Thursday, April 21, 2022

06.04.011 – திருநாவுக்கரசர் துதி - இருள் நீங்க

06.04.011 – திருநாவுக்கரசர் துதி - இருள் நீங்க

2010-05-08

6.4.11) திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2010 (May 7/8)

----------------------------------

1) --- (வஞ்சி விருத்தம் - காய் மா மா - வாய்பாடு) ---

இருள்நீங்க, இருளால் விளையும்

மருள்நீங்க, மதியார் சடையன்

அருள்ஓங்க, மறவேல் மனமே

திருநாவுக் கரசர் கழலே.


இருள் - அறியாமை; ஆணவம்;

மருள் - மயக்கம்;

மதி ஆர் சடையன் - திங்களைச் சடைமேல் அணிந்த பெருமான்;

மறவேல் - மறவாதே;

கழல் - திருவடி;


2) --- (நேரிசை வெண்பா) ---

வினைக்கடலில் மூழ்க விரையும்கல் நெஞ்சே,

தினைத்தனையும் தேவாரம் செப்பு; - கனக்கின்ற

கல்லும் மிதக்கக் கரையடைந்த நாவரசர்

சொல்லும் அடியும் துணை.


தினைத்தனையும் - தினை அளவாவது - சிறிது அளவேனும்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment