2017-12-25
P.421 - பேரூர்
---------------------------------
(நாலடித்
தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர்
தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு
நுதலானும்")
* (ம்)
- புணர்ச்சியில்
மகர-ஒற்றுக்
கெடும் இடம்;
1)
திருமலியும்
தமிழ்பாடிச் சேவித்தார்
இடர்தீர்ப்பான்,
அருமறையின்
பொருள்விரிக்க ஆலநிழல்
அமர்ந்தபிரான்,
கருமுகிலின்
வண்ணத்தைக் கண்டத்திற்
காட்டுமரன்,
பெருமதில்சூழ்ந்
தழகாரும் பேரூரெம் பெருமானே.
திரு
மலியும் தமிழ் பாடிச் சேவித்தார்
இடர் தீர்ப்பான் -
திரு
மிகுந்த தமிழ்ப்-பாமாலைகளைப்
பாடி வணங்கியவர் துன்பத்தைத்
தீர்ப்பவன்;
அருமறையின்
பொருள் விரிக்க ஆலநிழல்
அமர்ந்த பிரான் -
அரிய
வேதப்பொருளை உபதேசிக்கக்
கல்லால-மரத்தின்கீழ்
விரும்பி வீற்றிருந்த தலைவன்;
கருமுகிலின்
வண்ணத்தைக் கண்டத்தில்
காட்டும் அரன் - கரிய
மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில்
காட்டுகின்ற ஹரன்;
பெருமதில்
சூழ்ந்து அழகு ஆரும் பேரூர்
எம் பெருமானே - பெரிய
மதிலால் சூழப்பெற்று அழகு
மிகும் பேரூரில் உறையும்
எம்பெருமான்;
2)
போதையடி
இட்டுமிகப் போற்றிடுவார்
இடர்தீர்ப்பான்,
வாதையுறு
வானவர்கள் வாழவிடம் உண்டபிரான்,
சீத(ம்)மலி
கங்கைநதித் திரைமோது செஞ்சடையான்,
பேதையொரு
பங்கமரும் பேரூரெம் பெருமானே.
போதை
அடி இட்டு மிகப் போற்றிடுவார்
இடர் தீர்ப்பான் -
திருவடியில்
பூக்களைத் தூவி மிகவும் போற்றி
வணங்கும் பக்தர்களது துன்பத்தைத்
தீர்ப்பவன்; (போது
- பூ);
வாதையுறு
வானவர்கள் வாழ விடம் உண்ட
பிரான் - துன்புற்ற
தேவர்கள் வாழும் பொருட்டு
ஆலகாலத்தை உண்டருளிய தலைவன்;
(வாதை
- துன்பம்);
(உறுதல்
- அனுபவித்தல்);
சீத(ம்)மலி
கங்கைநதித் திரை மோது செஞ்சடையான்
- குளிர்ச்சி
மிகுந்த கங்கையாற்றின் அலைகள்
மோதுகின்ற சிவந்த சடையுடையவன்;
(திரை
- அ)லை;
பேதை
ஒரு பங்கு அமரும் பேரூர் எம்
பெருமானே - உமை
ஒரு பாகம் விரும்பும்,
பேரூரில்
உறையும் எம்பெருமான்;
(பேதை
- பெண்);
3)
அரியதமிழ்
பாடியடி அடைந்தார்தம்
இடர்தீர்ப்பான்,
திரியரணம்
மூன்றெய்யச் சிலையாக மலைவளைத்தான்,
வரியரவ
அரைநாணன், வார்சடைமேல்
மதிசூடி,
பெரியவிடை
ஒன்றேறும் பேரூரெம் பெருமானே.
திரி
அரணம் மூன்று எய்யச் சிலையாக
மலை வளைத்தான் -
எங்கும்
திரிந்த முப்புரங்களை எய்ய
மேருமலையை வில்லாக வளைத்தவன்;
வரி-அரவ
அரைநாணன் - வரியுடைய
பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
வார்-சடைமேல்
மதிசூடி - நீள்சடைமேல்
சந்திரனைச் சூடியவன்;
4)
பன்னியிரு
பாதமலர் பணிவார்தம் இடர்தீர்ப்பான்,
மின்னலென
முப்புரிநூல் மிளிர்மார்பில்
வெண்ணீற்றன்,
தன்னிகரில்
தலைவன்,முன்
தக்கன்செய் வேள்விசெற்றான்,
பின்னுசடைப்
பிறைசூடி, பேரூரெம்
பெருமானே.
பன்னுதல்
- புகழ்தல்;
பாடுதல்;
தன்
நிகர் இல் தலைவன் -
தனக்கு
எவ்வொப்பும் இல்லாத தலைவன்;
தக்கன்
செய் வேள்வி செற்றான் -
தக்கன்
செய்த வேள்வியை அழித்தவன்;
பின்னு-சடைப்
பிறைசூடி - பின்னுகின்ற
(முறுக்குண்ட)
சடையின்மேல்
பிறையை அணிந்தவன்;
5)
மறவாது
நாள்தோறும் வழிபடுவார்
இடர்தீர்ப்பான்,
இறவாது
மார்க்கண்டர் இருக்கநமன்
தனையுதைத்தான்,
மறையோது
திருநாவன், மலைமங்கை
மணவாளன்,
பிறவாத
பெருமையினான், பேரூரெம்
பெருமானே.
மறை
ஓது திருநாவன் -
வேதங்களைப்
பாடியருளியவன்;
6)
கடிமலரிட்
டடிவாழ்த்தும் காதலர்தம்
இடர்தீர்ப்பான்,
துடிபறைகள்
பலவார்க்கச் சுடலைதனில்
நடமாடி,
கடியவிடை
ஊர்தியினான், காமனைக்காய்
கண்ணுதலான்,
பிடிநடையாள்
ஒருபங்கன், பேரூரெம்
பெருமானே.
கடிமலர்
இட்டு அடிவாழ்த்தும் காதலர்தம்
இடர் தீர்ப்பான் -
வாசமலர்களைத்
தூவித் திருவடியை வழிபடும்
பக்தர்களது துன்பத்தைத்
தீர்ப்பவன்;
துடி
பறைகள் பல ஆர்க்கச் சுடலைதனில்
நடமாடி - உடுக்கை,
பறை
முதலிய வாத்தியங்கள் பல
ஒலிக்கச் சுடுகாட்டில்
கூத்தாடுபவன்; (ஆர்த்தல்
- ஒலித்தல்);
கடிய
விடை ஊர்தியினான் -
விரைந்து
செல்லும் இடபவாகனம் உடையவன்;
(கடி
- விரைவு);
காமனைக்
காய் கண்ணுதலான் -
மன்மதனை
எரித்த நெற்றிக்கண்ணன்;
(காய்தல்
- கோபித்தல்;
எரித்தல்);
பிடி-நடையாள்
ஒரு பங்கன் - பெண்யானை
போன்ற நடையை உடைய உமையைத்
திருமேனியில் ஒரு கூறாக
உடையவன்; (பிடி
- பெண்யானை);
பேரூர்
எம் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற எம் பெருமான்;
7)
அறைகழலை
அனுதினமும் அருச்சிப்பார்
இடர்தீர்ப்பான்,
மறைமுதல்வன்,
அந்தகனை
மாய்த்ததிரி சூலத்தன்,
கறையொளிரும்
கண்டத்தன், களிற்றுரிவை
போர்த்தபிரான்,
பிறைமதியைச்
சடைக்கணிந்த பேரூரெம் பெருமானே.
அறைகழலை
- ஒலிக்கின்ற
கழல் அணிந்த திருவடியை;
மறைமுதல்வன்
- வேதமுதல்வன்;
அந்தகனை
மாய்த்த திரிசூலத்தன் -
அந்தகாசுரனை
அழித்த சூலபாணி;
(அந்தகன்
- அந்தகாசுரன்);
கறை
ஒளிரும் கண்டத்தன் -
நீலகண்டன்;
களிற்று-உரிவை
போர்த்த பிரான் -
யானைத்தோலைப்
போர்த்த தலைவன்;
8)
நித்த(ம்)மலர்
தூவியடி நினைவார்தம்
இடர்தீர்ப்பான்,
பத்துமுடி
அரக்கனழப் பாதவிரல் ஊன்றியவன்,
மத்த(ம்)மதி
திகழ்முடிமேல் வாளரவும்
வைத்துகந்த
பித்தனெனும்
பேருடையான், பேரூரெம்
பெருமானே.
நித்தம்
மலர் தூவி அடி நினைவார்தம்
இடர் தீர்ப்பான் -
தினமும்
பூக்களைத் தூவித் திருவடியை
நினைந்து தொழும் பக்தர்களது
துன்பத்தைத் தீர்ப்பவன்;
பத்துமுடி
அரக்கன் அழப் பாதவிரல்
ஊன்றியவன் -
பத்துத்தலை
இராவணன் அழும்படி திருப்பாத-விரல்
ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்;
மத்தம்
மதி திகழ் முடிமேல் வாளரவும்
வைத்து உகந்த பித்தன் எனும்
பேர் உடையான் -
ஊமத்த-மலரும்
சந்திரனும் விளங்கும்
தலையின்மேல் கொடிய பாம்பையும்
தாங்கி மகிழ்பவன்,
பித்தன்
(பேரருளாளன்)
என்ற
பெயரை உடையவன்;
பேரூர்
எம் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற எம் பெருமான்;
9)
கண்ணிபல
புனைந்தேத்திக் கைதொழுவார்
இடர்தீர்ப்பான்,
மண்ணிடந்த
மாயவனும் வானிலுயர் மலரோனும்
நண்ணலரும்
சோதியினான், நால்வேதப்
பொருளானான்,
பெண்ணிடமாம்
பெற்றியினான், பேரூரெம்
பெருமானே.
கண்ணி
பல புனைந்து ஏத்திக்
கைதொழுவார் இடர் தீர்ப்பான்
- பல
மாலைகள் (பூமாலை
/ பாமாலை)
தொடுத்துத்
துதித்து வணங்கும் பக்தர்களது
துன்பத்தைத் தீர்ப்பவன்;
(கண்ணி
- தலையில்
அணியும் மாலைவகை;
சிலவகைப்
பாடல்களில் வரும் இரண்டடி
உள்ள பகுதி);
மண்
இடந்த மாயவனும் வானில் உயர்
மலரோனும் நண்ணல் அரும்
சோதியினான் - நிலத்தை
அகழ்ந்த திருமாலாலும் உயரப்
பறந்த பிரமனாலும் அடைவதற்கு
அரிய ஜோதி; (நண்ணல்
- நண்ணுதல்
- நெருங்குதல்);
நால்வேதப்-பொருள்
ஆனான் - நாள்வேதங்கள்
கூறும் மெய்ப்பொருள் ஆனவன்;
பெண்
இடம் ஆம் பெற்றியினான் -
உமையை
இடப்பாகத்தில் உடைய பண்பினன்;
பேரூர்
எம் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற எம் பெருமான்;
10)
நெற்றிமிசை
நீறணிந்து நினைவார்தம்
இடர்தீர்ப்பான்,
குற்ற(ம்)மிகு
மொழிபேசிக் கூட்டஞ்சேர்
கொள்கையினார்
சற்றுமறி
யாத்தலைவன், தண்மதிசேர்
தாழ்சடையன்,
பெற்றமிவர்
பெருமையினான், பேரூரெம்
பெருமானே.
நெற்றிமிசை
நீறு அணிந்து நினைவார்தம்
இடர் தீர்ப்பான் -
நெற்றியில்
திருநீற்றைப் பூசி எண்ணி
வழிபடும் பக்தர்களது துன்பத்தைத்
தீர்ப்பவன்;
குற்ற(ம்)மிகு
மொழி பேசிக் கூட்டம்
சேர் கொள்கையினார்
சற்றும் அறியாத்
தலைவன் - குற்றம்
மிகுந்த புன்மொழிகள் பேசிக்
கூட்டத்தைச் சேர்க்கும்
கொள்கை உடையவர்கள் அறியாத
தலைவன்;
தண்மதி
சேர் தாழ்சடையன் -
குளிர்ந்த
திங்களைத் தாழும் சடையில்
அணிந்தவன்;
பெற்றம்
இவர் பெருமையினான் -
இடபத்தின்மேல்
ஏறும் பெருமை உடையவன்;
(பெற்றம்
- எருது);
(இவர்தல்
- ஏறுதல்);
பேரூர்
எம் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற எம் பெருமான்;
11)
பண்தங்கு
பாடலினால் பரவிடுவார்
இடர்தீர்த்து
விண்தங்கு
வாழ்வளிப்பான்,
விரிசடைமேல்
வெண்பிறையன்,
கண்தங்கு
நெற்றியினாற் காமனைமுன்
காய்ந்தபிரான்,
பெண்தங்கு
மேனியினான், பேரூரெம்
பெருமானே.
பண்
தங்கு பாடலினால் பரவிடுவார்
இடர் தீர்த்து விண் தங்கு
வாழ்வு அளிப்பான் -
இனிய
இசை பொருந்திய பாமாலைகளால்
துதிக்கும் பக்தர்களது
துன்பத்தைத் தீர்த்து
அவர்களுக்குச் சிவலோக வாழ்வைத்
தருபவன் (/ தருவான்);
விரிசடைமேல்
வெண்பிறையன் - விரிந்த
சடைமேல் வெண்திங்களை அணிந்தவன்;
கண்
தங்கு நெற்றியினால் காமனை
முன் காய்ந்த பிரான் -
நெற்றிக்கண்ணால்
மன்மதனை முன்பு எரித்த தலைவன்;
பெண்
தங்கு மேனியினான் -
உமையொரு
பங்கன்;
பேரூர்
எம் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற எம் பெருமான்;
வி.
சுப்பிரமணியன்
-----------
--------------