Saturday, October 4, 2025

V.060 - செல்லும் இடமறியேன் - தனிப்பாடல்

2014-10-17

V.060 - செல்லும் இடமறியேன் - தனிப்பாடல்

----------------

(வெண்பா)


செல்லும் இடமறியேன்; செல்லும் தடமறியேன்;

அல்லும் பகலுமுன்பேர் அன்போடு - சொல்லும்

குணமறியேன்; பத்தர் கணமறியேன்; கூடும்

வணமறியேன்; சங்கரகா வந்து.


சென்றடையும் இடத்தை அறியமாட்டேன்; செல்லவேண்டிய வழியை அறியமாட்டேன்; இரவும் பகலும் உன் திருநாமத்தைப் பக்தியோடு சொல்லும் குணத்தை அறியமாட்டேன்; அடியார் திருக்கூட்டத்தையும் அறியமாட்டேன்; அவர்களைக் கூடும் வகையையும் அறியமாட்டேன்; சங்கரனே, நீயே இரக்கத்தோடு வந்து என்னைக் காத்தருள்க!


தடம் - வழி; பாதை;

பத்தர்-கணம் - அடியவர் திருக்கூட்டம்;

வண்ணம் - வகை - Way, manner, method;


வி. சுப்பிரமணியன்

----------- --------------