Sunday, August 31, 2025

N.050 - மாணிக்க வாசகர் துதி - வரம்பில் கருணையன்

2018-07-16

N.050 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2018

----------------

(வெண்பா)


வரம்பில் கருணையன் வந்தியின்பிட் டுண்டு

பிரம்படி பெற்றபெரும் பித்தன் - பரம்பரன்

சீர்பாடு வாதவூர்த் தேசிகனார் செங்கமலம்

நேர்பாதம் நெஞ்சே நினை.


வரம்பு இல் கருணையன் - அளவற்ற தயை உடையவனும்;

வந்தியின் பிட்டு உண்டு பிரம்படி பெற்ற பெரும்-பித்தன் - மதுரையில் வந்தி தந்த பிட்டை உண்டு பிரம்பால் அடி வாங்கிய பேரருளாளனுமான;

பரம்பரன் சீர் பாடு - மேலான சிவபெருமானது புகழைப் பாடியருளிய;

வாதவூர்த் தேசிகனார் செங்கமலம் நேர் பாதம் நெஞ்சே நினை - திருவாதவூரில் அவதரித்த குருவான மாணிக்கவாசகரது செந்தாமரையை ஒத்த திருவடியை, மனமே, நினைவாயாக;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment