04.58 - பொது
- "உமைபங்கன்
போற்றி"
2014-03-30
பொது
- (உமைபங்கன்
போற்றி)
----------------------------------
(சந்தக்
கலிவிருத்தம் - தானன
தானன தானன தானா)
(லிங்காஷ்டகம்
- "ப்ரஹ்ம
முராரி ஸுரார்சித லிங்கம்")
முற்குறிப்பு
- படிப்போர்
வசதி கருதிச் சில இடங்களில்
புணர்ச்சி பிரித்துக்
காட்டப்பட்டுள்ளது.
1)
காமன(து)
ஆகமெ
ரித்தனை போற்றி
சோமனை
அஞ்சடை ஏற்றினை போற்றி
சேமம
ளித்திடு சேவக போற்றி
கோமக
னேஉமை கூறின போற்றி.
பதம்
பிரித்து:
காமனது
ஆகம் எரித்தனை போற்றி;
சோமனை
அம் சடை ஏற்றினை போற்றி;
சேமம்
அளித்திடு சேவக போற்றி;
கோமகனே;
உமை
கூறின போற்றி.
* போற்றி
- வணக்கம்;
"நம"
என்ற
வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்;
காமனது
ஆகம் எரித்தனை -
மன்மதனது
உடலை எரித்தவனே; (ஆகம்
- உடல்);
(எரித்தனை
- எரித்தாய்
- எரித்தவனே);
சோமனை
அம் சடை ஏற்றினை -
சந்திரனை
அழகிய சடையின்மீது ஏற்றியவனே;
(சோமன்
- சந்திரன்);
(அம்
- அழகு);
சேமம்
அளித்திடு சேவக -
க்ஷேமம்
அளிக்கும் வீரனே;
(சேவகன்
- வீரன்);
கோமகனே,
உமை
கூறின - தலைவனே,
உமையை
ஒரு கூறாக உடையவனே;
(உமை
கூறினன் - உமையை
ஒரு கூறாக உடையவன் -
உமைபங்கன்);
(கூறின
– கூறினன் என்பதன் அண்மை
விளி); (சம்பந்தர்
தேவாரம் - 2.112.3 -
"மங்கைகூறினன்");
(எரித்தனை
போற்றி, ஏற்றினை
போற்றி, போன்ற
பிரயோக உதாரணம்:
திருவாசகம்
- போற்றித்திருவகவல்
- 8.4: அடி-86:
தாயே
ஆகி வளர்த்தனை போற்றி;
அடி-209:
கருங்குருவிக்கு
அன்று அருளினை போற்றி;
அடி-210:
இரும்புலன்
புலர இசைந்தனை போற்றி);
2)
காலனை
நெஞ்சிலு தைத்தனை போற்றி
பாலனை
வாழ்ந்திட வைத்தனை போற்றி
வேலனை
ஈன்றப ரம்பர போற்றி
கோலம
டக்கொடி கூறின போற்றி.
காலனை
நெஞ்சில் உதைத்தனை -
காலனை
மார்பில் உதைத்தவனே;
பாலனை
வாழ்ந்திட வைத்தனை -
மார்க்கண்டேயரை
வாழவைத்தவனே;
வேலனை
ஈன்ற பரம்பர - முருகனைப்
பெற்ற பரம்பரனே;
(பரம்பரன்
- மிக
மேலானவன்; முழுமுதற்கடவுள்);
கோல
மடக்கொடி கூறின -
அழகிய
இளம்கொடி போன்ற உமையை ஒரு
கூறாக உடையவனே;
3)
அன்றெரி
நஞ்சினை ஆர்ந்தனை போற்றி
அன்றினர்
ஏரெயில் அட்டனை போற்றி
மன்றினில்
ஆடிடு மன்னவ போற்றி
ஒன்றென
மாதொடு நின்றனை போற்றி.
பதம்
பிரித்து:
அன்று
எரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி;
அன்றினர்
ஏர் எயில் அட்டனை போற்றி;
மன்றினில்
ஆடிடும் மன்னவ போற்றி;
ஒன்று
என மாதொடு நின்றனை போற்றி.
அன்று
எரி நஞ்சினை ஆர்ந்தனை -
முன்பு
ஆலகால விடத்தை உண்டவனே;
(ஆர்தல்
– உண்ணுதல்);
அன்றினர்
ஏர்-எயில்
அட்டனை - பகைவர்களது
அழகிய கோட்டைகளை எரித்தவனே;
(அன்றினர்
- பகைவர்);
(ஏர்
எயில் - அழகிய
கோட்டைகள் - முப்புரங்கள்);
(அடுதல்
- எரித்தல்;
அழித்தல்);
மன்றினில்
ஆடிடும் மன்னவ -
அம்பலத்தில்
ஆடும் நடராஜனே;
ஒன்று
என மாதொடு நின்றனை -
உமையோடு
ஒன்றாகி நின்றவனே;
4)
வெற்புவி
லால்அரண் எய்தனை போற்றி
மற்புயம்
எட்டுடை வல்லவ போற்றி
இற்பலி
வெண்டலை ஏற்றனை போற்றி
அற்புத
னேஉமை பங்கின போற்றி.
பதம்
பிரித்து:
வெற்பு
விலால் அரண் எய்தனை போற்றி;
மற்புயம்
எட்டுடை வல்லவ போற்றி;
இல்
பலி வெண் தலை ஏற்றனை போற்றி;
அற்புதனே
உமைபங்கின போற்றி.
வெற்பு
விலால் அரண் எய்தனை -
மேருமலை
என்ற வில்லால் முப்புரங்களை
எய்தவனே; (அரண்
- கோட்டை);
(சம்பந்தர்
தேவாரம் - 1.135.10 - "பருவிலால்
எயில் எய்து பராய்த்துறை
மருவினான்");
மற்புயம்
எட்டுடை வல்லவ – வலிமைமிக்க
எட்டுத்-தோள்கள்
உடைய சமர்த்தனே;
(மற்புயம்
- மல்
+ புயம்);
(வல்லவன்
- வலிமையுடையவன்;
சமர்த்தன்);
(அப்பர்
தேவாரம் - 4.9.2 - "எண்தோள்
வீசிநின்றாடும் பிரான்");
இல்-பலி
வெண் தலை ஏற்றனை -
பல
இல்லங்களில் வெண்ணிற மண்டையோட்டில்
பிச்சை ஏற்றவனே;
அற்புதனே,
உமைபங்கின
- அற்புதனே,
உமைபங்கனே;
5)
விண்ணவர்
ஏத்திடு முக்கண போற்றி
தண்ணதி
பாய்தரு வேணிய போற்றி
எண்ணடி
யார்வினை தீர்த்தனை போற்றி
பெண்ணொரு
பங்கில மர்ந்தனை போற்றி;
விண்ணவர்
ஏத்திடும் முக்கண – தேவர்கள்
துதிக்கும் முக்கண்ணனே;
தண்-நதி
பாய்தரு வேணிய -
குளிர்ந்த
கங்கை பாயும் சடையினனே;
(தண்
நதி - குளிர்ந்த
கங்கை); (தரு
- ஒரு
துணைவினைச்சொல்);
(வேணி
- சடை);
எண்ணடியார்
வினை தீர்த்தனை -
உன்னை
நினையும் பக்தர்களது வினைகளைத்
தீர்த்தவனே; (எண்ணுதல்
- நினைதல்);
பெண்
ஒரு பங்கில் அமர்ந்தனை -
உமையை
ஒரு கூறாக விரும்பியவனே;
6)
வெள்விடை
ஏறிய வித்தக போற்றி
கள்விரி
கொன்றைய ணிந்தனை போற்றி
ஒள்ளெரி
வண்ணவு ருத்திர போற்றி
விள்ளரி
யாய்உமை கூறின போற்றி.
வெள்-விடை
ஏறிய வித்தக - வெண்ணிற
இடபத்தை வாகனமாக உடைய வித்தகனே;
(வித்தகன்
- சாமர்த்தியம்
உள்ளவன்; பேரறிவாளன்);
கள்
விரி கொன்றை அணிந்தனை -
தேன்
நிறைந்த கொன்றைப்பூவைச்
சூடியவனே; (கள்
- தேன்);
(விரிதல்
- மலர்தல்);
ஒள்-எரி
வண்ண உருத்திர -
ஒளிவீசும்
நெருப்புப் போன்ற செம்மேனியுடைய
உருத்திரனே; ( "ஒள்-எரி
வண்ண = தீவண்ணனே"
என்று
தனியாகவும் பொருள்கொள்ளலாம்);
விள்ளரியாய்
- விள்ள
அரியாய் (தொகுத்தல்
விகாரம்) - சொல்லற்கு
அரியவனே; (விள்ளுதல்
- சொல்லுதல்);
(சம்பந்தர்
தேவாரம் - 3.81.2 - "சொல்லரிய
தொண்டர் துதிசெய்ய");
உமை
கூறின – உமாதேவியை ஒரு கூறாக
உடையவனே;
7)
நாரண
னுக்கரி நல்கினை போற்றி
ஆரணம்
ஓதிய நாவின போற்றி
வாரண
ஈருரி போர்த்தனை போற்றி
பூரண
மாதொரு பங்கின போற்றி.
பதம்
பிரித்து:
நாரணனுக்கு
அரி நல்கினை போற்றி;
ஆரணம்
ஓதிய நாவின போற்றி;
வாரண
ஈருரி போர்த்தனை போற்றி;
பூரண;
மாது
ஒரு பங்கின போற்றி.
நாரணனுக்கு
அரி நல்கினை -
திருமாலுக்குச்
சக்கராயுதத்தை அருளியவனே;
(அரி
- சக்கரம்;
3. ஆயுதம்);
(விஷ்ணு
ஸஹஸ்ர-நாமத்தின்
தியான-ச்லோகத்தில்,
"அரி
நளின, கதா,
சங்க
பாணி:" என்னும்
சொற்றொடரில் வரும் "அரி"
சக்கரத்தைக்
குறிக்கும் ஸம்ஸ்க்ருதச்
சொல்); (நல்குதல்
- கொடுத்தல்);
ஆரணம்
ஓதிய நாவின - வேதங்களைப்
பாடியருளியவனே; (ஆரணம்
- வேதம்);
வாரண
ஈருரி போர்த்தனை -
ஆனையின்
உரித்த தோலைப் போர்த்தவனே;
(ஈர்த்தல்
- உரித்தல்);
(ஈர்
- ஈரம்;
பசுமை);
பூரண,
மாது
ஒரு பங்கின - பூரணனே,
உமை
ஒரு பங்கினனே;
8)
வாளவு
ணன்வலி வாட்டினை போற்றி
நீளவ
வன்தொழு நின்மல போற்றி
வாளவ
னுக்களி பண்பின போற்றி
கோளர
வாஉமை கூறின போற்றி.
பதம்
பிரித்து:
வாள்
அவுணன் வலி வாட்டினை போற்றி;
நீள
அவன் தொழு நின்மல போற்றி;
வாள்
அவனுக்கு அளி பண்பின போற்றி;
கோள்
அரவா, உமை
கூறின போற்றி.
வாள்
அவுணன் வலி வாட்டினை -
கொடிய
அரக்கனான இராவணனது வலிமையை
அழித்தவனே; (வாள்
- கொடிய);
(அவுணன்
- இங்கே,
அரக்கன்);
(வலி
- ஆற்றல்;
வலிமை);
(வாட்டுதல்
- கெடுத்தல்);
(அப்பர்
தேவாரம் - 5.74.10 - "வாளரக்கன்
வலி வாட்டினான் எறும்பியூர்மலை
எம்மிறை"); (திருமங்கையாழ்வார்
- திருநெடுந்தாண்டகம்
- 2079 - "தென்னிலங்கை
அரண் சிதறி அவுணன் மாளச்
சென்று");
நீள
அவன் தொழு நின்மல -
பன்னெடுங்காலம்
அவனால் தொழப்பெற்ற தூயனே;
(நீள
– நெடுங்காலமாக);
வாள்
அவனுக்கு அளி பண்பின – பின்பு
அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற
வாளை அருளியவனே; (பண்பு
- குணம்;
இயல்பு);
கோள்-அரவா,
உமை
கூறின - கொடிய
பாம்பை அணிந்தவனே,
உமைபங்கனே;
(கோள்
- கொடிய);
9)
மாலயன்
நேடவ ளர்ந்தனை போற்றி
ஆலம
துண்டமி டற்றின போற்றி
மூலமும்
அந்தமும் ஆயினை போற்றி
கோலவ
ணங்கொரு கூறின போற்றி.
பதம்
பிரித்து:
மால்
அயன் நேட வளர்ந்தனை போற்றி;
ஆலமது
உண்ட மிடற்றின போற்றி;
மூலமும்
அந்தமும் ஆயினை போற்றி;
கோல
அணங்கு ஒரு கூறின போற்றி.
மால்
அயன் நேட வளர்ந்தனை -
திருமால்
பிரமன் இவர்கள் தேடும்படி
ஓங்கியவனே; (நேடுதல்
- தேடுதல்);
(வளர்தல்
- ஓங்குதல்;
நீளுதல்);
ஆலம்
அது உண்ட மிடற்றின -
ஆலகாலத்தை
உண்ட கண்டனே - நீலகண்டனே;
(மிடறு
- கண்டம்);
மூலமும்
அந்தமும் ஆயினை -
முதலும்
முடிவும் ஆனவனே;
கோல
அணங்கு ஒரு கூறின -
அழகிய
உமையை ஒரு கூறாக உடையவனே;
10)
ஏசிடு
வார்க்கிலன் ஆயினை போற்றி
பேசிடு
வார்வினை தீர்த்தனை போற்றி
மாசில
னேமழு வாளின போற்றி
மாசிவை
வாமம கிழ்ந்தனை போற்றி.
பதம்
பிரித்து:
ஏசிடுவார்க்கு
இலன் ஆயினை போற்றி;
பேசிடுவார்
வினை தீர்த்தனை போற்றி;
மாசு
இலனே, மழுவாளின
போற்றி;
மா-சிவை
வாமம் மகிழ்ந்தனை போற்றி.
ஏசிடுவார்க்கு
இலன் ஆயினை -
இகழ்பவர்களுக்கு
அருள் இல்லாதவனே;
(ஏசுதல்
- இகழ்தல்);
பேசிடுவார்
வினை தீர்த்தனை -
போற்றும்
பக்தர்களது வினையைத் தீர்ப்பவனே;
(பேசுதல்
- துதித்தல்;
திருப்புகழைப்
பேசுதல்); (அப்பர்
தேவாரம் - 6.1.1 - "பெரும்பற்றப்
புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
பிறவா நாளே");
மாசு
இலனே, மழுவாளின
- குற்றமற்றவனே,
மழுவை
ஏந்தியவனே;
மா-சிவை
வாமம் மகிழ்ந்தனை -
அழகிய
உமையை இடப்பக்கம் கூறாக
விரும்பியவனே; (மா
- அழகு);
(சிவை
- பார்வதி);
11)
கொக்கிற
கும்புனை பிஞ்ஞக போற்றி
நக்கர
ணஞ்சுடு நாயக போற்றி
முக்கண
முப்புரி நூலின போற்றி
பக்கமு
மைக்களி பாங்கின போற்றி.
பதம்
பிரித்து:
கொக்கிறகும்
புனை பிஞ்ஞக போற்றி;
நக்கு
அரணம் சுடு நாயக போற்றி;
முக்கண,
முப்புரி
நூலின போற்றி;
பக்கம்
உமைக்கு அளி பாங்கின போற்றி.
கொக்கிறகும்
புனை பிஞ்ஞக - கொக்கிறகை
அணிந்த தலைக்கோலம் உடையவனே;
(பிஞ்ஞகன்
- தலைக்கோலம்
உடையவன்); (கொக்கிறகு
- 1. கொக்கிறகு
என்ற பூ; 2. கொக்குவடிவாய்
இருந்த குரண்டாசுரனை அழித்து,
அவன்
இறகைச் சிவபிரான் தலையில்
அணிந்தனன் என்பது புராண
வரலாறு); (அப்பர்
தேவாரம் - 6.39.2 - "கொக்கிறகு
சென்னி உடையான் கண்டாய்");
நக்கு
அரணம் சுடு நாயக -
சிரித்து
முப்புரங்களை எரித்த தலைவனே;
முக்கண,
முப்புரி
நூலின - முக்கண்ணனே,
பூணூல்
அணிந்தவனே;
பக்கம்
உமைக்கு அளி பாங்கின -
ஒரு
பக்கத்தை உமைக்கு அளித்தவனே;
(பாங்கு
- இயல்பு);
பிற்குறிப்பு
: யாப்புக்
குறிப்பு:
சந்தக்
கலிவிருத்தம் - தானன
தானன தானன தானா - என்ற
சந்தம்.
வடமொழியில்
இச்சந்தத்தை - தோதகம்
- दोधकम्
- என்ற
பெயரால் சுட்டுகின்றனர்.
குரு
- நெடில்
/ நெடில்+ஒற்று
/ குறில்+ஒற்று.
லகு
- குறில்
(ஒற்றுத்
தொடராதபோது).
அடி
ஈற்றில் வரும் லகுவும் குருவாகக்
கருதப்படும்.
வடமொழியில்
ஐகாரம் நெடில் (குரு)
என்று
கருதப்படினும், தமிழ்ப்
பாடலில் அலகிடும்போது ஐகாரக்
குறுக்கம் வரும் இடங்களில்
அது குறில் (லகு)
என்று
கொள்ளப்படும்.)
உதாரணம்:
- லிங்காஷ்டகம்
- "ப்ரஹ்ம
முராரி ஸுரார்சித லிங்கம்"
வி.
சுப்பிரமணியன்
-----------
--------------