03.06 – மடக்கு
2007-07-19
3.6.21) அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு
-------------------------------------------------
அம்மையும் அப்பனும் ஆனவன் அன்பர்கட்
கம்மையும் ஆவான் துணைகண்டத் தம்மையும்
உண்ணஞ்சால் உண்டான தோயா தடிபோற்றி
உண்ணஞ்சால் உண்டேயிங் குய்வு!
பதம்
பிரித்து:
அம்மையும்
அப்பனும் ஆனவன் அன்பர்கட்கு
அம்மையும்
ஆவான் துணை;
கண்டத்து
அம்-மையும்
உண்
நஞ்சால் உண்டானது;
ஓயாது
அடிபோற்றி
உள்
நஞ்சால் உண்டே இங்கு உய்வு!
அம்மை
-
1) தாய்;
2) வருபிறப்பு
(இனி
வரும் பிறப்பு);
மை
-
கருநிறம்;
உண்ணஞ்சால்
-
1) உண்
நஞ்சால்;
2) உள்
நஞ்சால்;
உள்
-
உள்ளம்;
நஞ்சு
-
1) விடம்;
2) நைந்து
(உள்
நைந்து -
மனம்
உருகி);
(சம்பந்தர்
தேவாரம் -
3.97.5 - "...பெற்றிகொள்
பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவ ரருவினை யிலரே"
- நஞ்சு
-
நைந்து,
மனம்
குழைந்து.
நஞ்சு
-
போலி)
அம்மையும்
அப்பனும் ஆனவன் -
அம்மையப்பன்;
அன்பர்கட்கு
அம்மையும் ஆவான் துணை -
பக்தர்களுக்கு
இனி வரும் பிறவியிலும் துணை
ஆவான்;
(சம்பந்தர்
தேவாரம் -
3.22.6 - தும்மல்
இருமல்...
அம்மையினும்
துணை அஞ்செழுத்துமே)
கண்டத்து
அம் மையும் உண் நஞ்சால் உண்டானது
-
(அவனுடைய)
கழுத்தில்
இருக்கும் அந்தக் கருநிறமும்
(தேவர்கள்
வேண்ட)
உண்ட
ஆலகால விடத்தால் உண்டானது.
ஓயாது
அடி போற்றி உள் நஞ்சால் உண்டே
இங்கு உய்வு -
சதா
அவனது திருவடியைப் போற்றி
உள்ளம் உருகினால்,
உய்வு
பெறலாம்.
---------------------2007-07-24
3.6.22) கற்பனை - அந்தன் - மடக்கு
-------------------------------------------------
கற்பனை கல்லால்கீழ்க் கற்பிக்கும் முக்கணனைக்
கற்பனை என்றுரைப்பார் காணாரே கற்பனை
அந்தன் எனவாக்கும் ஆணவம்! தாள்தொழ
அந்தன் இடரும்போம் அங்கு.
கற்பனை
-
1) போதனை;
கல்வி;
2) இல்லாததை
இருப்பதாக எண்ணுவது;
3) கற்பன்+ஐ
கற்பன்
-
கல்வியுள்ளவன்;
ஐ
-
இரண்டாம்
வேற்றுமை உருபு;
அந்தன்
-
1) அறிவில்லாதன்;
குருடன்;
2) எமன்;
கற்பனை
கல்லால்கீழ்க் கற்பிக்கும்
முக்கணனைக் கற்பனை என்று
உரைப்பார் காணாரே -
சனகாதியருக்கு
ஞானத்தைக் கல்லால மரத்தின்கீழ்ப்
போதித்த முக்கண்ணனை இல்லை
என்று உரைப்பவர்களால் காண
இயலாது.
கற்பனை
அந்தன் எனவாக்கும் ஆணவம் -
படித்தவனையும்
ஆணவம் குருடன் ஆக்கும்;
தாள்
தொழ அந்தன் இடரும் போம் அங்கு
-
ஈசன்
திருவடியை வணங்கினால் எமபயமும்
நீங்கும்;
---------------------2007-07-24
3.6.23) திரையடை - ஒற்றி - மடக்கு
-------------------------------------------------
திரையடை நாள்வரும்ஊர் சேர்ந்தழவுன் ஆட்டத்
திரையடை நாள்வரும்; சிந்தி! திரையடை
ஒற்றி தனில்நெஞ்சே, ஓர்பங்கில் பார்வதி
ஒற்றி உறைஇறையை ஓது!
திரை
-
1) சுருக்கம்;
20 திரைச்சீலை(curtain);
3) அலை/கடல்;
அடைதல்
-
எய்துதல்;
கிட்டுதல்;
அடைத்தல்
-
மூடுதல்;
ஒற்றி
-
திருஒற்றியூர்;
ஒற்றுதல்
-
பொருந்துதல்;
ஒன்றிற்படும்படி
சேர்த்தல்;
தழுவுதல்;
ஒற்றி
-
ஒன்றாகி;
ஒன்றுபட்டு;
(அப்பர்
தேவாரம் -
5.24.1 - ஒற்றி
யூரும் ஒளிமதி பாம்பினை)
ஓதுதல்
-
பாடுதல்;
திரை
அடை நாள் வரும் -
(தோல்)
சுருக்கம்
அடையும் காலம் வரும்;
(மூப்பு
வந்துவிடும்);
ஊர்
சேர்ந்து அழ உன் ஆட்டத் திரை
அடை நாள் வரும் -
சுற்றமும்
ஊரும் கூடி அழும்படி ((எமன்
வரவால் இந்த உலக மேடையில்)
உன்
ஆட்டம் ஆகித் திரையை மூடும்
காலம் வரும்;
சிந்தி
நெஞ்சே -
மனமே!
எண்ணிப்
பார்!
திரை
அடை ஒற்றிதனில் ஓர் பங்கில்
பார்வதி ஒற்றி உறை இறையை ஓது
-
கடல்அலை
அடைகின்ற திருஒற்றியூரில்
ஒரு பங்காக உமையம்மை பொருந்தி
இருக்கும் இறைவனைப் பாடு!
---------------------2007-07-31
3.6.24) மஞ்சளை - பூசி - மடக்கு
-------------------------------------------------
மஞ்சளை மாகயிலை மன்னனைப் பாடாது
மஞ்சளை மங்கையே! வந்திடுவாய்! மஞ்சளைப்
பூசி மடுவிற் புகுந்தாடிப் பொன்னடியைப்
பூசி! வினைஅற்றுப் போம்.
மஞ்சு
-
1) மேகம்;
2) கட்டில்;
அளைதல்
-
தழுவுதல்;
கலத்தல்;
துழாவுதல்;
மா
-
அழகிய;
சிறந்த;
பெருமை;
பூசுதல்
-
தடவுதல்;
மடு
-
நீர்நிலை;
ஆடுதல்
-
குளித்தல்;
பூசித்தல்
-
பூசை
செய்தல்;
(குறிப்பு:
திருவெம்பாவையை
ஒட்டிய கருத்து).
மஞ்சு
அளை மா கயிலை மன்னனைப் பாடாது
மஞ்சு அளை மங்கையே!
- மேகம்
தழுவும் அழகிய கயிலை மலையில்
உறையும் அரசனாகிய சிவபெருமானைப்
பாடாமல்,
கட்டிலைத்
தழுவும் (உறங்கும்)
பெண்ணே!
மஞ்சளைப்
பூசி மடுவில் புகுந்(து)
ஆடிப்
பொன் அடியைப் பூசி!
- மஞ்சளை
(உடலில்)
பூசி,
நீர்நிலையில்
குளித்து,
(அவனுடைய)
பொன்
போன்ற திருவடிகளைப் பூசை
செய்!
(அப்படிச்
செய்தால்)
வினைகள்
அழிந்து போகும்.
---------------------2007-09-29
3.6.25) விண்டு - மதுவார் - மடக்கு
-------------------------------------------------
விண்டு தொழநீள் வியன்தழலைப் போற்றவினை
விண்டு விடும்நெஞ்சே மென்மலர்கள் விண்டு
மதுவார் சிறைவண்டு வந்தறையும் தில்லை
மதுவார் சடையன்தாள் வாழ்த்து.
பதம்
பிரித்து:
விண்டு
தொழ நீள் வியன் தழலைப் போற்ற
வினை
விண்டு
விடும்!
நெஞ்சே!
மென்
மலர்கள் விண்டு,
மது
ஆர் சிறை வண்டு வந்து அறையும்
தில்லை
மது,
வார்
சடையன் தாள் வாழ்த்து.
விண்டு
-
1) திருமால்;
2) நீங்கி;
3) மலர்ந்து;
(விள்ளுதல்
-
நீங்குதல்;
மலர்தல்;
சொல்லுதல்);
மதுவார்
=
மது
+
ஆர்
/
மது
+
வார்;
மது
-
1) தேன்;
2) அமுதம்;
ஆர்தல்
-
1) உண்ணுதல்;
நிறைதல்;
பொருந்துதல்;
அணிதல்;
வார்தல்
-
1) நெடுமையாதல்;
2) ஒழுகுதல்/சொரிதல்;
சிறை
-
இறகு;
தில்லை
மது -
தில்லையில்
உள்ள அமுதம்/தேன்
-
கூத்தப்பிரான்.
(அப்பர்
தேவாரம் -
திருமுறை
4.39.1
- "குண்டனாய்ச்
சமண ரோடே ...திருவையாறு
அமர்ந்த தேனே...");
வார்
சடை -
நீண்ட
சடை;
மது
ஆர் சடை -
தேன்
(மலர்கள்)
பொருந்திய
சடை;
மது
வார் சடை -
(அப்பர்
தேவாரம் 5.85.1
- மட்டுவார்
குழலாள்...);
தில்லை
மதுவார் சடையன் -
தில்லை
மது,
வார்
சடையன் /
தில்லை
மது ஆர் சடையன்;
விண்டு
தொழ நீள் வியன் தழலைப் போற்ற
-
விஷ்ணு
(அடி
தேடிக் காணாது)
வணங்குமாறு
ஓங்கிய பெரிய சோதியைத்
துதித்தால்;
வினை
விண்டு விடும் -
வினை
நீங்கிவிடும்;
நெஞ்சே
-
(அதனால்)
மனமே!
மென்
மலர்கள் விண்டு -
மென்மையான்
மலர்கள் மலர்ந்து;
மது
ஆர் சிறை வண்டு வந்து அறையும்
-
தேன்
உண்ணும்,
சிறகுகளை
உடைய வண்டுகள் வந்து ரீங்காரம்
செய்யும்;
தில்லை
மது வார் சடையன் தாள் வாழ்த்து
-
தில்லையில்
உறையும் தேன்/அமுதம்
ஆன,
நீண்ட
சடையை உடைய,
சிவன்
திருவடியை வணங்கு;
(--அல்லது--
தில்லையில்
உறையும்,
இன்பத்
தேன் சொரியும்,
சடை
உடைய சிவன் திருவடியை வணங்கு)
(--அல்லது--
தில்லையில்
உறையும்,
தேன்
பொருந்திய மலர்களை அணிந்த
சடை உடைய சிவன் திருவடியை
வணங்கு);
(பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
திருமுறை
12.242:
- "மன்றுள்
ஆடு மதுவின் நசையாலே மறைச்சுரும்பு
அறை புறத்தின் மருங்கே ...");
---------------அன்போடு,
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment