Friday, June 17, 2022

06.04.015 – நின்றசீர் நெடுமாற நாயனார் துதி - கூனிலா

06.04.015 – நின்றசீர் நெடுமாற நாயனார் துதி - கூனிலா

2010-10-24

6.4.15) நின்றசீர் நெடுமாற நாயனார் துதி

-------------------------

(குறள்வெண் செந்துறை)


கூனிலாச் சூடுவான் சீரையே பாடுவார் காழியார்

கூனிலாக் கோலமே ஆயினான் கூடலாள் கோனுமே.


பதம் பிரித்து:

கூன் நிலாச் சூடுவான் சீரையே பாடுவார் காழியார்;

கூன் இலாக் கோலமே ஆயினான் கூடல் ஆள் கோனுமே.


கூன் - வளைவு; உடற்கூனல் (Hump on the back of the body);

கூன் நிலா - வளைந்த பிறை;

காழியார் - திருஞான சம்பந்தர்;

கூடல் ஆள் கோன் - மதுரையை ஆளும் அரசன்;


பிற்குறிப்புகள்:

1) குறள்வெண் செந்துறை - யாப்புக் குறிப்பு:

இரண்டு அடிகளாய் அளவு ஒத்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் சிறந்த உறுதிப் பொருள்களைப் பற்றி வருவது குறள்வெண்செந்துறை. இதனை "வெண் செந்துறை" என்றும் கூறுவது உண்டு.

2) பாண்டியன் கூன் நிமிர்ந்தது

2745 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 847

"எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்" என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது-அன்றே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment