04.10 – பூவாளூர்
2013-09-04
பூவாளூர் (இத்தலம் லால்குடிக்கு அருகு உள்ளது )
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்")
1)
கானாறு கணையெய்த காமனுடல் பொடிசெய்தாய்
வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்துகந்தாய்
ஊனாறு சிரமேந்தீ உன்னடியேற் கருள்புரியாய்
பூநாறு பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
கான்
-
மணம்;
வாசனை;
நாறுதல்
-
மணம்
வீசுதல்;
வானாறு
-
வான்
ஆறு -
கங்கை;
வார்தல்
-
நீள்தல்;
ஏந்தீ
-
ஏந்தியே
-
ஏந்தியவனே
என்ற விளி;
கான்
நாறு கணை எய்த காமன் உடல் பொடி
செய்தாய் -
மணம்
வீசும் மலர்க்கணையை எய்த
மன்மதன் உடலை எரித்துச்
சாம்பலாக்கியவனே;
வானாறு
மதித்துண்டம் வார்சடையில்
வைத்து உகந்தாய் -
கங்கையையும்
பிறைச்சந்திரனையும் நீண்ட
சடையில் சூடி மகிழ்ந்தவனே;
ஊன்
நாறு சிரம் ஏந்தீ;
உன்
அடியேற்கு அருள்புரியாய்
-
புலால்
நாற்றம் வீசும் பிரமன் தலையை
ஏந்தியவனே;
உன்
பக்தனான எனக்கு அருள்புரிவாயாக;
பூ
நாறு பொழில் ஆரும் பூவாளுர்
மேயவனே -
பூக்கள்
மணம் வீசும் சோலைகள் பொருந்திய
பூவாளூர் என்ற தலத்தில்
எழுந்தருளியிருப்பவனே.
2)
நற்றவனே நாளுமுனை நம்பியடி பணிவார்கட்
குற்றவனே ஊர்விடையொன் றுகந்தேறும் கொற்றவனே
சொற்றமிழால் துணையடியே துதிப்பேற்கும் அருள்புரியாய்
புற்றரவா பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
நம்புதல்
-
விரும்புதல்;
உற்றவன்
-
உற்ற
துணையாக இருப்பவன்;
கொற்றவன்
-
அரசன்;
சொற்றமிழ்
-
சொல்
+
தமிழ்;
துணையடி
-
இரு
திருவடிகள்;
துதிப்பேற்கும்
-
துதிக்கின்ற
அடியேனுக்கும்;
புற்றரவா
-
புற்றில்
வாழும் தன்மை உடைய அரவத்தை
அணிந்தவனே;
3)
பண்ணியலும் பாடலுக்கு மிழலைதனில் படியருள்வாய்
தண்ணியலும் சந்திரனைச் சடைவைத்தாய் அடிபரவில்
பண்ணியவல் வினைதீர்ப்பாய் பணிந்தேற்குப் பரிந்தருளாய்
புண்ணியனே பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
*
அடி-1
திருவீழிமிழலையில்
சம்பந்த்ருக்கும் அப்பருக்கும்
தினமும் படிக்காசு அருளியதைச்
சுட்டியது.
தண்
-
குளிர்ச்சி;
பரவில்
-
பரவினால்;
துதித்தால்;
பணிந்தேற்கு
-
பணிந்து
தொழும் எனக்கு;
பரிதல்
-
இரங்குதல்;
4)
முன்னிடையாய் முடிவானாய் மூவாத முக்கண்ணா
மின்னிடையாள் பங்கினனே வெள்விடையாய் மழுப்படையாய்
என்னுடையாய் என்றுன்னை ஏத்தலல்லால் மற்றறியேன்
புன்சடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
முன்
இடை ஆய் முடிவு ஆனாய் -
முதல்,
நடு
ஆகி முடிவு ஆனவனே;
மூவாத
முக்கண்ணா -
என்றும்
இளமையோடு இருக்கும் முக்கண்ணனே;
மின்
இடையாள் பங்கினனே -
மின்னற்கொடி
போல் நுண்ணிய இடையை உடைய
உமையம்மையை ஒரு பாகமாக
மகிழ்ந்தவனே;
வெள்
விடையாய் -
வெள்ளை
இடபத்தை ஊர்தியாக உடையவனே;
மழுப்படையாய்
-
மழுவாயுதத்தை
ஏந்தியவனே;
என்
உடையாய் என்று உன்னை ஏத்தல்
அல்லால் மற்று அறியேன் -
'என்
சுவாமீ '
என்று
உன்னைத் துதித்தல் அல்லாமல்
வேறு ஒன்றும் அறியேன்;
புன்சடையாய்
பொழிலாரும் பூவாளுர் மேயவனே
-
செஞ்சடை
உடையவனே;
சோலைகள்
பொருந்திய பூவாளூர் என்ற
தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.
(அருள்புரிவாயாக).
5)
துரிசடையா நெஞ்சத்தார் துதிசெய்து மகிழ்கின்ற
பரிசுடையாய் பாரிடங்கள் முழவார்க்கப் பல்பிணங்கள்
எரிசுடலை யிடையாடீ இணையடியை மறவேனே
புரிசடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
துரிசு
-
குற்றம்;
பரிசு
-
குணம்;
பெருமை;
பாரிடம்
-
பூதம்;
முழவு
ஆர்க்க -
முழவுகளை
ஒலிக்க;
பல்பிணங்கள்
எரி சுடலையிடை ஆடீ -
பல
பிணங்கள் எரியும் சுடலையில்
ஆடுபவனே;
புரிசடையாய்
-
முறுக்கிய
சடையை உடையவனே;
6)
கற்சிலையைக் கையேந்திக் கணையொன்றால் புரமெரித்த
அற்புதனே தொழுமிரதிக் கருள்புரிந்தாய் உன்னிரண்டு
நற்பதமே நாடிவந்தேன் நரைவிடையாய் நஞ்சுண்ணும்
பொற்புடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
கற்சிலை
-
கல்
+
சிலை
-
மேருமலையாகிய
வில்;
தொழும்
இரதிக்கு அருள்புரிந்தாய்
-
தொழுத
இரதிக்கு இரங்கி மன்மதனுக்கு
உயிர்கொடுத்தவனே;
(இரதிக்கு
அருள்புரிந்த வரலாற்றைப்
பூவாளூர்த் தலபுராணத்திற்
காண்க).
பொற்பு
-
தன்மை;
7)
நதியணியும் நாதாஉன் நாமத்தை மறவேனே
துதியடியார்க் கணியாகித் துயர்துடைப்பாய் இரதிக்குப்
பதியவனை உயிர்ப்பித்த பரிவுடையாய் பழையவனே
புதியவனே பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
இரதிக்குப்
பதி -
மன்மதன்;
8)
வலியதனைக் கருதிவந்து மலையெடுத்த வாளரக்கன்
மெலியவொரு விரலூன்றி மிகவுமருள் புரிந்தவனே
கலியடையா வாறென்னைக் காத்தருளாய் கண்ணுதலே
புலியதளாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
வலி
அதனை -
தன்
வலிமையை;
வாள்
அரக்கன் -
கொடிய
இராவணன்;
(வாள்
-
கொடுமை);
மெலிதல்
-
வருந்துதல்;
கலி
-
துன்பம்;
புலி
அதளாய் -
புலித்தோலை
அணிந்தவனே;
(அதள்
-
தோல்);
9)
கருவமலி நெஞ்சினராய்க் கழலுச்சி காணமுயல்
இருவரறி தற்கரிய எரியானாய் இருள்கொண்ட
ஒருமிடறு திகழ்வோனே உனைப்பரவும் எனக்கருளாய்
பொருவிடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
கருவம்
மலி நெஞ்சினராய்க் கழல் உச்சி
காண முயல் இருவர் -
ஆணவத்தோடு
அடியும் முடியும் தேடிய
திருமாலும் பிரமனும்;
(கருவம்
-
கர்வம்,
செருக்கு);
(அப்பர்
தேவாரம் -
இலிங்கபுராணத்
திருக்குறுந்தொகை -
5.95.6 - "...தருக்கி
னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற் றாரங்
கிருவரே");
ஒரு
மிடறு -
ஒப்பற்ற
கண்டம்;
பரவுதல்
-
புகழ்தல்;
துதித்தல்;
பொருதல்
-
போர்செய்தல்;
10)
நள்ளார்கள் அரனடியை; நாக்கொண்டு பொய்யல்லால்
விள்ளார்கள்; அவர்பிதற்றும் வெற்றுரையைப் பொருளாகக்
கொள்ளார்கள் நன்மதியோர்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்
புள்ளார்பூம் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.
நள்ளார்கள்
-
விரும்பமாட்டார்கள்;
(நள்ளுதல்
-
நட்டல்
-
விரும்புதல்);
நாக்கொண்டு
-
நாக்கால்;
பொய்
அல்லால் -
பொய்யைத்
தவிர வேறு ஒன்றும்;
விள்ளார்கள்
-
சொல்லமாட்டார்கள்;
(விள்ளுதல்
-
சொல்லுதல்);
கொள்ளார்கள்
-
மதிக்கமாட்டார்கள்;
கொள்ளார்கள்
நன்மதியோர் கும்பிடுவார்
வினைதீர்ப்பான் -
"....கொள்ளார்கள்
நன்மதியோர்;
நன்மதியோர்
அரனடியைக் கும்பிடுவார்;
கும்பிடுவார்
வினைதீர்ப்பான்...."
என்றும்
பொருள்கொள்ளலாம்;
புள்
ஆர் பூம்பொழில் -
பறவைகள்
ஒலிக்கும் சோலைகள்;
11)
நாகமணி மார்பினனே நயந்துண்ட நஞ்சதனால்
மேகமணி கண்டத்தாய் வெற்பரையன் மங்கையொரு
பாகமணி ஆகத்தாய் பணிவார்க்குப் பரிவாய்முப்
போகமணி வயல்சூழ்ந்த பூவாளுர் மேயவனே.
பதம்
பிரித்து:
நாகம்
அணி மார்பினனே;
நயந்து
உண்ட நஞ்சு அதனால்
மேகம்
அணி கண்டத்தாய்;
வெற்பு
அரையன் மங்கை ஒரு
பாகம்
அணி ஆகத்தாய்;
பணிவார்க்குப்
பரிவாய்;
முப்
போகம்
அணி வயல் சூழ்ந்த பூவாளுர்
மேயவனே.
மேகமணி
கண்டத்தாய் -
மேக
மணி கண்டத்தாய் /
மேகம்
அணி கண்டத்தாய்;
(அப்பர்
தேவாரம் -
6.68.4 - "ஊன்கருவின்
உள்நின்ற சோதி யானை ...
கார்மேக
மிடற்றானை ...");
(திவ்வியப்பிரபந்தம்
-
பூதத்தாழ்வார்
-
இரண்டாம்
திருவந்தாதி -
#2267 - "...மெய்த்தவத்தால்
காண்பரிய மேகமணி வண்ணனையான்
எத்தவத்தால் காண்பன்கொல்
இன்று");
முப்போகமணி
வயல் -
முப்போகம்
அணி வயல் /
முப்போக
மணி வயல்;
பாம்பை
மாலையாக மார்பில் அணிந்தவனே;
விரும்பி
உண்ட விடத்தால் கழுத்தில்
மேகம்போல் கருமை திகழ்பவனே;
மலைமகளை
ஒரு பாகமாகக் கொண்ட திருமேனி
உடையவனே;
பணிகின்ற
பக்தர்களுக்கு இரங்குபவனே;
வருடத்திற்கு
மூன்று போகம் விளைச்சல்
திகழும் செழுமையான வயல்கள்
சூழ்ந்த பூவாளுர் என்ற தலத்தில்
எழுந்தருளியிருப்பவனே.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) பூவாளூர் - திருமூலநாதர் சுவாமி கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=2229
----------- --------------
No comments:
Post a Comment