01.02 - சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)
2007-11-02
திருச்சிராப்பள்ளி
எம்பெருமான்
சிராப்பள்ளிச்
சிவன்------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
1)
காப்பவன்; அடிதொழுது கரம்சேர்ப்பார் தமைக்கரையில்
சேர்ப்பவன்; திரிபுரங்கள் செந்தீயில் வேகஅம்பைக்
கோப்பவன்; தென்னிலங்கைக் கோன்செருக்கை விரலூன்றித்
தீர்ப்பவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(திரிபுரங்கள்
-
வினைத்தொகை
-
திரிகிற
புரங்கள் -
முப்புரங்கள்;
கோத்தல்
-
தொடுத்தல்;
இலங்கைக்
கோன் -
இராவணன்;
செருக்கு
-
ஆணவம்;
சிராப்பள்ளி
-
திருச்சிராப்பள்ளி;)
2)நெரித்தவன், மலையெடுக்க நினைத்தவனை; மன்மதனை
எரித்தவன், எரிவிடத்தை இமையவர்க்காக் கண்டத்தில்
தரித்தவன்; சடையில்நதி தடுத்தவன்;முப் புரம்எரியச்
சிரித்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
நெரித்தல்
-
நசுக்குதல்;
மலை
எடுக்க நினைத்தவன் -
கயிலையைப்
பெயர்க்க முயன்ற இராவணன்;
எரிவிடம்
-
வினைத்தொகை
-
எரி
விடம் -
எரிக்கும்
விஷம்;
இமையவர்
-
தேவர்கள்;
தரித்தல்
-
தாங்குதல்;
பொறுத்தல்;
அணிதல்;
சடையினதி
-
சடையில்
நதி -
கங்கை;
தடுத்தல்
-
அடைத்தல்;
தடை
செய்தல்;
நிறுத்திவைத்தல்;
அடக்குதல்;
தூயவன்; முதலாகித் தோற்றுபவன்; இங்கெல்லாம்
ஆயவன்; அடிபோற்றும் அன்பர்கட்(கு) அன்பனவன்;
மாயவன் மண்ணகழ்ந்தும் மலரடியைக் காணாத
தீயவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(முதல்
ஆகித் தோற்றுபவன் -
ஆதி
ஆகத் தான் இருந்து படைப்பவன்;
இங்கு
எல்லாம் ஆயவன் -
இப்பிரபஞ்சத்தில்
எல்லாம் ஆனவன்;
அன்பர்
-
பக்தர்;
அன்பர்கட்கு
-
அன்பர்களுக்கு;
மாயவன்
-
திருமால்;
விஷ்ணு;
மலர்
அடி -
உவமைத்
தொகை -
மலர்
போன்ற திருவடி;
தீயவன்
-
தீ
அவன் -
சோதியாக
நின்றவன்;)
தேயவன்; நடமாடித் தில்லைச்சிற் றம்பலத்தில்
மேயவன்; மண்ணுலகும் விண்ணுலகும் படைக்கின்ற
தாயவன்; அன்பருளன்; தருக்குடைய எல்லார்க்கும்
சேயவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(தே
-
தெய்வம்;
தேயவன்
-
தே
அவன் -
தெய்வம்
அவன்;
இலக்கணக்
குறிப்பு -
ஏ
+
உயிர்
வந்தால்,
இடையில்
உடம்படுமெய்யாக ய்/வ்
எதுவும் தோன்றும்.
நடம்
ஆடுதல் -
திருநடம்
செய்தல்;
மேயவன்
-
மேயான்;
உறைபவன்;
அன்பருளன்
-
அன்பர்
உள்ளத்தில் இருப்பவன்;
தருக்கு
-
கர்வம்;
செருக்கு;
ஆணவம்;
சேய்
-
தொலைவு;
தூரம்;
சேயவன்
-
தூரத்தில்
இருப்பவன்;)
தின்றவன் பாற்கடலில் திரண்டநஞ்சை; திரிபுரங்கள்
வென்றவன்; இருவரிடை விண்மண்ணைக் கடந்ததென
நின்றவன்; அடியவர்க்கா நிலவுலகில் தூதனெனச்
சென்றவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(இருவர்
-
திருமால்,
பிரமன்;
அடியவர்க்கா
நிலவுலகில் தூதன் எனச் சென்றவன்
-
சுந்தரருக்காகப்
பரவையாரிடம் தூது போனவன்;)
கொற்றவன்; துதித்துக்கை குவிக்கின்ற அன்பர்கட்(கு)
உற்றவன்; இடப்பக்கம் உமைநங்கை சேர்ந்திருக்கப்
பெற்றவன்; ஒருகோடி பேருடையான்; முப்புரங்கள்
செற்றவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(கொற்றவன்
-
அரசன்;
உற்றவன்
-
நண்பன்;
சுற்றத்தான்;
ஒரு
கோடி பேர் உடையான் -
எண்ணற்ற
திருநாமங்கள் உடையவன்;
செற்றவன்
-
அழித்தவன்;)
7)ஊர்பவன் ஓரெருதில்; ஓர்கின்ற அன்பருளம்
சேர்பவன்; சேவிப்பார் தீவினைகள் அத்தனையும்
தீர்பவன்; பிரமனது சிரத்தினிலே இடுபிச்சை
தேர்பவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(ஊர்தல்
-
ஏறுதல்
(mount);
ஏறிநடத்துதல்
(ride
a horse, drive a vehicle);
எருது
-
காளை;
ஓர்தல்
-
ஆராய்தல்;
நினைத்தல்;
தியானித்தல்;
அன்பர்
உளம் -
பக்தர்
உள்ளம்;
சேவித்தல்
-
வணங்குதல்;
தீர்பவன்
-
வினைத்தொகை
-
தீர்
பவன் -
தீர்க்கிற
பவன்;
பவன்
-
கடவுள்;
சிவன்;
தேர்தல்
-
கொள்ளுதல்
(acquire;
obtain); )
புகழ்ந்தவன் திருவடியைப் போற்றுபவர் மனத்தினிலே
நிகழ்ந்தவன்; இராவணனை நெரித்தவன்; அடிதேடி
அகழ்ந்தவன் அறியாத அளப்பரிய நெருப்பாகத்
திகழ்ந்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(புகழ்ந்தவன்
-
புகழ்ந்து
அவன்;
நிகழ்தல்
-
தங்குதல்;
அடிதேடி
அகழ்ந்தவன் -
திருமால்;
அளப்பு
-
அளத்தல்;
எல்லை;
அரிய
-
முடியாத;
இயலாத;
அருமையான;
(precious, dear, excellent, rare, difficult))
பாடியவன் மறைகளெலாம்; பலபூதம் பண்பாட
ஆடியவன்; அடிபோற்றும் அன்பரிடம் வரும்எமனைச்
சாடியவன்; தலைமாலை சூடியவன்; மால்அகழ்ந்து
தேடியவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(மறை
-
வேதம்;
பண்
-
இசை;
இராகம்;
அடி
போற்றும் அன்பர் -
இங்கே
மார்க்கண்டேயர்;
சாடுதல்
-
கொல்லுதல்;
கடிதல்;
மால்
அகழ்ந்து தேடியவன் -
விஷ்ணு
நிலத்தைத் தோண்டித் தேடியவன்
அவன்;)
ஒல்கிற அறநெறியை ஒவ்வாதென்(று) இருப்பவர்கள்
சொல்கிற மொழிகளெலாம் துறந்து,பழ வினைத்தொடரை
வெல்கிற நெறிஅறிவீர் விரும்படியார் தமைக்காக்கச்
செல்கிற எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
(ஒல்லுதல்
-
தகுதல்;
இயலுதல்;
("ஒல்லுகிற"
என்பதன்
இடைக்குறையாகக் கருதலாம்);
ஒவ்வுதல்
-
பொருந்துதல்;
ஒவ்வாது
-
பொருந்தாது;
துறந்து
-
நீங்கி;
கைவிட்டு;
விரும்பு
அடியார் -
வினைத்தொகை
-
விரும்புகிற
அடியார்;
அடியாரைக்
காக்கச் செல்வது -
தாயும்
ஆனவனாய்ச் சென்று மகப்பேற்றுக்கு
உதவியது,
மார்க்கண்டேயரைக்
காத்தது,
எனப்
பலவும் பொருந்தும்;)
நிறைந்தவன் உலகமெலாம்; நினையாதார்க்(கு) எட்டாது
மறைந்தவன்; இருவரிடை மாசுடராய் நின்றெல்லை
இறந்தவன்; மறைக்காட்டில் இன்தமிழைக் கேட்டுத்தாழ்
திறந்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!
மறைதல்
-
ஒளித்துகொள்ளுதல்;
இருவர்
இடை -
பிரமன்,
விஷ்ணு
இருவர் இடையே;
மா
சுடராய் -
பெரிய
சோதியாக;
எல்லை
-
வரம்பு
(Limit,
border, boundary); அளவை
(Measure,
extent);
இறத்தல்
-
கடத்தல்
(To
go beyond, transcend, pass over);
நின்று
எல்லை இறந்தவன் -
நின்று
எல்லை கடந்தவன்;
மறைக்காடு
-
வேதாரண்யம்;
இன்
தமிழ் -
இனிய
தமிழ் -
இங்கே
திருநாவுக்கரசர் பாடிய
தேவாரம்;
தாழ்
திறந்தவன் -
கோயில்
கதவைத் திறந்து அருளியவன்;
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பாடல்கள் "நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா".
இப்பாடல்கள் பொதுவாகக் காய்ச்சீர்களால் அமைந்தவை. இங்கே, அடிதோறும் முதற்சீர் 'விள'ச்சீராக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment