04.72 – கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை)
2014-08-06
கடம்பந்துறை (இக்காலத்தில் - கடம்பர்கோயில் - குளித்தலை. )
–---------------------------------------------------------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்....");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா ");
1)
மயலுற்றிரு நிலமீதினில் வாடும்மட நெஞ்சே
புயலொத்திருள் கண்டத்தினன் பொடிபூசிய மார்பன்
கயிலைக்கிறை உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
வெயிலொத்தெரி வினையாயின விடுமேசுகம் மிகுமே.
மயல்
- மயக்கம்;
அறியாமை;
இருநிலம்
- பூமி
(Wide world, vast expanse of earth);
மீதினில்
- இத்தகைய
பிரயோகத்தைத் திருப்புகழிலும்
காணலாம். "ஆலப்
பணி மீதினில் மாசு அறும்
ஆழிக்கு இடையே துயில் மாதவன்";
("ஏலப்பனி
நீரணி மாதர்கள்" -
திருப்புகழ்
- மதுரை);
புயல்
- மேகம்;
பொடி
- திருநீறு;
கயிலைக்கு
இறை - திருக்கயிலைக்கு
இறைவன்; (அப்பர்
தேவாரம் - 5.66.1 - "ஓத
மார்கட லின்விட முண்டவன் பூத
நாயகன் பொற்கயி லைக்கிறை");
கருதுதல்
- எண்ணுதல்;
மதித்தல்;
விரும்புதல்;
வெயில்
ஒத்து எரி வினை ஆயின விடுமே
- வெயில்
போலச் சுட்டெரிக்கும் தீவினைகள்
நீங்கும்;
2)
எண்மீறிய நசையால்தினம் இடருற்றிடும் நெஞ்சே
தண்மாநதி வெண்மாமதி சடைமேலணி தலைவன்
கண்மூன்றினன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
மண்மீதினி வாராநிலை வந்தெய்திடும் திடனே.
எண்
மீறிய நசையால் - எண்ணற்ற,
அளவு
கடந்த ஆசைகளால்; (எண்
- Bound, limit; வரையறை);
(மீறுதல்
- மேற்போதல்
- To go beyond, exceed); (நசை
- ஆசை);
தண்
மா நதி - குளிர்ந்த
பெரிய ஆறு - கங்கை;
வெண்
மா மதி - வெண்மையான
அழகிய சந்திரன்;
திடன்
- திடம்
- உறுதி;
நிச்சயம்;
(சம்பந்தர்
தேவாரம் - 1.125.2 - "படரொளி
சடையினன் ... சிவபுர
மடையநம் இடர்கெடு முயர்கதி
பெறுவது திடனே.");
3)
துணையற்றிடர்த் தொடரால்மிகத் துவளும்மட நெஞ்சே
இணையற்றவன் எங்குந்திரி எயில்மூன்றவை எரியக்
கணைதொட்டவன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
விணையெட்டிய மலைபோல்வினை விடுமேசுகம் மிகுமே.
இடர்த்தொடர்
- துன்பத்தொடர்;
துவளுதல்
- வாடுதல்;
வருந்துதல்;
இணையற்றவன்
- ஒப்பில்லாதவன்;
எயில்
மூன்று - முப்புரங்கள்;
விணை
எட்டிய - விண்ணை
எட்டிய - வானளாவிய;
(விணை
- விண்ணை
என்பதன் இடைக்குறை விகாரம்);
4)
இறையேனுமென் உரைகேள்மட நெஞ்சேஎதிர் இல்லான்
நறையார்மலர்க் கொன்றைச்சடை நம்பன்கடல் நஞ்சுண்
கறையார்மிட றுடையான்பதி கடம்பந்துறை கருதாய்
பறையாவினை பகலோன்வரப் பனிபோல்விடும் திடனே.
இறையேனும்
- சற்றேனும்;
எதிர்
இல்லான் - ஒப்பற்றவன்;
(எதிர்
- ஒப்பு
);
நறை
ஆர் மலர்க்கொன்றை -
தேன்
பொருந்திய கொன்றைமலர்;
நம்பன்
- சிவன்
திருநாமங்களுள் ஒன்று -
விரும்பத்தக்கவன்;
கடல்
நஞ்சு உண் கறை ஆர் மிடறு உடையான்
- கடல்விடத்தை
உண்ட கறை பொருந்திய கண்டத்தை
உடையவன்; (சம்பந்தர்
தேவாரம் - 3.49.10 - "...
நஞ்சுண்
கண்டன் நமச்சி வாயவே");
பறையா
வினை பகலோன் வரப் பனிபோல்
விடும் - அழியா
வினைகள் எல்லாம் சூரியனைக்
கண்ட பனிபோல் ஒழியும்.
(பறைதல்
- அழிதல்);
5)
நிலையாததை நேசித்திடும் நெஞ்சேநிழல் மழுவன்
மலையான்மகள் ஒருபங்கினன் மணிமார்பினில் நூலன்
கலைமான்கரன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
மலைபோலுள பழவல்வினை மாயும்திரு வருமே.
நிலையாததை
நேசித்திடும் நெஞ்சே -
நிலையற்றதையே
மிகவும் ஓம்புகின்ற மனமே;
(நிலையற்றது
= உடல்,
பொருள்,
உலகவாழ்வு
இத்யாதி);
நிழல்
மழுவன் - ஒளி
திகழும் மழுவை ஏந்தியவன்;
மணி
மார்பினில் நூலன் -
அழகிய
மார்பில் முப்புரிநூல்
அணிந்தவன்;
கலைமான்
கரன் - கலைமானைக்
கையில் ஏந்தியவன்;
திரு
- செல்வம்;
நன்மை;
6)
சுற்றத்தினர் காவும்படி துஞ்சாமுனம் நெஞ்சே
ஒற்றைச்சின விடையூர்தியன் உமைகோன்நதி உலவும்
கற்றைச்சடை உடையான்பதி கடம்பந்துறை கருதாய்
பற்றித்தொடர் பழவல்வினை பறையும்திரு வருமே.
சுற்றத்தினர்
காவும்படி துஞ்சாமுனம் -
உறவினர்கள்
தோளிற் சுமந்துசெல்லும்படி
உயிர்போவதன் முன்னமே;
(காவுதல்
- தோளிற்
சுமத்தல்); (துஞ்சுதல்
- இறத்தல்);
ஒற்றைச்
சின விடை ஊர்தியன் -
ஒப்பற்ற,
சினக்கின்ற
இடபத்தை வாகனமாக உடையவன்;
பறையும்
- அழியும்;
7)உண்டிங்குய ஒருநல்வழி உணரென்மட நெஞ்சே
பெண்டங்கிய பாகத்தினன் பிறைசூடிய பெருமான்
கண்டங்கிய நுதலான்பதி கடம்பந்துறை கருதாய்
மண்டங்கிட வைக்கும்வினை மாயும்திரு வருமே.
பதம்
பிரித்து:
உண்டு
இங்கு உ[ய்]ய
ஒரு நல்வழி; உணர்
என் மட நெஞ்சே;
பெண்
தங்கிய பாகத்தினன்,
பிறை
சூடிய பெருமான்,
கண்
தங்கிய நுதலான் பதி கடம்பந்துறை
கருதாய்;
மண்
தங்கிட வைக்கும் வினை மாயும்;
திரு
வருமே.
மண்
தங்கிட வைக்கும் வினை மாயும்
- இப்பூமியில்
ஓயாமல் பிறவிகளைத் தரும்
வினை அழியும்;
8)
நனிநாள்பல நினைவால்மிக நலியும்மட நெஞ்சே
முனிநால்வருக் கறம்சொன்னவன் முடிபத்தினன் பாடக்
கனிவோடருள் செய்தான்பதி கடம்பந்துறை கருதாய்
இனிவாடுதல் செய்யும்வினை இல்லாநிலை தானே.
நனி
நாள் - பல
நாள்கள்;
முனி
நால்வருக்கு அறம் சொன்னவன்
- சனகாதியருக்கு
மறைப்பொருளை உபதேசித்த
தட்சிணாமூர்த்தி;
முடி
பத்தினன் - பத்துத்தலைகள்
உடைய இராவணன்;
9)
சும்மாநிதம் துரிசேநினை தொழில்மேவிய நெஞ்சே
அம்மாலயன் அறியாவணம் அழலாகிய ஐயன்
கைம்மாவுரி போர்த்தான்பதி கடம்பந்துறை கருதாய்
வெம்மாவினைப் பகையாயின விடுமேதிரு வருமே.
சும்மா
- பயனின்றி;
அடிக்கடி;
துரிசு
- குற்றம்;
மேவிய
- விரும்பிய;
அம்
மால் அயன் - அந்தத்
திருமாலும் பிரமனும்;
கைம்மா
உரி - யானைத்தோல்;
வெம்
மா வினைப்பகை ஆயின விடுமே -
கொடிய
பெரிய வினைப்பகை எல்லாம்
நீங்கும்;
10)
நட்டப்பெரு மானைத்தொழ நண்ணாதவர் சொல்லும்
வெட்டிச்சொலை விட்டுத்தினம் மிகவேத்திடு வார்க்குக்
கட்டிக்கரும் பொத்தான்பதி கடம்பந்துறை கருதாய்
ஒட்டித்தொடர் உறுதீவினை ஓயும்திரு உறுமே.
நட்டப்
பெருமான் - நடராஜன்;
(நட்டம்
- கூத்து);
நண்ணுதல்
- அடைதல்;
வெட்டிச்சொலை
- வெட்டிச்சொல்லை;
(வெட்டிச்சொல்
- வெட்டிப்பேச்சு
- வீண்
வார்த்தை);
கட்டிக்கரும்பு
- கருப்பங்கட்டி
/ கருப்புக்கட்டி
- வெல்லம்;
தினம்
மிக ஏத்திடுவார்க்குக்
கட்டிக்கரும்பு ஒத்தான் -
தினமும்
மிகவும் துதிக்கும் அன்பர்களுக்கு
வெல்லம் போல் இனிமை பயப்பவன்;
உறு
தீவினை - மிகுந்த
பாவங்கள்;
திரு
உறும் - செல்வம்/நன்மை
வந்தடையும்;
(அப்பர்
தேவாரம் - 4.31.4 -
"பெரும்புலர்
காலை மூழ்கிப் பித்தர்க்குப்
பத்த ராகி
அரும்பொடு
மலர்கள் கொண்டாங் கார்வத்தை
யுள்ளே வைத்து
விரும்பிநல்
விளக்குத் தூபம் விதியினா
லிடவல் லார்க்குக்
கரும்பினிற்
கட்டி போல்வார் கடவூர்வீ
ரட்ட னாரே.");
11)
அருமாமணி மார்க்கண்டரை அடைகூற்றினைச் செற்ற
பெருமானணி யாகப்பணி பிறைசூடிய இறைவன்
கருமாமணி கண்டன்பதி கடம்பந்துறை கருதாய்
மருவாமுனை வினையாயின மறையாப்புகழ் வருமே.
அரு
மா மணி மார்க்கண்டரை அடை
கூற்றினைச் செற்ற பெருமான்
- அரிய
சிறந்த மணி போன்ற மார்க்கண்டேயரை
நெருங்கிய காலனை அழித்த
பெருமான்; (செறுதல்
- அழித்தல்);
அணியாகப்
பணி பிறை சூடிய இறைவன் -
ஆபரணமாகப்
பாம்பையும் பிறைச்சந்திரனையும்
அணிந்த கடவுள்;
கரு
மா மணி கண்டன் பதி கடம்பந்துறை
கருதாய் - கரிய
அழகிய மணியைக் கண்டத்தில்
உடைய சிவன் உறையும் தலமான
திருக்கடம்பந்துறையைக்
கருதுவாயாக;
மருவா
முனை வினை ஆயின - முன்னை
வினைகள் எல்லாம் நெருங்கமாட்டா;
(மருவுதல்
- நெருங்குதல்);
மறையாப்
புகழ் வருமே - அழியாத
புகழ் வரும்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை) - கடம்பவனேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=83
-------------------
No comments:
Post a Comment