04.16 – அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
2013-10-09
அரதைப் பெரும்பாழி (இக்காலத்தில் 'அரித்துவாரமங்கலம்')
----------------------------------
(கலிவிருத்தம் - 'மா தேமா புளிமா புளிமாங்காய்' - என்ற வாய்பாடு);
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")
1)
சுண்ண நீற்றன் சுடலை தனிலாடி
கண்ணிற் றீயன் கடலின் விடமுண்ட
அண்ணல் மேவும் அரதைப் பெரும்பாழி
நண்ணு வாரை நலியா வினைதானே.
சுண்ண
நீற்றன் -
திருநீற்றைப்
பூசியவன்;
சுடலைதனில்
ஆடி -
இடுகாட்டில்
ஆடுபவன்;
கண்ணிற்றீயன்
-
கண்ணில்
தீயன் -
கண்ணில்
நெருப்பை உடையவன்;
கடலின்
விடம் உண்ட அண்ணல்
-
ஆலகாலத்தை
உண்ட பெருமான்;
மேவும்
அரதைப் பெரும்பாழி நண்ணுவாரை
நலியா வினைதானே -
அப்பெருமான்
உறையும் அரதைப்பெரும்பாழியை
(அரித்துவாரமங்கலத்தை)
அடைந்து
தொழும் பக்தர்களை வினைகள்
வருத்தமாட்டா;
2)
தையல் பங்கன் சலம்வெண் மதியோடு
பைகொள் பாம்பைப் படர்செஞ் சடைவைத்த
ஐயன் மேவும் அரதைப் பெரும்பாழி
கைகள் கூப்பித் தொழுவார் கவலாரே.
தையல்
பங்கன் -
உமைபங்கன்;
சலம்
வெண் மதியோடு பைகொள்
பாம்பைப் படர் செஞ்சடை
வைத்த ஐயன் -
கங்கை,
வெண்திங்கள்
இவற்றோடு படம் உடைய பாம்பையும்
படரும் சடைமேல் சூடிய தலைவன்;
கவலார்
-
மனம்
வருந்தமாட்டார்கள்;
(கவல்தல்
-
மனம்வருந்துதல்);
3)
நீறு பூசி நிழலார் மழுவாளன்
ஏற தேறும் இறைவன் இருங்கங்கை
ஆறு சூடி அரதைப் பெரும்பாழி
கூறு வார்க்குக் குறையில் நிலைதானே.
நீறு
பூசி -
திருநீற்றைப்
பூசியவன்;
நிழல்
ஆர் மழுவாளன் -
ஒளி
வீசும் மழுவை ஏந்தியவன்;
ஏறுஅது
ஏறும் இறைவன் -
இடபவாகனன்;
இரும்
கங்கை ஆறு சூடி -
பெரிய
கங்கையாற்றைச் சூடியவன்;
அரதைப்
பெரும்பாழி கூறுவார்க்குக்
குறை இல் நிலைதானே
-
அரதைப்பெரும்பாழியை
(அரித்துவாரமங்கலத்தை)
ஏத்தும்
பக்தர்களது குறைகள் தீரும்;
4)
மஞ்சு லாவும் மலையான் மகள்பங்கன்
அஞ்சி வந்த அமரர்க் கருள்கண்டன்
அஞ்சு ரும்பார் அரதைப் பெரும்பாழி
நெஞ்சில் வைத்தார்க் கிடரில் நிலைதானே
மஞ்சு
உலாவும் மலையான் மகள்
பங்கன் -
மேகம்
உலவும் இமயமலைக்கு மன்னன்
மகளான பார்வதியை ஒரு பங்கில்
உடையவன்;
அஞ்சி
வந்த அமரர்க்கு அருள்
கண்டன் -
தேவர்களுக்கு
அபயம் அளித்த நீலகண்டன்;
அஞ்சுரும்பார்
-
அம்
சுரும்பு ஆர் -
அழகிய
வண்டுகள் ஒலிக்கின்ற;
இடர்
இல் நிலை -
துன்பம்
இல்லாத நிலை;
5)
குரவம் கொன்றை குளிர்வெண் பிறைசூடும்
குரவன் ஏற்றுக் கொடியன் அரைநாணா
அரவம் ஆர்த்தான் அரதைப் பெரும்பாழி
பரவ வீடும் பழைய வினைதானே.
குரவம்
-
குரா
மலர்;
குரவன்
-
குரு;
ஆசிரியன்;
தலைவன்;
ஏற்றுக்
கொடியன் -
இடபக்கொடி
உடையவன்;
ஆர்த்தான்
-
கட்டியவன்;
பிணித்தவன்;
பரவுதல்
-
புகழ்தல்;
வீடும்
-
அழியும்;
6)
காலன் மாளக் கழலால் உதைபெம்மான்
சூல பாணி தொழுத சுரருக்கா
ஆல முண்டான் அரதைப் பெரும்பாழிச்
சீலன் நாமம் தினமும் நினைநெஞ்சே.
சுரருக்கா
-
தேவர்களுக்காக;
7)
கத்து கின்ற கடலின் விடமுண்ட
பித்தன் அத்தி பிளிற உரிசெய்த
அத்தன் மேவும் அரதைப் பெரும்பாழி
பத்தி யோடு பரவத் திருவாமே.
அத்தி
பிளிற உரிசெய்த அத்தன்
-
யானை
பிளிற அதன் தோலை உரித்தவன்,
நம்
தந்தை;
8)
பன்றிக் கொம்பை அணியும் பரமேட்டி
குன்றி டந்தான் குலையார் முடிபத்தும்
அன்ற டர்த்தார் அரதைப் பெரும்பாழிச்
சென்று போற்றச் சிதையும் வினைதானே.
*
திருமாலாகிய
பன்றியினது வெண்மையான கொம்பை
அணிந்தவன்.
இதனை
இத்தலவரலாற்றில் காண்க.
பன்றிக்
கொம்பை அணியும் பரமேட்டி
-
(சம்பந்தர்
தேவாரம் -
1.52.9 - ".... கேழல்வெண்கொம்
பணிந்தபெம்மான் ....");
(பரமேட்டி
-
பரம்பொருள்
);
குன்று
இடந்தான் குலை ஆர் முடி பத்தும்
அன்று அடர்த்தார் -
கயிலையைப்
பெயர்த்த இராவணனின் குலை
போல் இருக்கும் பத்துத்
தலைகளையும் அன்று நெரித்தவர்;
அரதைப்
பெரும்பாழிச் சென்று போற்ற
-
அரதைப்
பெரும்பாழியிற் சென்று
வழிபட்டால்;
(இலக்கணக்
குறிப்பு:
ஏழாம்
வேற்றுமைத்தொகையில் பொதுவாக
வலி மிகும்.
ஏழாம்
வேற்றுமை உருபுகள் -
இல்,
உள்,
இடம்,
பின்,
கண்,
பால்,
கீழ்,
மேல்
முதலியன.
இவ்வுருபு
தொக்கு வருவது ஏழாம் வேற்றுமைத்தொகை;
உதாரணம்
-
அப்பர்
தேவாரம் -
5.62.2 - "தேவனைப்
புத்தூர்ச் சென்றுகண்
டுய்ந்தெனே"
- தேவனைப்
புத்தூரிலே சென்று கண்டு
உய்ந்தேன்);
சிதையும்
வினைதானே -
வினைகள்
அழியும்;
(சிதைதல்
-
கெடுதல்;
அழிதல்);
9)
கொண்டல் வண்ணன் குளிர்தா மரைமேலான்
பண்டு தேடிப் பரவு சுடரானை
அண்டர் கோனை அரதைப் பெரும்பாழிக்
கண்டு போற்றக் கழலும் வினைதானே.
கொண்டல்
வண்ணன் -
மேகவண்ணன்
-
திருமாலும்;
குளிர்
தாமரை மேலான் -
குளிர்ந்த
தாமரைமேல் இருப்பவன் -
பிரமனும்;
பண்டு
தேடிப் பரவு சுடரானை -
முன்பு
அடிமுடி தேடிக் காணாராய்த்
துதித்த சோதியை;
(பரவுதல்
-
துதித்தல்;
புகழ்தல்);
அண்டர்
கோனை -
தேவர்கள்
தலைவனை;
அரதைப்
பெரும்பாழிக் கண்டு போற்ற
-
ஏழாம்
வேற்றுமைத் தொகை -
அரதைப்
பெரும்பாழியிற் கண்டு தொழ;
கழலும்
வினைதானே -
வினைகள்
நீங்கும்;
(கழல்தல்
-
நீங்குதல்
);
10)
கட்டு ரைக்கும் கயவர் அவர்சொல்லை
விட்டு வம்மின் மிகவும் நலமாமே
அட்ட மூர்த்தி அரதைப் பெரும்பாழி
நட்டன் நாமம் நவிலும் அடியார்க்கே.
கட்டுரைக்கும்
-
பொய்யுரை
பேசும்;
(கட்டு
-
பொய்யுரை);
(சம்பந்தர்
தேவாரம் -
2.119.10 - "தட்டிடுக்கி
யுறிதூக்கி யகையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும்
");
கயவர்
-
கீழோர்;
விட்டு
வம்மின் -
நீங்கி
வாருங்கள்;
நட்டன்
-
நடம்
செய்பவன்;
நவில்தல்
-
சொல்லுதல்;
மிகவும்
நலம் ஆமே -
இச்சொற்றொடரை
இடைநிலைத்தீவகம் ஆக இருபக்கமும்
இயைத்துப் பொருள்கொள்ளலாம்.
("....விட்டு
வம்மின் மிகவும் நலமாமே";
"மிகவும்
நலமாமே ....
நாமம்
நவிலும் அடியார்க்கே");
இலக்கணக்
குறிப்பு:
இடைநிலைத்தீவகம்:
(Rhetoric)
Literally a lamp in the centre illuminating all around, applied to
denote a figure of speech in which a word used in the middle of a
sentence goes to amplify the meanings of words in various parts of
the same;
11)
மாவி டத்தை மணியா அணியீசன்
ஏவி டுத்தவ் வெயில்கள் எரிசெய்தான்
ஆவி ருப்பன் அரதைப் பெரும்பாழிச்
சேவிப் பார்க்குத் திருவார் நிலைதானே.
மா
விடத்தை மணியா அணி ஈசன் -
பெரிய
நஞ்சை நீலமணியாக மிடற்றில்
அணியும் இறைவன்;
ஏ
விடுத்து அவ்வெயில்கள்
எரிசெய்தான் -
அம்பைச்
செலுத்தி அந்த முப்புரங்களை
எரித்தவன்;
(ஏ
– அம்பு);
(எயில்
-
கோட்டை);
ஆவிருப்பன்
-
இடபத்தை
ஊர்தியாக விரும்பியவன் (ஆ
விருப்பன்);
இடபத்தின்மேல்
வீற்றிருப்பவன் (ஆ
இருப்பன்);
(ஆ
-
இடபம்;
பசு);
(இருத்தல்
-
வீற்றிருத்தல்);
அரதைப்
பெரும்பாழிச் சேவிப்பார்க்குத்
திரு ஆர் நிலைதானே.
- அரதைப்
பெரும்பாழியில் வணங்குபவர்க்குச்
செல்வம்(/நன்மை)
நிறையும்
நிலை ஆகும்.
(சேவித்தல்
-
வணங்குதல்);
(ஆர்தல்
-
பொருந்துதல்;
நிறைதல்);
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம் - 'மா தேமா புளிமா புளிமாங்காய்' - என்ற வாய்பாடு;
இந்த வாய்பாட்டு அமைப்பால், 2-3-4 சீர்களிடையே வெண்டளை அமையும். கட்டளை அடிகளும் அமையும்.
இவ்வமைப்புச் சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்" - என்று தொடங்கும் திருப்புன்கூர்ப் பதிகப் பாடல்களின் அமைப்பை ஒத்தது.
(அப்பர் தேவாரத்தில் உள்ள திருக்குறுந்தொகைப் பாடல்களில் 2-3-4 சீர்களிடையே வெண்டளையும் கட்டளை அடிகளும் அமையுமாயினும் அவற்றில் 2-3-4 சீர்கள் வேறு அமைப்புகளிலும் அமையக் காணலாம்)
2) அரதைப் பெரும்பாழி - இக்காலத்தில் 'அரித்துவாரமங்கலம்' என்ற பெயரில் வழங்குகின்றது - பாதாளேஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=292
----------- --------------
No comments:
Post a Comment