருவது.

= அதாவது - 2, 4, 6, 8, , , என இரட்டைப்படை இடங்களில் வரும் எழுத்துகள் ஈரடிகளிலும் ஒன்றாகவே அமையும்.


ங்

ளி

றை

கு

ண்

ணி

வே

தி

ன்

தி

ங்

ளி

கு

ரு

ணி

வே

ணி

ன்


எங்க ளிறைகுண் டலமணி வேதியன்

திங்க ளிலகு படருமணி வேணியன்.


பதம் பிரித்து:

எங்கள் இறை, குண்டலம் அணி வேதியன்,

திங்கள் இலகு படரு(ம்) மணி வேணியன்.


எங்கள் இறை - எம் இறைவன்;

குண்டலம் அணி வேதியன் - காதில் குண்டலம் அணிந்தவன், வேதம் ஓதுபவன், வேதங்களின் பொருள் ஆனவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.4 - "குண்டலந் திகழ் காதுடையானை"); (வேதியன் - வேதம் ஓதுபவன்; வேதப்பொருள் ஆனவன்);

திங்கள் இலகு படரும் மணி வேணியன் - சந்திரன் ஒளிவீசும், படர்ந்த அழகிய பவளம் போன்ற சடை உடையவன்; (இலகுதல் - விளங்குதல்); (மணி - அழகு; பவளம்); (அணி - அழகு); (வேணி - சடை);


பிற்குறிப்பு : இப்பாடலில் முதலடியின் ஈற்று-எழுத்தும் இரண்டாம் அடியின் முதல்-எழுத்தும் புணர்ச்சியோடு நோக்கினும் பாடலின் கோமூத்திரி அமைப்புக் கெடாது.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment